போதுகந் தேறும் புரிசடை யானடி யாதுகந் தாரம ராபதிக் கேசெல்வர் ஏதுகந் தானிவன் என்றருள் செய்திடும் மாதுகந் தாடிடு மால்விடை யோனே.
|
1
|
பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ் கற்றிருந் தாங்கே கருது மவர்கட்கு முற்றெழுந் தாங்கே முனிவர் எதிர்வரத் தெற்றுஞ் சிவபதம் சேரலு மாமே.
|
2
|
வருந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த் திருந்தம ராபதிச் செல்வன் இவனெனத் தருந்தண் முழவங் குழலும் இயம்ப இருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே.
|
3
|
செம்பொற் சிவகதி சென்றெய்தும் காலத்துக் கும்பத் தமரர் குழாம்வந் தெதிர்கொள்ள எம்பொற் றலைவன் இவனா மெனச்சொல்ல இன்பக் கலவி இருக்கலு மாமே.
|
4
|
சேருறு காலந் திசைநின்ற தேவர்கள் ஆரிவன் என்ன அரனாம் இவனென்ன ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக் காருறு கண்டனை மெய்கண்ட வாறே.
|
5
|
Go to top |
நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ் சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை இல்வழி யாளர் இமையவர் எண்டிசைப் பல்வழி எய்தினும் பார்வழி யாகுமே.
|
6
|
தூங்கவல் லார்க்கும் துணையேழ் புவனமும் வாங்கவல் லார்க்கும் வலிசெய்து நின்றிடந் தேங்கவல் லார்க்கும் திளைக்கும் அமுதம்முன் தாங்கவல் லார்க்குந்தன் தன்இட மாமே.
|
7
|
காரிய மான உபாதியைத் தான்கடந் தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற வாரிய காரணம் மாயத் தவத்திடைத் தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே.11,
|
8
|