சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

7.094   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருச்சோற்றுத்துறை - கௌசிகம் அருள்தரு ஒப்பிலாம்பிகை உடனுறை அருள்மிகு தொலையாச்செல்வர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=k0dLDNxuICw   Add audio link Add Audio

அழல் நீர் ஒழுகியனைய சடையும்,
உழை ஈர் உரியும், உடையான் இடம் ஆம்-
கழை நீர் முத்தும் ககைக்குவையும்
சுழல் நீர்ப் பொன்னி-சோற்றுத்துறையே.

1
மூங்கில்களிடத்து உளவாகிய சிறந்த முத்துக்களும் , பொற்குவியல்களும் சுழிகளில் சுழல்கின்ற நீரையுடைய காவிரி யாற்றையுடைய , ` திருச்சோற்றுத்துறை ` என்னும் தலமே , நெருப்பு நீர்த் தன்மையுடையதாய் ஒழுகினாற்போலும் சடையையும் , மானையும் , யானை , புலி இவைகளை உரித்த தோலையும் உடையவனாகிய இறைவனது இடமாகும் .

பண்டை வினைகள் பறிய நின்ற
அண்ட முதல்வன், அமலன், இடம் ஆம்-
இண்டை கொண்டு அன்பு இடை அறாத
தொண்டர் பரவும்-சோற்றுத்துறையே.

2
அன்பு , இடையில் அற்றுப்போதல் இல்லாத அடியார்கள் , இண்டை மாலை முதலியவைகளைக் கொண்டுவழி படுகின்ற , ` திருச்சோற்றுத்துறை ` என்னும் தலமே , உயிர்கள் செய்த பழைய , வலிமையான வினைகள் நீங்குமாறு நிற்கின்ற , உலகிற்கு முதல்வனும் , தூயவனும் ஆகிய இறைவனது இடமாகும் .

கோல அரவும், கொக்கின் இறகும்,
மாலை மதியும், வைத்தான் இடம் ஆம்-
ஆலும் மயிலும், ஆடல் அளியும்,
சோலை தரு நீர்-சோற்றுத்துறையே.

3
சோலைகள் , ஆடுகின்ற மயில்களையும் , சுழலுதல் உடைய வண்டுகளையும் கொண்டு காட்டுகின்ற மிக்க நீரையுடைய , ` திருச்சோற்றுத்துறை ` என்னும் தலமே , அழகிய பாம்பையும் , கொக்கின் இறகையும் , மாலைக் காலத்தில் தோன்றுகின்ற பிறையை யும் முடியில் வைத்துள்ளவனாகிய இறைவனது இடமாகும் .

பளிக்குத்தாரை பவளவெற்பில்
குளிக்கும் போல் நூல் கோமாற்கு இடம் ஆம்-
அளிக்கும் ஆர்த்தி, அல்லால் மதுவும்
துளிக்கும் சோலை-சோற்றுத்துறையே.

4
தேனை வண்டுகள் நிரம்ப உண்ணச்செய்து , மேலும் நிலத்திற் சிந்துகின்ற சோலைகளையுடைய , ` திருச்சோற்றுத்துறை ` என்னும் தலமே , பவளமலையின்மேல் பதிந்து ஓடுகின்ற பளிங்கு அருவிபோலும் முப்புரி நூலை அணிந்த தலைவனாகிய இறைவனுக்கு இடமாகும் .

உதையும், கூற்றுக்கு; ஒல்கா விதிக்கு
வதையும்; செய்த மைந்தன் இடம் ஆம்-
திதையும் தாதும் தேனும் ஞிமிறும்
துதையும் பொன்னி-சோற்றுத்துறையே.

5
நிலைபெற்ற மகரந்தமும் , தேனும் , வண்டும் சோலைகளில் நெருங்கியிருக்கின்ற , காவிரி யாற்றையுடைய , ` திருச்சோற்றுத்துறை ` என்னுந் தலமே , கூற்றுவனுக்கு உதையையும் , ஒன்றற்கும் தோலாத ஊழிற்கு அழிவையும் ஈந்த வலிமை உடைய வனாகிய இறைவனுக்கு இடமாகும் .
Go to top

ஓதக்கடல் நஞ்சினை உண்டிட்ட
பேதைப்பெருமான் பேணும் பதி ஆம்-
சீதப்புனல் உண்டு எரியைக் காலும்
சூதப்பொழில் சூழ்-சோற்றுத்துறையே.

6
குளிர்ந்த நீரை உண்டு , தீயை உமிழ்கின்ற மாஞ் சோலைகள் சூழ்ந்த , ` திருச்சோற்றுத்துறை ` என்னும் தலமே , மிக்க நீரை யுடைய கடலில் உண்டாகிய நஞ்சினை உண்ட , அருள்மிகுந்த பெரு மான் விரும்பும் ஊராகும் .

இறந்தார் என்பும், எருக்கும், சூடிப்
புறங்காட்டு ஆடும் புனிதன் கோயில்-
சிறந்தார், சுற்றம், திரு, என்று இன்ன
துறந்தார் சேரும்-சோற்றுத்துறையே.

7
உயிர்போலச் சிறந்த மனைவி மக்களும் , ஏனைய சுற்றத்தாரும் , செல்வமும் என்று சொல்லப்பட்ட இன்னோரன்ன வற்றைத் துறந்த ஞானியர் சேர்கின்ற , ` திருச்சோற்றுத்துறை ` என்னும் தலமே , இறந்தவரது எலும்புகளையும் ` எருக்கம் பூவையும் அணிந்து கொண்டு , புறங்காட்டில் ஆடுகின்ற தூயவனாகிய இறைவனது இடம் .

காமன் பொடியாக் கண் ஒன்று இமைத்த
ஓமக் கடலார் உகந்த இடம் ஆம்-
தேமென்குழலார் சேக்கை புகைத்த
தூமம் விசும்பு ஆர்-சோற்றுத்துறையே.

8
தேன் பொருந்திய , மெல்லிய கூந்தலையுடைய மகளிர் , தம் இருக்கையில் இட்ட நறும்புகைகள் , வானத்தில் சென்று நிறைகின்ற , ` திருச்சோற்றுத்துறை ` என்னும் தலமே மன்மதன் சாம்பராகுமாறு கண் ஒன்றைத் திறந்த , வேள்வியாகிய கடலையுடைய வராகிய இறைவர் விரும்பும் இடமாகும் .

இலையால், அன்பால், ஏத்துமவர்க்கு
நிலையா வாழ்வை நீத்தார் இடம் ஆம்-
தலையால்-தாழும் தவத்தோர்க்கு என்றும்
தொலையாச் செல்வ-சோற்றுத்துறையே.

9
தன்னைத் தலையால் வணங்குகின்ற தவத்தினை உடையோர்க்கு , எஞ்ஞான்றும் அழியாத செல்வத்தைத் தரும் , ` திருச்சோற்றுத்துறை ` என்னுந் தலமே , இலையாலாயினும் அன்போடு துதிக்கின்ற அவர்கட்கு , நிலையாத இவ்வுலக வாழ்வை நீக்குபவ ராகிய இறைவனது இடமாகும் .

சுற்று ஆர் தரு நீர்ச் சோற்றுத்துறையுள்
முற்றா மதி சேர் முதல்வன் பாதத்து
அற்றார் அடியார் அடி நாய் ஊரன்
சொல்-தான் இவை கற்றார் துன்பு இலரே.

10
பற்றற்றவராகிய அடியார்களது அடிக்கு நாய் போலும் நம்பியாரூரன் , சுற்றிலும் , நிறைந்த நீரையுடைய திருச் சோற்றுத்துறையில் எழுந்தருளியிருக்கின்ற , இளமையான சந்திரனைச் சூடிய முதல்வனது திருவடிக்கண் இப்பாடல்களைப் பாடினான் ; இவைகளைக் கற்றவராவார் , யாதொரு துன்பமும் இல்லாதவராவர் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருச்சோற்றுத்துறை
1.028   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   செப்பம் நெஞ்சே, நெறி கொள்!
Tune - தக்கராகம்   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகையம்மை)
4.041   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொய் விராம் மேனி தன்னைப்
Tune - திருநேரிசை:கொல்லி   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
4.085   திருநாவுக்கரசர்   தேவாரம்   காலை எழுந்து, கடிமலர் தூயன
Tune - திருவிருத்தம்   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
5.033   திருநாவுக்கரசர்   தேவாரம்   கொல்லை ஏற்றினர், கோள் அரவத்தினர்,
Tune - நாட்டைக்குறிஞ்சி   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
6.044   திருநாவுக்கரசர்   தேவாரம்   மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே! முறைமையால்
Tune - திருத்தாண்டகம்   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
7.094   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   அழல் நீர் ஒழுகியனைய சடையும்,
Tune - கௌசிகம்   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000