போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தை தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி சாற்றுகின் றேன்அறை யோ சிவ யோகத்தை ஏற்றுகின் றேன்நம் பிரான்ஓர் எழுத்தே.
|
1
|
ஓரெழுத் தாலே உலகெங்கும் தானாகி ஈரெழுத் தாலே இசைந்தங் கிருவராய் மூவெழுத் தாலே முளைக்கின்ற சோதியை மாவெழுத் தாலே மயக்கம துற்றதே.
|
2
|
தேவர் உறைகின்ற சிற்றம் பலம்என்றும் தேவர் உறைகின்ற சிதம்பரம் என்றும் தேவர் உறைகின்ற திருவம் பலம்என்றும் தேவர் உறைகின்ற தென்பொது ஆமே.
|
3
|
ஆமேபொன் னம்பலம் அற்புதம் ஆனந்தம் ஆமே திருக்கூத் தனவரத தாண்டவம் ஆமே பிரளய மாகும்அத் தாண்டவம் ஆமேசங் காரத் தருந்தாண் டவங்களே.
|
4
|
தாண்டவ மான தனியெழுத் தோரெழுத்துத் தாண்டவ மான தனுக்கிர கத்தொழில் தாண்டவக் கூத்துத் தனிநின்ற தற்பரம் தாண்டவக் கூத்துத் தமனியந் தானே.
|
5
|
Go to top |
தானே பரஞ்சுடர் தத்துவ மாய்நிற்கும் தானே அகார உகாரம தாய்நிற்கும் தானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்குத் தானே தனக்குத் தராதலந் தானே.
|
6
|
தராதல மூலைக்குத் தற்பரம் மாபரன் தராதல வெப்பு நமவா சியஆம் தராதலம் சொல்லின் தான்வா சியஆம் தராதல யோகம் தயாவாசி ஆமே.
|
7
|
ஆமே சிவங்கள் அகார உகாரங்கள் ஆமே பரங்கள் அறியா இடம்என்ப ஆமே திருக்கூத் தடங்கிய சிற்பரம் ஆமே சிவகதி ஆனந்த மாமே.
|
8
|
ஆனந்தம் மூன்றும் அறிவிரண் டொன்றாகும் ஆனந்தம் சிவாய அறிவார் பலர்இல்லை ஆனந்த மோடும் அறியவல் லார்களுக்கு ஆனந்தக் கூத்தாய் அகப்படுந் தானே.
|
9
|
படுவ திரண்டு பலகலை வல்லார் படுகுவ தோங்கார பஞ்சாக் கரங்கள் படுவது சங்காரத் தாண்டவப் பத்தி படுவது கோணம் பரந்திடும் வாறே.
|
10
|
Go to top |
வாறே சதாசிவ மாறிலா ஆகமம் வாறே சிவகதி வண்துறை பின்னையும் வாறே திருக்கூத்தா கமவ சனங்கள் வாறே பொதுவாகும் மன்றின் அமலமே.
|
11
|
அமலம் பதிபசு பாசங்கள் ஆகமம் அமலம் திரோதாயி ஆகும்ஆ னந்தமாம் அமலஞ்சொல் ஆணவ மாம்மாயை காமியம் அமலம் திருக்கூத்தங் காமிடந் தானே.
|
12
|
தானே தனக்குத் தலைவியு மாய்நிற்கும் தானே தனக்குத் தனமலை யாய்நிற்கும் தானே தனக்குத் தனமய மாய்நிற்கும் தானே தனக்குத் தலைவனு மாமே.
|
13
|
தலைவனு மாய்நின்ற தற்பரக் கூத்தனைத் தலைவனு மாய்நின்ற சற்பாத் திரத்தைத் தலைவனு மாய்நின்ற தாதவிழ் ஞானத் தலைவனு மாய்நின்ற தாளிணை தானே.
|
14
|
இணையார் திருவடி எட்டெழுத் தாகும் இணையார் கழலிணை யீரைஞ்ச தாகும் இணையார் கழலிணை ஐம்பத்தொன் றாகும் இணையார் கழலிணை ஏழா யிரமே.
|
15
|
Go to top |
ஏழா யிரமாய் இருபதாய் முப்பதாய் ஏழா யிரத்தும் எழுகோடி தானாகி ஏழா யிரத்துயிர் எண்ணிலா மந்திரம் ஏழாய் இரண்டாய் இருக்கின்ற வாறே.
|
16
|
இருக்கின்ற மந்திரம் ஏழா யிரமாம் இருக்கின்ற மந்திரம் எத்திறம் இல்லை இருக்கின்ற மந்திரம் சிவன்திரு மேனி இருக்கின்ற மந்திரம் இவ்வண்ணந் தானே.
|
17
|
தானே தனக்குத் தகுநட்டந் தானாகும் தானே அகார உகாரம தாய்நிற்கும் தானேரீங் காரம்அத் தத்துவக் கூத்துக்குத் தானே உலகில் தனிநடந் தானே.
|
18
|
நடம்இரண் டொன்றே நளினமதாய் நிற்கும் நடம்இரண் டொன்றே நமன்செய்யுங் கூத்து நடம்இரண் டொன்றே நகைசெயா மந்திரம் நடம்சிவ லிங்கம் நலம்செம்பு பொன்னே.
|
19
|
செம்புபொன் னாகும் சிவாய நமஎன்னில் செம்புபொன் னாகத் திரண்டது சிற்பரம் செம்புபொன் னாகும் சிறீயும் கிரீயும்எனச் செம்புபொன் னான திருவம் பலமே.
|
20
|
Go to top |
திருவம் பலமாகச் சீர்ச்சக் கரத்தைத் திருவம் பலமாக ஈராறு கீறித் திருவம் பலமா இருபத்தஞ் சாக்கித் திருவம் பலமாச் செபிக்கின்ற வாறே.
|
21
|
வாறே சிவாய நமச்சிவா யந்நம வாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லை வாறே அருளால் வளர்கூத்துக் காணலாம் வாறே செபிக்கில் வருஞ்செம்பு பொன்னே.
|
22
|
பொன்னான மந்திரம் புகலவும் ஒண்ணாது பொன்னான மந்திரம் பொறிகிஞ் சுகத்தாகும் பொன்னான மந்திரம் புகைஉண்டு பூரிக்கில் பொன்னாகும் வல்லோர்க் குடம்புபொற் பாதமே.
|
23
|
பொற்பாதம் காணலால் புத்திரர் உண்டாகும் பொற்பாதத் தாணையே செம்புபொன் னாயிடும் பொற்பாதங் காணத் திருமேனி யாயிடும் பொற்பாதம் நன்னடஞ் சிந்தனை சொல்லுமே.
|
24
|
சொல்லும் ஒருகூட்டில் புக்குச் சுகிக்கலாம் நல்ல மடவாள் நயந்துட னேவரும் சொல்லினும் பாசச் சுடர்ப்பாம்பு நீங்கிடும் சொல்லும் திருக்கூத்தின் சூக்குமந் தானே.
|
25
|
Go to top |
சூக்குமம் எண்ணா யிரஞ்செபித் தால்உம் மேல் சூக்கும மான வழிஇடைக் காணலாம் சூக்கும மான வினையைக் கெடுக்கலாம் சூக்கும மான சிவனதா னந்தமே.
|
26
|
ஆனந்தம் ஆனந்தம் ஒன்றென் றறிந்திட ஆனந்தம் ஆஈஊ ஏஓம்என் றைந்திட ஆனந்தம் ஆனந்தம் அஞ்சும்அ தாயிடும் ஆனந்தம் ஆம்ஹிரீம் ஹம்க்ஷம்ஹாம் ஆகுமே.
|
27
|
மேனி யிரண்டும் விலங்காமல் மேற்கொள்ள மேனி யிரண்டும்மிக் கார்அவி காரியாம் மேனி யிரண்டும்ஊ ஆஈஏ ஓ என்னும் மேனி யிரண்டும்ஈ ஓஊஆ ஏகூத்தே.
|
28
|
கூத்தே சிவாய நமமசி யாயிடும் கூத்தே, ஈஊ ஆ ஏஓசி வாய நமஆயிடும் கூத்தேஇ, உஅஎ ஒசி வயநம வாயிடும் கூத்தேஈ, ஊஆஏ ஓநமசி வாயகோள் ஒன்றுமே.
|
29
|
ஒன்றிரண் டாடஓர் ஒன்றும் உடனாட ஒன்றினில் மூன்றாட ஓரேழும் ஒத்தாட ஒன்றினா லாடஓர் ஒன்ப துடனாட மன்றினில் ஆடினான் மாணிக்கத் கூத்தே. 2,
|
30
|
Go to top |