| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
- Hide Meaning https://www.youtube.com/watch?v=KrX5P0IKkUw Add audio link
4.064
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருவீழிமிழலை - திருநேரிசை அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி
பூதத்தின் படையர்; பாம்பின் பூணினர்; பூண நூலர்
சீதத்தின் பொலிந்த திங்கள் கொழுந்தர்; நஞ்சு அழுந்து கண்டர்;
கீதத்தின் பொலிந்த ஓசைக் கேள்வியர்; வேள்வியாள
வேதத்தின் பொருளர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே.
1
பூதத்தின் படையினராய் , பாம்பாகிய அணிகளை உடையவராய் , பூணூலை அணிந்தவராய் , குளிர்ச்சி , மிகுந்த பிறையைச் சூடியவராய் , விடம் பொருந்திய கழுத்தினராய் , பாடலோடு பொருந்திய ஓசைச் சிறப்பை உடைய வேதம் ஓதுபவராய் , வேள்வியை ஆள்பவராய் வேதத்தின் பொருளராய் வீழிமிழலையில் விகிர்தராம் இயல்புள்ள சிவபெருமான் விளங்குகிறார் .
காலையின் கதிர்செய் மேனி, கங்குலின் கறுத்த கண்டர்
மாலையின் மதியம் சேர்ந்த மகுடத்தர்; மதுவும் பாலும்
ஆலையில் பாகும் போல அண்ணித் திட்டு, -அடியார்க்கு,-என்றும்
வேலையின் அமுதர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே.
2
காலை ஞாயிற்றின் ஒளியை உடைய திருமேனியராய் , இரவு இருள் போலக் கறுத்த கழுத்தினராய் , மாலையில் தோன்றும் பிறையணிந்த சடை முடியினராய் , தேனும் பாலும் கரும்பின் பாகும் கடலில் தோன்றும் அமுதமும் போல அடியவர்களுக்கு இனிப்பை நல்குபவராய் வீழிமிழலையில் உள்ள விகிர்தனார் விளங்குகிறார் .
வரும் தினம், நெருநல், இன்று ஆய், வழங்கின நாளர்; ஆல்கீழ்
இருந்து நன் பொருள்கள் நால்வர்க்கு இயம்பினர்; இருவரோடும்
பொருந்தினர்; பிரிந்து தம்பால் பொய்யர் ஆம் அவர்கட்கு என்றும்
விருந்தினர்-திருந்து வீழிமிழலையுள் விகிர்தனாரே.
3
நாளை , நேற்று , இன்று என்னும் முக்காலத்தும் இருப்பவராய் , ஆலமரத்தின் கீழ் அமர்ந்து மேம்பட்ட செய்திகளை முனிவர் நால்வருக்கு இயம்பியவராய் , திருமாலோடும் பிரமனோடும் பொருந்தியவராய் , தம்மை மறந்து தம்மிடம் பொய்யாக நடந்து கொள்பவருக்குத் தம்மை உள்ளவாறு அறிய இயலாத புதியவராய் வீழிமிழலை விகிர்தர் விளங்குகிறார் .
நிலை இலா ஊர் மூன்று ஒன்ற-நெருப்பு, -அரி காற்று அம்பு ஆக,
சிலையும் நாண் அதுவும் நாகம் கொண்டவர்; தேவர் தங்கள்
தலையினால்-தரித்த என்பும், தலைமயிர் வடமும், பூண்ட
விலை இலா வேடர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே.
4
எங்கும் இயங்கிக் கொண்டிருந்த மும்மதில்களை அக்கினி , திருமால் , வாயு இவர்களை உறுப்பாகக் கொண்ட அம்பு , மலையாகிய வில் , பாம்பாகிய நாண் இவற்றைக் கொண்டு அழித்தவராய்த் தேவர்களின் தலைமாலையும் , தலைமயிராலாகிய பஞ்சவடி என்னும் பூணூலும் அணிந்தவராய் , யாரும் விலை மதித்தற்கில்லாத வேடத்தை உடையவராய் வீழிமிழலை விகிர்தனார் விளங்குகிறார் .
மறை இடைப் பொருளர்; மொட்டின் மலர் வழி வாசத் தேனர்
கறவு இடைப் பாலின் நெய்யர்; கரும்பினில் கட்டியாளா
பிறை இடைப் பாம்பு கொன்றைப் பிணையல் சேர் சடையுள் நீரர்
விறகு இடைத் தீயர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே.
5
வேதத்தின் விழுமிய பொருளாக உள்ளவராய் , அரும்பு பூக்கும்போது வெளிப்படும் மணமுடைய தேனாகியவராய் , கறக்கும் பசுவின் பாலில் கரந்து எங்கும் பரந்திருக்கும் நெய் போன்றவராய் , கரும்புச்சாற்றின் கட்டி போன்று இனியராய் , பிறை , பாம்பு , கொன்றைமாலை இவற்றைத் தரித்த சடையில் கங்கை நீரை ஏற்றவராய் , விறகிடை மறைந்து பரந்திருக்கும் தீப்போலக் கரந்து எங்கும் பரந்தவராய் வீழிமிழலை விகிர்தனார் விளங்குகிறார் .
Go to top
எண் அகத்து இல்லை அல்லர்; உளர் அல்லர்; இமவான் பெற்ற
பெண் அகத்தர்; ஐயர்; காற்றில் பெரு வலி இருவர் ஆகி,
மண் அகத்து ஐவர்; நீரில் நால்வர்; தீ அதனில் மூவர்
விண் அகத்து ஒருவர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே.
6
எண்ணும் எண்ணத்திலே இல்லாதவரும் அல்லராய் , உள்ளவரும் அல்லராய் , பார்வதி பாகராய் , விண்ணில் ஒலிப் பண்பினராய்க் காற்றில் ஒலி ஊறு என்ற இரு பண்பினராய் , தீயிடை ஒலி ஊறு ஒளி என்ற மூன்று பண்பினராய் , நீரிடை ஒலி ஊறு ஒளி சுவை என்ற நாற்பண்பினராய் , மண்ணில் ஒலி ஊறு ஒளி சுவை நாற்றம் என்ற ஐந்து பண்பினராய் வீழிமிழலை விகிர்தனார் உள்ளார் .
சந்து அணி கொங்கையாள் ஓர் பங்கினர்; சாமவேதர்
எந்தையும் எந்தை தந்தை தந்தையும் ஆய ஈசர்;
அந்தியோடு உதயம் அந்தணாளர் ஆன் நெய்யால் வேட்கும்
வெந்தழல் உருவர் வீழிமிழலையுள் விகிர்தனாரே.
7
சந்தனத்தை அணிந்த தனங்களை உடைய பார்வதிபாகர் , சாமவேதர் , அடியேனுக்குத் தந்தையாராகவும் பாட்டனாராகவும் முப்பாட்டனாராகவும் உள்ளவர் . காலை சந்தியிலும் மாலை அந்தியிலும் அந்தணாளர்கள் நெய்யால் வேள்வி செய்யும் விரும்பத் தக்க தீயின் உருவர் என இவ்வாறு வீழிமிழலை விகிர்தனார் உள்ளார் .
நீற்றினை நிறையப் பூசி, நித்தல் ஆயிரம் பூக்கொண்டு(வ்)
ஏற்றுழி, ஒரு நாள் ஒன்று குறைய, கண் நிறைய இட்ட
ஆற்றலுக்கு ஆழி நல்கி, அவன் கொணர்ந்து இழிச்சும் கோயில்
வீற்றிருந்து அளிப்பர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே.
8
திருநீற்றை நன்கு அணிந்து நாடோறும் ஆயிரம் தாமரைப் பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்த காலத்தில் ஒரு நாள் ஒரு பூக்குறையவே அப்பூவின் தானத்தில் தன் கண்ணைப் பிடுங்கி அர்ச்சித்த முறுகிய பக்தியை உடைய திருமாலுக்குச் சக்கரத்தைக் கொடுத்து அவன் விண்ணிலிருந்து கொணர்ந்து நிறுவிய கோயிலில் வீற்றிருந்து வீழிமிழலை விகிர்தனார் எல்லோருக்கும் அருள் செய்கிறார் .
சித்தி செய்பவர்கட்கு எல்லாம் சேர்வு இடம்; சென்று கூடப்
பத்தி செய்பவர்கள் பாவம் பறைப்பவர்; இறப்பு இலாளா
முத்து இசை பவள மேனி முதிர் ஒளி நீலகண்டர்
வித்தினில் முளையர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே.
9
சித்தியை விரும்புவார் தாம்தாம் சேர்விடஞ் சென்றுகூட வைத்தும் பத்தி செய்பவர்களின் பாவத்தை விலக்கியும் பக்குவர்க்கு முத்தி வழங்கியும் அருள்பவர் பவளம்போல் மேனியும் ஒளியின் முதிர்ந்த நீலகண்டரும் வித்தின் முளைபோல்வாருமாய் உள்ள திருவீழிமிழலை விகிர்தனாரே .
தருக்கின அரக்கன் தேர் ஊர் சாரதி தடை நிலாது
பொருப்பினை எடுத்த தோளும் பொன் முடி பத்தும் புண் ஆய்
நெரிப்புண்டு அங்கு அலறி மீண்டு நினைந்து அடி பரவ, தம் வாள
விருப்பொடும் கொடுப்பர் வீழிமிழலையுள் விகிர்தனாரே.
10
செருக்குற்ற இராவணன் தன் தேரைச் செலுத்திய சாரதி தடுத்ததனை மனங்கொள்ளாது கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்ட தோள்களும் அழகிய பத்துத் தலைகளும் புண்ணாகுமாறு சிவபெருமானால் நெரிக்கப்பட்டு , அலறி , மறுபடி அவன் அன்போடு நினைந்து சிவபெருமான் திருவடிகளைத் துதிக்க , அவனுக்கு வீழிமிழலை விகிர்தனராகிய அப்பெருமான் தம்முடைய வாளினை விருப்பத்தோடு வழங்கினார் .
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருவீழிமிழலை
1.004
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மைம் மரு பூங்குழல் கற்றை
Tune - நட்டபாடை
(திருவீழிமிழலை பிரமபுரீசர் வீழியழகர் திருநிலைநாயகி, சுந்தரகுசாம்பிகை)
1.011
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சடை ஆர் புனல் உடையான்,
Tune - நட்டபாடை
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.020
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தட நிலவிய மலை நிறுவி,
Tune - நட்டபாடை
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.035
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அரை ஆர் விரி கோவண
Tune - தக்கராகம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.082
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இரும் பொன்மலை வில்லா, எரி
Tune - குறிஞ்சி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.092
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வாசி தீரவே, காசு நல்குவீர்! மாசு
Tune - குறிஞ்சி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.124
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர் மலர்
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.132
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து,
Tune - மேகராகக்குறிஞ்சி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.009
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கேள்வியர், நாள்தொறும் ஓது நல்வேதத்தர்
Tune - காந்தாரபஞ்சமம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.080
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சீர் மருவு தேசினொடு தேசம்
Tune - சாதாரி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.085
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மட்டு ஒளி விரிதரு மலர்
Tune - சாதாரி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.098
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வெண்மதி தவழ் மதில் மிழலை
Tune - சாதாரி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.111
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வேலின் நேர்தரு கண்ணினாள் உமை
Tune - பழம்பஞ்சுரம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.116
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திரு இயமகம் பதிகம், துன்று கொன்றை நம் சடையதே;
Tune - பழம்பஞ்சுரம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.119
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புள்ளித்தோல் ஆடை; பூண்பது நாகம்;
Tune - புறநீர்மை
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
4.064
திருநாவுக்கரசர்
தேவாரம்
பூதத்தின் படையர்; பாம்பின் பூணினர்;
Tune - திருநேரிசை
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
4.095
திருநாவுக்கரசர்
தேவாரம்
வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும்
Tune - திருவிருத்தம்
(திருவீழிமிழலை தோன்றாத்துணையீசுவரர் தோகையம்பிகையம்மை)
5.012
திருநாவுக்கரசர்
தேவாரம்
கரைந்து கை தொழுவாரையும் காதலன்;
Tune - திருக்குறுந்தொகை
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
5.013
திருநாவுக்கரசர்
தேவாரம்
என் பொனே! இமையோர் தொழு
Tune - திருக்குறுந்தொகை
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.050
திருநாவுக்கரசர்
தேவாரம்
போர் ஆனை ஈர் உரிவைப்
Tune - திருத்தாண்டகம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.051
திருநாவுக்கரசர்
தேவாரம்
கயிலாய மலை உள்ளார்; காரோணத்தார்;
Tune - திருத்தாண்டகம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.052
திருநாவுக்கரசர்
தேவாரம்
கண் அவன் காண்; கண்
Tune - திருத்தாண்டகம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.053
திருநாவுக்கரசர்
தேவாரம்
மான் ஏறு கரம் உடைய
Tune - திருத்தாண்டகம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
7.088
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
நம்பினார்க்கு அருள் செய்யும் அந்தணர்
Tune - சீகாமரம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகையம்மை)
9.005
சேந்தனார்
திருவிசைப்பா
சேந்தனார் - திருவீழிமிழலை
Tune -
(திருவீழிமிழலை )