உருவும் அருவும் உருவோ டருவும் மருவும் பரசிவன் மன்பல் லுயிர்க்கும் குருவும் எனநிற்கும் கொள்கைய னாகும் தருவென நல்கும் சதாசிவன் தானே.
|
1
|
நாலான கீழ உருவம் நடுநிற்க மேலான நான்கும் அருவம் மிகநாப்பண் நாலான ஒன்றும் அருஉரு நண்ணலால் பாலாம் இவையாம் பரசிவன் தனே.
|
2
|
தேவர் பிரானைத் திசைமுகர் நாதனை நால்வர் பிரானை நடுவுற்ற நந்தியை யாவர் பிரான்என் றிறைஞ்சுவார் அவ்வ ஆவர் பிரான்அடி அண்ணலும் ஆமே.
|
3
|
வேண்டிநின் றேதொழு தேன்வினை போயற ஆண்டொடு திங்களும் நாளும் அளக்கின்ற காண்டகை யானொடும் கண்ணி யுணரினும் ஊண்டகை மாறினும் ஒன்றது ஆமே.
|
4
|
ஆதி பரதெய்வம் அண்டத்து நற்றெய்வம் சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம் நீதியுள் மாத்தெய்வம் நின்மலன் எம்இறை பாதியுள் மன்னும் பராசத்தி யாமே.
|
5
|
Go to top |
சத்திக்கு மேலே பராசத்தி தன்னுள்ளே சுத்த சிவபேதம் தோயாத தூவொளி அத்தன் திருவடிக் கப்பாலுக் கப்பாலாம் ஒத்தவும் ஆம்ஈசன் தானான உண்மையே.
|
6
|
கொழுந்தினைக் காணின் குலயம் தோன்றும் எழுந்திடம் காணின் இருக்கலும் ஆகும் பரம்திடம் காணின்பிந் பார்ப்பதி மேலே திரண்டெழக் கண்டவன் சிந்தை உளானே.
|
7
|
எந்தை பரமனும் என்னம்மை கூட்டமும் முந்த உரைத்து முறைசொல்லின் ஞானம்ஆம் சந்தித் திருந்த இடம்பெருங் கண்ணியை உந்திக்கு மேல்வைத் துகந்திருந் தானே.
|
8
|
சத்தி சிவன்விளை யாட்டாம் உயிர்ஆகில் ஒத்த இருமாயா கூட்டத் திடைஊட்டிச் சுத்தம தாகும் துரியம் பிரிவித்துச் சித்தம் புகுந்து சிவம்அகம் ஆக்குமே.
|
9
|
சத்தி சிவன்றன் விளையாட்டுத் தாரணி சத்தி சிவனுமாம் சிவன்சத் தியுமாகும் சத்தி சிவனன்றித் தாபரம் வேறில்லை சத்திதான் என்றும் சமைந்துரு வாகுமே. 7,
|
10
|
Go to top |