மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம் திண்ணென் றிருந்தது தீவினை சேர்ந்தது விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல் எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே.
|
1
|
பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால் உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செல்லார் கொண்ட விரதமும் ஞானமும் அல்லது மண்டி அவருடன் வழிநட வாதே.
|
2
|
ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச் சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.
|
3
|
காலும் இரண்டு முகட்டலக் கொன்றுள பாலுள் பருங்கழி முப்பத்தி ரண்டுள மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன் போலுயிர் மீளப் புகஅறி யாதே.
|
4
|
சீக்கை விளைந்தது செய்வினை மூட்டிற்ற ஆக்கை பிரிந்த தலகு பழுத்தது மூக்கினிற் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க் காக்கைக்கு வுண்பலி காட்டிய வாறே.
|
5
|
Go to top |
அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார் இடப்பக்க மேஇறை நொந்ததிங் கென்றார் கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.
|
6
|
மன்றத்தே நம்பிதன் மாடம் எடுத்தது மன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான் மன்றத்தே நம்பிமுக் கோடி வழங்கினான் சென்றத்தா வென்னத் திரிந்திலன் தானே.
|
7
|
வாசந்தி பேசி மணம்புணர் தம்பதி நேசந் தெவிட்டி நினைப்பொழி வார்பின்னை ஆசந்தி மேல்வைத் தமைய அழுதிட்டுப் பாசந்தீச் சுட்டுப் பலியட்டி னார்களே.
|
8
|
கைவிட்டு நாடிக் கருத்தழிந் தச்சற நெய்யட்டிச் சோறுண்ணும் ஐவரும் போயினார் மையிட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே மெய்விட்டுப் போக விடைகொள்ளு மாறே.
|
9
|
பந்தல் பிரிந்தது பண்டாரங் கட்டற்ற ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன துன்புறு காலந் துரிசுற மேன்மேல் அன்புடை யார்கள் அழுதகன் றார்களே.
|
10
|
Go to top |
நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன் காட்டுச் சிவிகையொன் றேறிக் கடைமுறை நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே.
|
11
|
முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும் செப்ப மதிளுடைக் கோட்டையுள் வாழ்பவர் செப்ப மதிளுடைக் கோட்டை சிதைந்தபின் ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே.
|
12
|
மதுவூர் குழலியும் மாடும் மனையும் இதுவூர் ஒழிய இதணம தேற்றிப் பொதுவூர் புறஞ்சுடு காடது நோக்கி மதுவூர வாங்கியே வைத்தகன் றார்களே.
|
13
|
வைச்சகல் வுற்றது கண்டு மனிதர்கள் அச்சக லாதென நாடும் அரும்பொருள் பிச்சது வாய்ப்பின் தொடர்வுறும் மற்றவர் எய்ச்சக லாநின் றிளைக்கின்ற வாறே.
|
14
|
ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும் ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின் வேர்த்தலை போக்கி விறகிட் டெரிமூட்டி நீர்த்தலை மூழ்குவர் நீதியி லோரே.
|
15
|
Go to top |
வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றுங் குளத்தின்மண் கொண்டு குயவன் வனைந்தான் குடமுடைந் தால்அவை ஓடென்று வைப்பர் உடலுடைந் தால்இறைப் போதும் வையாரே.
|
16
|
ஐந்து தலைப்பறி ஆறு கடையுள சந்தவை முப்பது சார்வு பதினெட்டுப் பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து வெந்து கிடந்தது மேலறி யோமே.
|
17
|
அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்துங் கொத்தி உலைப்பெய்து கூழட்டு வைத்தனர் அத்திப் பழத்தை அறைக்கீரை வித்துண்ணக் கத்தி எடுத்தவர் காடுபுக் காரே.
|
18
|
மேலும் முகடில்லை கீழும் வடிம்பில்லை காலும் இரண்டு முகட்டலக் கொன்றுண்டு ஓலையான் மேய்ந்தவ ரூடு வரியாமை வேலையான் மேய்ந்ததோர் வெள்ளித் தளியே.
|
19
|
கூடங் கிடந்தது கோலங்கள் இங்கில்லை ஆடும் இலயமும் அற்ற தறுதலும் பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத் தேடிய தீயினில் தீயவைத் தார்களே.
|
20
|
Go to top |
முட்டை பிறந்தது முந்நூறு நாளினில் இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள் பட்டது பார்மணம் பன்னிரண் டாண்டினிற் கெட்ட தெழுபதிற் கேடறி யீரே.
|
21
|
இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டால் முடிஞ்ச தறியார் முழங்குவர் மூடர் விடிஞ்சிரு ளாவ தறியா உலகம் படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே.
|
22
|
மடல்விரி கொன்றையன் மாயன் படைத்த உடலும் உயிரும் உருவம் தொழாமல் இடர்படர்ந் தேழாம் நரகிற் கிடப்பர் குடர்பட வெந்தமர் கூப்பிடு மாறே.
|
23
|
குடையுங் குதிரையுங் கொற்றவா ளுங்கொண் டிடையுமக் காலம் இருந்து நடுவே புடையு மனிதரார் போகும்அப் போதே அடையும் இடம்வலம் ஆருயி ராமே.
|
24
|
காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென் பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென் தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங் கூத்தன் புறப்பட்டுப் போனஇக் கூட்டையே. 6,
|
25
|
Go to top |