சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும் சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி சமாதி யமாதியிற் றங்கினோர்க் கன்றே சமாதி யமாதி தலைப்படுந் தானே.
|
1
|
விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடிற் சந்தியி லான சமாதியிற் கூடிடும் அந்த மிலாத அறிவின் அரும்பொருட் சுந்தரச் சோதியுந் தோன்றிடுந் தானே.
|
2
|
மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு மன்மனத் துள்ளே மனோலய மாமே.
|
3
|
விண்டலர் கூபமும் விந்தத் தடவியுங் கண்டுணர் வாகக் கருதி யிருப்பர்கள் செண்டு வெளியிற் செழுங்கிரி யத்திடை கொண்டு குதிரை குசைசெறுத் தானே.
|
4
|
மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு கொண்டிட நிற்குங் குடிகளும் ஆறெண்மர் கண்டிட நிற்குங் கருத்து நடுவாக உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே.
|
5
|
Go to top |
பூட்டொத்து மெய்யிற் பொறிப்பட்ட வாயுவைத் தேட்டற்ற அந்நிலஞ் சேரும் படிவைத்து நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத் தோட்டத்து மாம்பழந் தூங்கலு மாமே.
|
6
|
உருவறி யும்பரி சொன்றுண்டு வானோர் கருவரை பற்றிக் கடைந்தமு துண்டார் அருவரை யேறி அமுதுண்ண மாட்டார் திருவரை யாமனந் தீர்ந்தற்ற வாறே.
|
7
|
நம்பனை ஆதியை நான்மறை ஓதியைச் செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை அன்பினை யாக்கி அருத்தி ஒடுக்கிப்போய்க் கொம்பேறிக் கும்பிட்டுக் கூட்டமிட் டாரே.
|
8
|
மூலத்து மேலது முற்சது ரத்தது காலத் திசையிற் கலக்கின்ற சந்தினில் மேலைப் பிறையினில் நெற்றிக்குநேர் நின்ற கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே.
|
9
|
கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்று சிற்பனை எல்லாஞ் சிருட்டித்த பேரொளிப் பொற்பனை நாடிப் புணர்மதி யோடுற்றுத் தற்பர மாகத் தகுந்தண் சமாதியே.
|
10
|
Go to top |
தலைப்பட் டிருந்திடத் தத்துவங் கூடும் வலைப்பட் டிருந்திடும் மாதுநல் லாளும் குலைப்பட் டிருந்திடும் கோபம் அகலும் துலைப்பட் டிருந்திடந் தூங்கவல் லார்க்கே.
|
11
|
சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும் ஆதியும் உள்நின்ற சீவனு மாகுமால் ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும் ஆதி அடிபணிந் தன்புறு வாரே.
|
12
|
சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகம் சமாதிகள் வேண்டா இறையுட னேகில் சமாதிதா னில்லை தானவ னாகில் சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே. 10,
|
13
|