புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப் புகுந்துநின் றான்புகழ் வாய்இகழ் வாகிப் புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப் புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே.
|
1
|
தானே திசையொடு தேவரு மாய்நிற்கும் தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்கும் தானே கடல்மலை யாதியு மாய்நிற்கும் தானே உலகில் தலைவனு மாமே.
|
2
|
உடலாய் உயிராய் உலகம தாகிக் கடலாய்க் கார்முகில் நீர்பொழி வானாய் இடையாய் உலப்பிலி எங்குந்தா னாகி அடையாப் பெருவெளி அண்ணல்நின் றானே.
|
3
|
தானொரு காலந் தனிச்சுட ராய்நிற்கும் தானொரு கால்சண்ட மாருத மாய்நிற்கும் தானொரு காலந் தளிமழை யாய்நிற்கும் தானொரு காலந்தண் மாயனு மாமே.
|
4
|
அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும் இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும் முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும் அன்புற ஐந்தில் அமர்ந்துநின் றானே.
|
5
|
Go to top |
உற்று வனைவான் அவனே உலகினைப் பெற்று வனைவான் அவனே பிறவியைச் சுற்றிய சாலும் குடமுஞ் சிறுதூதை மற்றும் அவனே வனையவல் லானே.
|
6
|
உள்ளுயிர்ப் பாயுட லாகிநின் றான்நந்தி வெள்ளுயி ராகும் வெளியாய் விளங்கொளி உள்ளுயிர்க் கும்உணர் வேயுட லுட்பரம் தள்ளுயி ராம்வண்ணந் தாங்கிநின் றானே.
|
7
|
தாங்கருந் தன்மையும் தானவை பல்லுயிர் வாங்கிய காலத்தும் மாற்றோர் பிறிதில்லை ஓங்கி எழுமைக்கும் யோகாந்தம் அவ்வழி தாங்கிநின் றானும்அத் தாரணி தானே.
|
8
|
அணுகினுஞ் சேயவன் அங்கியிற் கூடி நணுகினும் ஞானக் கொழுந்தொன்றும் நல்கும் பணிகினும் பார்மிசைப் பல்லுயி ராகித் தணிகினும் மன்னுடல் அண்ணல்செய் வானே. 11,
|
9
|