திகைக்குரி யான்ஒரு தேவனை நாடும் வகைக்குரி யான்ஒரு வாதி யிருப்பின் பகைக்குரி யாரில்லை பார்மழை பெய்யும் அகக்குறை கேடில்லை அவ்வுல குக்கே.
|
1
|
கொண்ட குழியும் குலவரை யுச்சியும் அண்டரும் அண்டத் தமரரும் ஆதியும் எண்டிசை யோரும்வந் தென்கைத் தலத்திலும் உண்டெனில் யாம்இனி உய்ந்தொழிந் தோமே.
|
2
|
அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும் கொண்ட சராசர முற்றும் குணங்களும் பண்டை மறையும் படைப்பளிப் பாதியும் கண்ட சிவனுமென் கண்ணன்றி யில்லையே.
|
3
|
பெண்ணல்லன் ஆணல்லன் பேடல்லன் மூடத்துள் உண்ணின்ற சோதி ஒருவர்க் கறியொணாக் கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிடும் அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே.
|
4
|
இயங்கும் உலகினில் ஈசன் அடியார் மயங்கா வழிச்செல்வர் வானுல காள்வர் புயங்களும் எண்டிசை போதுபா தாளம் மயங்காப் பகிரண்டம் மாமுடி தானே.
|
5
|
Go to top |
அகம்படி கின்றநம் ஐயனை ஓரும் அகம்படி கண்டவர் அல்லலிற் சேரார் அகம்படி யுட்புக் கறிகின்ற நெஞ்சம் அகம்படி கண்டாம் அழிக்கலும் எட்டே.
|
6
|
கழிவும் முதலுமெங் காதற் றுணையும் அழிவும தாய்நின்ற ஆதிப் பிரானைப் பழியும் புகழும் படுபொருள் முற்றும் ஒழியுமென் ஆவி உழவுகொண் டானே.
|
7
|
என்தாயொ டென்னப்பன் ஏழேழ் பிறவியும் அன்றே சிவனுக் கெழுதிய ஆவணம் ஒன்றா யுலகம் படைத்தான் எழுதினான் நின்றான் முகில்வண்ணன் நேரெழுத் தாயே.
|
8
|
துணிந்தார் அகம்படி துன்னி உறையும் பணிந்தார் அகம்படி பாற்பட் டொழுகும் அணிந்தார் அகம்படி ஆதிப் பிரானைக் கணிந்தார் ஒருவர்க்குக் கைவிட லாமே.
|
9
|
தலைமிசை வானவர் தாழ்சடை நந்தி மிலைமிசை வைத்தனன் மெய்ப்பணி செய்யப் புலைமிசை நீங்கிய பொன்னுல காளும் பலமிசை செய்யும் படர்சடை யோனே.
|
10
|
Go to top |
அறியாப் பருவத் தரனடி யாரைக் குறியால் அறிந்தின்பங் கொண்ட தடிமை குறியார் சடைமுடி கூட்டி நடப்பார் மறியார் புனல்மூழ்க மாதவ மாமே.
|
11
|
அவன்பால் அணுகியே அன்புசெய் வார்கள் சிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லர் அவன்பால் அணுகியே நாடும் அடியார் இவன்பாற் பெருமை இலயம தாமே.
|
12
|
முன்னிருந் தார்முழு தெண்கணத் தேவர்கள் எண்ணிறந் தன்பால் வருவர் இருநிலத்து எண்ணிரு நாலு திசைஅந் தரம்ஒக்கப் பன்னிரு காதம் பதஞ்செய்யும் பாரே.
|
13
|
சிவயோகி ஞானி செறிந்தஅத் தேசம் அவயோக மின்றி அறிவோருண் டாகும் நவயோகம் கைகூடும் நல்லியல் காணும் பவயோக மின்றிப் பரகதி யாமே.
|
14
|
மேல்உண ரான்மிகு ஞாலம் படைத்தவன் மேல்உண ரான்மிகு ஞாலம் கடந்தவன் மேல்உண ரார்மிகு ஞாலத் தமரர்கள் மேல்உணர் வார்சிவன் மெய்யடி யார்களே. 15,
|
15
|
Go to top |