பூங்கொடி மடவா ளுமையொரு பாகம் புரிதரு சடைமுடி யடிகள் வீங்கிரு ணட்ட மாடுமெம் விகிர்தர் விருப்பொடு முறைவிடம் வினவில் தேங்கமழ் பொழிலிற் செழுமலர் கோதிச் செறிதரு வண்டிசை பாடும் ஓங்கிய புகழா ரோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே.
|
1
|
சம்பரற் கருளிச் சலந்தரன் வீயத் தழலுமிழ் சக்கரம் படைத்த எம்பெரு மானா ரிமையவ ரேத்த வினிதினங் குறைவிடம் வினவில் அம்பர மாகி யழலுமிழ் புகையி னாகுதி யான்மழை பொழியும் உம்பர்க ளேத்து மோமமாம் புலியூ ருடையவர் வடதளியதுவே.
|
2
|
பாங்குடைத் தவத்துப் பகீரதற் கருளிப் படர்சடைக் கரந்தநீர்க் கங்கை தாங்குத றவிர்த்துத் தராதலத் திழித்த தத்துவ னுறைவிடம் வினவில் ஆங்கெரி மூன்று மமர்ந்துட னிருந்த வங்கையா லாகுதி வேட்கும் ஓங்கிய மறையோ ரோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே.
|
3
|
புற்றர வணிந்து நீறுமெய் பூசிப் பூதங்கள் சூழ்தர வூரூர் பெற்றமொன் றேறிப் பெய்பலி கொள்ளும் பிரானவ னுறைவிடம் வினவில் கற்றநால் வேத மங்கமோ ராறுங் கருத்தினா ரருத்தியாற் றெரியும் உற்றபல் புகழா ரோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே.
|
4
|
நிலத்தவர் வான மாள்பவர் கீழோர் துயர்கெட நெடியமாற் கருளால் அலைத்தவல் லசுர ராசற வாழி யளித்தவ னுறைவிடம் வினவில் சலத்தினாற் பொருள்கள் வேண்டுதல் செய்யாத் தன்மையார் நன்மையான் மிக்க உலப்பில்பல் புகழா ரோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே.
|
5
|
Go to top |
மணந்திகழ் திசைக ளெட்டுமே ழிசையு மலியுமா றங்கமை வேள்வி இணைந்தநால் வேத மூன்றெரி யிரண்டு பிறப்பென வொருமையா லுணரும் குணங்களு மவற்றின் கொள்பொருள் குற்ற மற்றவை யுற்றது மெல்லாம் உணர்ந்தவர் வாழு மோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே.
|
6
|
தலையொரு பத்துந் தடக்கைய திரட்டி தானுடை யரக்கனொண் கயிலை அலைவது செய்த வவன்றிறல் கெடுத்த வாதியா ருறைவிடம் வினவில் மலையென வோங்கு மாளிகை நிலவு மாமதின் மாற்றல ரென்றும் உலவுபல் புகழா ரோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே.
|
8
|
கள்ளவிழ் மலர்மே லிருந்தவன் கரியோ னென்றிவர் காண்பரி தாய ஒள்ளெரி யுருவ ருமையவ ளோடு முகந்தினி துறைவிடம் வினவில் பள்ளநீர் வாளை பாய்தரு கழனிப் பனிமலர்ச் சோலைசூ ழாலை ஒள்ளிய புகழா ரோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே.
|
9
|
தெள்ளிய ரல்லாத் தேரரோ டமணர் தடுக்கொடு சீவர முடுக்கும் கள்ளமார் மனத்துக் கலதிகட் கருளாக் கடவுளா ருறைவிடம் வினவில் நள்ளிருள் யாம நான்மறை தெரிந்து நலந்திகழ் மூன்றெரி யோம்பும் ஒள்ளியார் வாழு மோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே.
|
10
|
Go to top |
விளைதரு வயலுள் வெயில்செறி பவள மேதிகண் மேய்புலத் திடறி ஒளிதர மல்கு மோமமாம் புலியூ ருடையவர் வடதளி யரனைக் களிதரு நிவப்பிற் காண்டகு செல்வக் காழியுண் ஞானசம் பந்தன் அளிதரு பாடல் பத்தும்வல் லார்க ளமரலோ கத்திருப் பாரே.
|
11
|