உடல்பொருள் ஆவி உதகத்தால் கொண்டு படர்வினைப் பற்றறப் பார்த்துக் கைவைத்து நொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாங்கிக் கடிய பிறப்பறக் காட்டினன் நந்தியே.
|
1
|
உயிரும் சரீரமும் ஒண்பொரு ளான வியலார் பரமும்பின் மேவும் பிராணன் செயலார் சிவமும்சிற் சத்திஆ திக்கே உயலார் குருபரன் உய்யக்கொண் டானே.
|
2
|
பச்சிம திக்கிலே வைச்சஆ சாரியன் `நிச்சலும் என்னை நினை`என்ற அப்பொருள் உச்சிக்குக் கீழது உள்நாக்கு மேலது வைச்ச பதம்இது வாய்திற வாதே.
|
3
|
பெட்டடித் தெங்கும் பிதற்றித் திரிவேனை ஒட்டடித் துள்ளமார் மாசெலாம் வாங்கிப்பின் தட்டொக்க மாறினன் தன்னையும் என்னையும் வட்டம தொத்தது வாணிபம் வாய்த்ததே.
|
4
|
தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாம் தலைவன் இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார் பிரிக்கின்ற விந்துப் பிணக்கறுத் தெல்லாம் கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண்ட டேனே.
|
5
|
Go to top |
கூடும் உடல்பொருள் ஆவிக் குறிக்கொண்டு நாடி அடிவைத் தருள்ஞான சத்தியால் பாடல் உடலினிற் பற்றற நீக்கியே கூடியே தான்அவ னாம்குறிக் கொண்டே.
|
6
|
கொண்டான் அடியேன் அடிமை குறிக்கொள்ள கொண்டான் உயிர்பொருள் காயக் குழாத்தினை கொண்டான் பலம்முற்றும் தந்தவன் கோடலால் கொண்டான் எனஒன்றும் கூறகி லேனே.
|
7
|
குறிக்கின்ற தேகமும் தேகியும் கூடில் நெறிக்கும் பிராணன் நிலைபெற்ற சீவன் பறிக்கின்ற காயத்தைப் பற்றிய நேர்மை பிறிக்க அறியாதார் பேயுடன் ஒப்பரே.
|
8
|
உணர்வுடை யார்கட் குலகமும் தோன்றும் உணர்வுடை யார்கட் குறுதுய ரில்லை உணர்வுடை யார்கள் உணர்ந்தஅக் காலம் உணர்வுட யார்கள் உணர்ந்துகண் டாரே.
|
9
|
காயப் பரத்தின் அலைந்து துரியத்துச் சால விரிந்து குவிந்து சகலத்தில் ஆயஅவ் ஆறா றடைந்து திரிந்தேற்குத் தூய அருள்தந்த நந்திக்கென் சொல்வதே.
|
10
|
Go to top |
நானென நீயென வேறில்லை நண்ணுதல் ஊனென ஊனுயி ரென்ன உடன்நின்று வானென வானவர் நின்று மனிதர்கள் தேனென இன்பம் திளைக்கின்ற வாறே.
|
11
|
அவனும் அவனும் அவனை அறியார் அவனை அறியில் அறிவானும் இல்லை அவனும் அவனும் அவனை அறியில் அவனும் அவனும் அவன்இவன் ஆமே.
|
12
|
நான்இது தான்என நின்றவன் நாடொறும் ஊன்இது தான்உயிர் போல்உணர் வான்உளன் வான்இரு மாமழை போற்பொழி வான்உளன் நான்இது வாம்பரன் நாதனும் ஆமே.
|
13
|
பெருந்தன்மைத் தான்என யான்என வேறாய் இருந்ததும் இல்லைஅ தீசன் அறியும் பொருந்தும் உடல்உயிர்போல் உண்மை மெய்யே திருந்தமுன் செய்கின்ற தேவர் பிரானே. 9,
|
14
|