குருஉரு அன்றிக் குனிக்கும் உருவம் அருஉரு ஆவதும் அந்த உருவே திரிபுரை யாகித் திகழ்தரு வாளும் உருவரு வாளும் உமையவள் தானே.
|
1
|
திருவழி யாவது சிற்றம் பலத்தே குருவடி வுள்ளாக் குனிக்கும் உருவமே உருஅரு ஆவதும் உற்றுணர்ந் தோர்க்கு அருள்வழி யாவதும் அவ்வழி தானே.
|
2
|
நீடும் சிரசிடைப் பன்னிரண் டங்குலம் ஓடும் உயிர்எழுந் தோங்கி உதித்திட நாடுமின் நாதாந்த நம்பெரு மான்உகந்(து) ஆடும் இடம்திரு அம்பலத் தானே.
|
3
|
வளிமேகம் மின் வில்லு வாகை ஓசை தெளிய விசும்பில் திகழ்தரு மாறுபோல் களிஒளி ஆறும் கலந்துடன் வேறாய் ஒளியுரு வாகி ஒளிந்துநின் றானே.
|
4
|
தீமுதல் ஐந்தும் திசைஎட்டும் கீழ்மேலும் ஆயும் அறிவினுக் கப்புற ஆனந்தம் மாயைமா மாயை கடந்துநின் றார்காண நாயகன் நின்று நடம்செய்யு மாறே.
|
5
|
Go to top |
கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும் கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம் கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக் கூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே.
|
6
|
இடங்கொண்ட சத்தியும் எந்தை பிரானும் நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன் படங்கொண்டு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம் அடங்கலும் தாமாய்நின் றாடுகின் றாரே.
|
7
|
சத்தி வடிவு சகலஆ னந்தமும் ஒத்தஆ னந்தம் உமையவள் மேனியாம் சத்தி வடிவு சகளத் தெழுந்திரண்(டு) ஒத்தஆ னந்தம் ஒருநடம் ஆமே.
|
8
|
நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம் பற்றுக்குப் பற்றாய்ப் பரமன் இருந்திடம் சிற்றம் பலம்என்று தேர்ந்துகொண் டேனே.
|
9
|
அண்டங்கள் தத்துவம் ஆதி சதாசிவம் தண்டினில் சாத்தவி சாமபி ஆதனம் தெண்டினில் ஏழும் சிவாசன மாகவே` கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.
|
10
|
Go to top |
மன்று நிறைந்த விளக்கொளி மாமலர் நன்றிது தான்இதழ் நாலொடு நூறவை சென்றது தான்இரு பத்திரு நூறுள நின்றது தான்நெடு மண்டல மாகுமே.
|
11
|
அண்டம் எழுகோடி பிண்டம் எழுகோடி தெண்டிரை சூழ்ந்த திசைகள் எழுகோடி எண்டிசை சூழ்ந்த இலிங்கம் எழுகோடி அண்டன் நடம்செயும் ஆலயந் தானே.
|
12
|
ஆகாச மாம் உடல் ஆங்கார் முயலகன் ஏகாச மாம்திசை எட்டும் திருக்கைகள் மோகாய முக்கண்கள் மூன்றொளி தானாக மாகாய மன்றுள் நடம்செய்கின் றானே.
|
13
|
அம்பல மாவ அகில சராசரம் அம்பல மாவன ஆதிப் பிரானடி அம்பல மாவன அப்புத்தீ மண்டலம் அம்பல மாவன அஞ்செழுத் தாமே.
|
14
|
கூடிய திண்முழ வம்குழல் `ஓம்`என்ன ஆடிய மானுடர் ஆதிப் பிரான்என்ன நாடிய நற்கணம் ஆரும்பல் பூதங்கள் பாடிய வாறொரு பாண்டரங் காமே.
|
15
|
Go to top |
அண்டத்தில் தேவர்கள் அப்பாலைத் தேவர்கள் தெண்டிரை சூழ்புவிக் குள்ளுள்ள தேவர்கள் புண்பரி கப்பதப் பொன்னம் பலக்கூத்துக் கண்டுசே வித்துக் கதிபெறு வார்களே.
|
16
|
புளிக்கண் டவர்க்குப் புனல்ஊறு மாபோல் களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க் கெல்லாம் துளிக்கும் அருட்கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும் ஒளிக்குள்ஆ னந்தத் தமுதூறும் உள்ளத்தே.
|
17
|
திண்டாடி வீழ்கை சிவானந்த மாவது உண்டார்க்(கு) உண(வு) உண்டால் உன்மத்தம் சித்திக்கும் கொண்டாடும் மன்றுள் குனிக்கும் திருக்கூத்துக் கண்டார் வருங்குணம் கேட்டார்க்கும் ஒக்குமே.
|
18
|
அங்கி தமருகம் அக்கமாலை பாசம் அங்குசம் சூலம் கபால முடன் ஞானம் தங்கு பயமுன் தருநீல மும்முடன் மங்கையோர் பாகமாய் மாநடம் ஆடுமே.
|
19
|
ஆடல் பதினொன் றுறுப்பும் அடைவாகக் கூடிய பாதச் சிலம்புகைக் கொள்துடி நீடிய நாதம் பராற்பர தேயத்தே ஆடிய நந்தி புறம்அகத் தானே.
|
20
|
Go to top |
ஒன்பதும் ஆட ஒருபதி னாறாட அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடன்ஆட இன்புறும் ஏழினும் ஏழ் ஐம்பத் தாறாட அன்பனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.
|
21
|
ஏழினில் ஏழாய் இயைந்தெழுத் தேழாதாய் ஏழினில் ஒன்றாய் இழிந்தமைந் தொன்றாய ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி ஏழினை நாடகத் தேஇசைந் தானே.
|
22
|
மூன்றினில் அஞ்சாகி முந்நூற் றறுபதாய் மூன்றினில் ஆறாய் முதற்பன்னீர் மூலமாய் மூன்றினில் அக்கம் முடிவாக முந்தியே மூன்றினில் ஆடினான் மோகாந்தக் கூத்தே.
|
23
|
தாமுடி வானவர் தம்முடி மேல்உறை மாமணி ஈசன் மலரடித் தாளிணை யாமணி யன்புடை யார்மனத் துள்ளெழும் காமணி ஞாலம் கடந்துநின் றானே.
|
24
|
புரிந்தவன் ஆடில் புவனங்கள் ஆடும் தெரிந்தவன் ஆடு மளவெங்கள் சிந்தை பரிந்தவன் ஆடிற்பல் பூதங்கள் ஆடும் எரிந்தவன் ஆடல்கண் டின்புற்ற வாறே.
|
25
|
Go to top |
ஆதி நடம்செய்தான் என்பர்கள் ஆதர்கள் ஆதி நடம்செய்கை ஆரும் அறிந்திலர் ஆதி நடம்ஆடல் ஆரும் அறிந்தபின் ஆதி நடம்ஆடல் ஆம்அருட் சத்தியே.
|
26
|
ஒன்பதொ டொன்பதாம் உற்ற அசிபதத்(து) அன்புறு கோணம் அசிபதத்(து) ஆடிடத் துன்புறு சத்தியுள் தோன்றிநின் றாடிட அன்புறும் எந்தைநின்(று) ஆடலுற் றானே.
|
27
|
தத்துவம் ஆடச் சதாசிவன் தான்ஆடச் சித்தமும் ஆடச் சிவசத்தி தான்ஆட வைத்த சராசரம் ஆட மறைஆட அத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.
|
28
|
இருவரும் காண எழில்அம் பலத்தே உருவோ டருவோ டுருவரு ரூபமாய்த் திருவருட் சத்திக்குள் சித்தன் ஆனந்தன் அருளுரு வாகநின் றாடலுற் றானே.
|
29
|
சிவம்ஆடச் சத்தியும் ஆடச் சகத்தின் அவம் ஆட ஆடாத அம்பர ஆட நவமான தத்துவம் நாதாந்தம் ஆடச் சிவம்ஆடும் வேதாந்த சித்தாந்தத் துள்ளே.
|
30
|
Go to top |
நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும் வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவ அந்தமும் தாதற்ற நல்ல சதாசிவ அந்தமும் நாதப் பிரம சிவநட மாமே.
|
31
|
சிவமாதி ஐவர்திண் டாட்டமும் தீரத் தவமார் பசுபாசம் ஆங்கே தனித்துத் தவமாம் புரன்எங்குந் தானாகி ஆடும் தவமாம் சிவானந்தத் தோர் ஞானக் கூத்தே.
|
32
|
கூட நின்றான் ஒரு காலத்துத் தேவர்கள் வீட நின்றான் விகிர் தாஎன்னும் நாமத்துத் தேட நின்றான்திக ழும்சுடர் மூன்றொளி ஆட நின்றான் என்னை ஆட்கொண்ட வாறே.
|
33
|
நாதத் துவங்கடந் தாதி மறைநம்பி பூதத் துவத்தே பொலிந்தின்பம் எய்தினர் நேதத் துவமும் அவற்றொடு நீதியும் பேதப் படாவண்ணம் பின்னிநின் றானே.
|
34
|
ஆனந்தம் ஆனந்தம்` என்பர் அறிவிலார் ஆனந்தம் மாநடம் ஆரும் அறிகிலர் ஆனந்தம் மாநடம் ஆரும் அறிந்தபின் ஆனந்தம் அற்றிட ஆனந்தம் ஆமே.
|
35
|
Go to top |
திருந்தநற் `சீ` என் றுதறிய கையும் அருந்தவ `வா` என் றணைத்தபொற் கையும் பொருந்தில் அமைப்பில் இயஎன்பொற் கையும் திருந்தத் தீ ஆகும் திருநிலை மவ்வே.
|
36
|
மருவும் துடியுடன் மன்னிய வீச்சு மருவு மமைப்பு அனலுடைக் கையும் கருவின் மிதித்த கமலப் பதமும் உருவில் சிவாய நமஎன ஓதே.
|
37
|
அரன்துடி தோற்றம் அமைத்தல் திதிஆம் அரன்அங்கி தன்னில் அறையின் சங் காரம் அரன்ஊற் றணைப்பில் அமருந்திரோ தாயி அரன்அடி என்றும் அனுக்கிரகம் என்னே.
|
38
|
நீத்திரட் சோதி திகழொளி யுள்ஒளிக் கூத்தனைக் கண்டஅக் கோமளக் கண்ணினன் மூர்த்திகள் மூவர் முதல்வ னிடைச் செல்லப் பார்த்தனள் வேதங்கள் பாடினள் தானே.
|
39
|
நந்தியை எந்தையை ஞானத் தலைவனை மந்திரம் ஒன்றுள் மருவி அதுகடந்(து) அந்தர வானத்தின் அப்புரத் தப்பர சுந்தரக் கூத்தனை என்சொல்லு மாறே.
|
40
|
Go to top |
சீய குருநந்தி திருவம் பலத்திலே ஆயுறு மேனி யாரும் அறிகிலர் தீயுறு செம்மை வெளுப்போடும் அத்தன்மை ஆயுறு மேனி அணைபுக லாமே.
|
41
|
தானான சத்தியும் தற்பரமாய் நிற்கும் தானாம் பரற்கும் உயிருக்கும் தரும் இச்சை ஞானாதி பேதம் நடத்தும் நடித்தருள் ஆனால் அரனடி நேயத்த தாமே.
16, |
42
|