ஏழு வளைகடல் எட்டுக் குலவரை ஆழும் விசும்பினில் அங்கி மழை வளி தாழும் இருநிலத் தன்மை யதுகண்டு வாழ நினைக்கில் அஃது ஆலயம் ஆமே.
|
1
|
ஆலிங் கனம்செய்து அகம்சுடச் சூலத்துச் சாலிங் கமைத்துத் தலைமை தவிர்த்தனர் கோலிங் கமைந்தபின் கூபப் பறவைகள் மாலிங்கு வைத்தது முன்பின் வழியே.
|
2
|
நின்றார் இருந்தார் கிடந்தார் எனல்இல்லாச் சென்றார்தம் சித்தமே மோன சமாதியாம் மன்றேயும் அங்கே மறைபொருள் ஒன்றுண்டு சென்றாங் கணைந்தவர் சேர்கின்ற வாறே.
|
3
|
காட்டும் குறியும் கடந்தஅக் காரணம் ஏட்டின் புறத்தில் எழுதிவைத் தென்பயன் கூட்டும் குருநந்தி கூட்டிடி னல்லதை யாட்டின் கழுத்தில் அதர்கிடந் தற்றே.
|
4
|
மறப்பது வாய்நின்ற மாயநன் நாடன் பிறப்பினை நீக்கிய பேரரு ளாளன் சிறப்புடை யான்திரு மங்கையும் தானும் உறக்கமில் போகத்(து) உறங்கிடுந் தானே.
|
5
|
Go to top |
துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி அரிய துரியம் அதன்மீது மூன்றாய் விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே உரைஇல் அனுபூ திகத்தில்உள் ளானே.
|
6
|
உருவிலி ஊன்இலி ஊனம்ஒன் றில்லி திருவிலி தீதிலி தேவர்க்கும் தேவன் பொருவிலி பூதப் படையுடை யாளி மருவிலி வந்தென் மனம்புகுந் தானே.
|
7
|
கண்டறி வார் இல்லைக் கயத்தின் நந்தியை எண்டிசை யோரும் `இறைவன்`என் றேத்துவர் அண்டங் கடந்த அளவிலா ஆனந்தம் தொண்டர் முகந்த துறைஅறி யோமே.
|
8
|
தற்பர மல்லன் சதாசிவன் றானல்லன் நிட்கள மல்லன் சகள நிலையல்லன் அற்புத மாகி அனுபவக் காமம்போல் கற்பனை யின்றிக் கலந்துநின் றானே.
|
9
|
முகத்தினிற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள் அகத்தினிற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம் மகட்குத்தன் தாய்தன் மணாளனோ டாடிய சுகத்தினைச் சொல்லெனில் சொல்லுமா றெங்ஙனே.
|
10
|
Go to top |
அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டுச் செப்பு பராபரம் சேரபர மும்விட்டுக் கப்புறு சொற்பதம் மாளக் கலந்தமை எப்படி அப்படி என்னும்அவ் வாறே.
|
11
|
கண்டார்க் கழகிது காஞ்சிரத் தின்பழம் தின்றார்க் கறியலாம் அப்பழத் தின்சுவை பெண்டான் நிரம்பி மடவிய ளானால் கொண்டான் அறிவன் குணம்பல தானே.
|
12
|
நந்தி யிருந்தான் நடுவுத் தெருவிலே சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன உந்தியி னுள்ளே உதித்தெழும் சோதியைப் புந்தி னாலே புணர்ந்துகொண் டேனே.
|
13
|
விதறு படாவண்ணம் வேறிருந் தாயந்து பதறு படாதே பழமறை பார்த்துக் கதறிய பாழைக் கடந்தந்தக் கற்பனை உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே.
|
14
|
வாடா மலர்புணை சேவடி வானவர் கூடார் அறநெறி நாடொறும் இன்புறச் சேடார் கமலச் செழுஞ்சுட ருட்சென்று நாடா அமுதுற நாடார் அமுதமே.
|
15
|
Go to top |
அதுக்கென் றிருவர் அமர்ந்தசொற் கேட்டும் பொதுக்கெனக் காமம் புலப்படு மாபோல் சதுக்கென்று வேறு சமைந்தாரக் காணின் மதுக்கொன்றைத் தாரான் வளந்தரும் அன்றே.
|
16
|
தானும் அழிந்து தனமும் அழிந்து ஊனும் அழிந்து உயிரும் அழிந்துடன் வானும் அழிந்து மனமும் அழிந்தபின் நானும் அழிந்தமை நானறி யேனே.
|
17
|
நிற்றல் இருத்தல் கிடத்தல் நடைஓடல் பெற்றுஅக் காலும் திருவருள் பேராமல் சற்றியல் ஞானம்தந்து ஆனந்தம் தங்கவே உற்ற பிறப்பற்று ஒளிர்ஞான நிட்டையே.
|
18
|
இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப் பொருளிற் பொருளாய்ப் பொருந்தஉள் ளாகி அருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கே உருளாத கல்மனம் உற்றுநின் றேனே.
|
19
|
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் பராபரம் ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் சிவகதி ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் உணர்வினை ஒன்றிநின் றேபல ஊழிகண் டேனே. 26,
|
20
|
Go to top |