ஓங்கிமே லுழிதரு மொலிபுனற் கங்கையை யொருசடைமேல் தாங்கினா ரிடுபலி தலைகல னாக்கொண்ட தம்மடிகள் பாங்கினா லுமையொடு பகலிடம் புகலிடம் பைம்பொழில்சூழ் வீங்குநீர்த் துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே.
|
1
|
தூறுசேர் சுடலையிற் சுடரெரி யாடுவர் துளங்கொளிசேர் நீறுசாந் தெனவுகந் தணிவர்வெண் பிறைபுல்கு சடைமுடியார் நாறுசாந் திளமுலை யரிவையோ டொருபக லமர்ந்தபிரான் வீறுசேர் துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே.
|
2
|
மழைவள ரிளமதி மலரொடு தலைபுல்கு வார்சடைமேல் கழைவளர் புனல்புகக் கண்டவெங் கண்ணுதற் கபாலியார்தாம் இழைவளர் துகிலல்கு லரிவையோ டொருபக லமர்ந்தபிரான் விழைவளர் துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே.
|
3
|
கரும்பன வரிசிலைப் பெருந்தகைக் காமனைக் கவினழித்த சுரும்பொடு தேன்மல்கு தூமலர்க் கொன்றையஞ் சுடர்ச்சடையார் அரும்பன வனமுலை யரிவையொ டொருபக லமர்ந்தபிரான் விரும்பிடம் துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே
|
4
|
வளங்கிளர் மதியமும் பொன்மலர்க் கொன்றையும் வாளரவும் களங்கொளச் சடையிடை வைத்தஎங் கண்ணுதற் கபாலியார்தாம் துளங்குநூன் மார்பின ரரிவையொ டொருபக லமர்ந்தபிரான் விளங்குநீர்த் துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே.
|
5
|
Go to top |
பொறியுலா மடுபுலி யுரிவையர் வரியராப் பூண்டிலங்கும் நெறியுலாம் பலிகொளு நீர்மையர் சீர்மையை நினைப்பரியார் மறியுலாங் கையினர் மங்கையொ டொருபக லமர்ந்தபிரான் வெறியுலாந் துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே.
|
6
|
புரிதரு சடையினர் புலியுரி யரையினர் பொடியணிந்து திரிதரு மியல்பினர் திரிபுர மூன்றையுந் தீவளைத்தார் வரிதரு வனமுலை மங்கையொ டொருபக லமர்ந்தபிரான் விரிதரு துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே.
|
7
|
நீண்டிலங் கவிரொளி நெடுமுடி யரக்கனிந் நீள்வரையைக் கீண்டிடந் திடுவனென் றெழுந்தவ னாள்வினை கீழ்ப்படுத்தார் பூண்டநூன் மார்பின ரரிவையொ டொருபக லமர்ந்தபிரான் வேண்டிடந் துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே.
|
8
|
கரைகட லரவணைக் கடவுளுந் தாமரை நான்முகனும் குரைகழ லடிதொழக் கூரெரி யெனநிறங் கொண்டபிரான் வரைகெழு மகளொடும் பகலிடம் புகலிடம் வண்பொழில்சூழ் விரைகமழ் துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே.
|
9
|
அயமுக வெயினிலை யமணருங் குண்டருஞ் சாக்கியரும் நயமுக வுரையினர் நகுவன சரிதைகள் செய்துழல்வார் கயலன வரிநெடுங் கண்ணியொ டொருபக லமர்ந்தபிரான் வியனகர்த் துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே.
|
10
|
Go to top |
விண்ணுலாம் விரிபொழில் விரைமணற் றுருத்திவேள் விக்குடியும் ஒண்ணுலாம் மொலிகழ லாடுவா ரரிவையொ டுறைபதியை நண்ணுலாம் புகலியு ளருமறை ஞானசம் பந்தன்சொன்ன பண்ணுலா மருந்தமிழ் பாடுவா ராடுவார் பழியிலரே.
|
11
|