மின்னியல் செஞ்சடை வெண்பிறை யன்விரி நூலினன் பன்னிய நான்மறை பாடியா டிப்பல வூர்கள்போய் அன்னமன் னந்நடை யாளொ டும்மம ரும்மிடம் புன்னைநன் மாமலர் பொன்னுதிர்க் கும்புன வாயிலே.
|
1
|
விண்டவர் தம்புர மூன்றெரித் துவிடை யேறிப்போய் வண்டம ருங்குழல் மங்கையொ டும்மகிழ்ந் தானிடம் கண்டலு ஞாழலு நின்றுபெ ருங்கடற் கானல்வாய்ப் புண்டரீ கம்மலர்ப் பொய்கைசூழ்ந் தபுன வாயிலே.
|
2
|
விடையுடை வெல்கொடி யேந்தினா னும்விறற் பாரிடம் புடைபட வாடிய வேடத்தா னும்புன வாயிலில் தொடைநவில் கொன்றையந் தாரினா னுஞ்சுடர் வெண்மழுப் படைவல னேந்திய பால்நெய்யா டும்பர மனன்றே.
|
3
|
சங்கவெண் தோடணி காதினா னுஞ்சடை தாழவே அங்கையி லங்கழ லேந்தினா னும்மழ காகவே பொங்கர வம்மணி மார்பினா னும்புன வாயிலில் பைங்கண்வெள் ளேற்றண்ண லாகிநின் றபர மேட்டியே.
|
4
|
கலிபடு தண்கடல் நஞ்சமுண் டகறைக் கண்டனும் புலியதள் பாம்பரைச் சுற்றினா னும்புன வாயிலில் ஒலிதரு தண்புன லோடெருக் கும்மத மத்தமும் மெலிதரு வெண்பிறை சூடிநின் றவிடை யூர்தியே.
|
5
|
Go to top |
வாருறு மென்முலை மங்கைபா டநட மாடிப்போய்க் காருறு கொன்றைவெண் டிங்களா னுங்கனல் வாயதோர் போருறு வெண்மழு வேந்தினா னும்புன வாயிலில் சீருறு செல்வமல் கவ்விருந் தசிவ லோகனே.
|
6
|
பெருங்கடல் நஞ்சமு துண்டுகந் துபெருங் காட்டிடைத் திருந்திள மென்முலைத் தேவிபா டந்நட மாடிப்போய்ப் பொருந்தலர் தம்புர மூன்றுமெய் துபுன வாயிலில் இருந்தவன் தன்கழ லேத்துவார் கட்கிடர் இல்லையே.
|
7
|
மனமிகு வேலனவ் வாளரக் கன்வலி ஒல்கிட வனமிகு மால்வரை யால்அடர்த் தானிட மன்னிய இனமிகு தொல்புகழ் பாடல்ஆ டல்எழின் மல்கிய புனமிகு கொன்றையந் தென்றலார்ந் தபுன வாயிலே.
|
8
|
திருவளர் தாமரை மேவினா னும்திகழ் பாற்கடற் கருநிற வண்ணனும் காண்பரி யகட வுள்ளிடம் நரல்சுரி சங்கொடும் இப்பியுந் திந்நல மல்கிய பொருகடல் வெண்டிரை வந்தெறி யும்புன வாயிலே.
|
9
|
போதியெ னப்பெய ராயினா ரும்பொறி யில்சமண் சாதியு ரைப்பன கொண்டயர்ந் துதளர் வெய்தன்மின் போதவிழ் தண்பொழில் மல்குமந் தண்புன வாயிலில் வேதனை நாடொறு மேத்துவார் மேல்வினை வீடுமே.
|
10
|
Go to top |
பொற்றொடி யாளுமை பங்கன்மே வும்புன வாயிலைக் கற்றவர் தாந்தொழு தேத்தநின் றகடற் காழியான் நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன் னதமிழ் நன்மையால் அற்றமில் பாடல்பத் தேத்தவல் லார்அருள் சேர்வரே.
|
11
|