அருளும் அரசனும் ஆனையுந் தேரும் பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னந் தெருளும் உயிரொடுஞ் செல்வனைச் சேரின் மருளும் பினைஅறன் மாதவ மன்றே.
|
1
|
இயக்குறு திங்கள் இருட்பிழம் பொக்கும் துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா மயக்கற நாடுமின் வானவர் கோனைப் பெயற்கொண்டல் போலப் பெருஞ்செல்வ மாமே.
|
2
|
தன்னது சாயை தனக்குத வாதுகண் டென்னது மாடென் றிருப்பர்கள் ஏழைகள் உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது கண்ணது காணொளி கண்டுகொ ளீரே.
|
3
|
ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும் கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும் ஓட்டித் துரந்திட் டதுவலி யார்கொளக் காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே.
|
4
|
தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின் ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக் கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே.
|
5
|
Go to top |
மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லுங் கலம்போல் அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடு பேறாகச் சிமிழொன்று வைத்தமை தேர்ந்தறி யாரே.
|
6
|
வாழும் மனைவியும் மக்கள் உடன்பிறந் தாரு மளவே தெமக்கென்பர் ஒண்பொருள் மேவு மதனை விரிவுசெய் வார்கட்குக் கூவுந் துணையொன்று கூடலு மாமே.
|
7
|
வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கிலை பூட்டுந் தறியொன்று போம்வழி ஒன்பது நாட்டிய தாய்தமர் வந்து வணங்கிப்பின் காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே.
|
8
|
உடம்பொ டுயிரிடை விட்டோடும் போது அடும்பரி சொன்றில்லை அண்ணலை எண்ணும் விடும்பரி சாய்நின்ற மெய்நமன் தூதர் சுடும்பரி சத்தையுஞ் சூழகி லாரே.7,
|
9
|