காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக் காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற் காதல் வழிசெய்து கங்கை வழிதரும் காதல் வழிசெய்து காக்கலு மாமே.
|
1
|
காக்கலு மாகுங் கரணங்கள் நான்கையும் காக்கலு மாகுங் கலைபதி னாறையும் காக்கலு மாகுங் கலந்தநல் வாயுவும் காக்கலு மாகுங் கருத்துற நில்லே
|
2
|
நிலைபெற நின்றது நேர்தரு வாயு சிலைபெற நின்றது தீபமும் ஒத்துக் கலைவழி நின்ற கலப்பை அறியில் மலைவற வாகும் வழியது வாமே.
|
3
|
புடையொன்றி நின்றிடும் பூதப் பிரானை மடையொன்றி நின்றிட வாய்த்த வழியில் சடையொன்றி நின்றஅச் சங்கர நாதன் விடையொன்றி லேறியே வீற்றிருந் தானே.
|
4
|
இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார் பெருக்கின்ற காலப் பெருமையை நோக்கி ஒலிக்கின்ற வாயு ஒளிபெற நிற்கத் தருக்கொன்றி நின்றிடும் சாதக னாமே.
|
5
|
Go to top |
சாதக மானஅத் தன்மையை நோக்கியே மாதவ மான வழிபாடு செய்திடும் போதக மாகப் புகலுறப் பாய்ச்சினால் வேதக மாக விளைந்து கிடக்குமே.
|
6
|
கிடந்தது தானே கிளர்பயன் மூன்று நடந்தது தானேஉள் நாடியுள் நோக்கிப் படர்ந்தது தானே அப் பங்கய மாகத் தொடர்ந்தது தானே அச் சோதியுள் நின்றே.
|
7
|
தானே எழுந்தஅத் தத்துவ நாயகி ஊனே வழிசெய்தெம் உள்ளே யிருந்திடும் வானோர் உலகீன்ற அம்மை மதித்திடத் தேனே பருகச் சிவாலய மாகுமே.
|
8
|
திகழும் படியே செறிதரு வாயு அழியும் படியை அறிகிலர் ஆரும் அழியும் படியை அறிந்தபின் நந்தி திகழ்கின்ற ஆயுவைச் சேர்தலு மாமே.
|
9
|
சோதனை தன்னில் துரிசறக் காணலாம் நாதனும் நாயகி தன்னிற் பிரியும்நாள் சாதன மாகுங் குருவை வழிபட்டு மாதன மாக மதித்துக்கொ ளீரே.
|
10
|
Go to top |
ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப் பேராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லிரேல் நீரா யிரமும் நிலமாயிரத் தாண்டும் பேராது காயம் பிரான்நந்தி ஆணையே.
|
11
|
ஓசையில் ஏழும் ஒளியின்கண் ஐந்தும் நாசி யினில்மூன்றும் நாவில் இரண்டும் தேசியும் தேசனுந் தம்மிற் பிரியுநாள் மாசறு சோதி வகுத்துவைத் தானே. 13,
|
12
|