ஒளியை அறியில் உருவும் ஒளியும் ஒளியும் அருவம் அறியில் அருவாம் ஒளியின் உருவம் அறியில் ஒளியே ஒளியும் உருக உடன்இருந் தானே.
|
1
|
புகல்எளி தாகும் புவனங்கள் எட்டும் அகல்ஒளி தாய்இருள் ஆசற வீசும் பகல்ஒளி செய்ததும் அத்தா மரையில் இகல்ஒளி செய்தெம் பிரான் இருந்தானே.
|
2
|
விளங்கொளி அங்கி விரிகதிர் சோமன் துளங்கொளி பெற்றன சோதி அருள வளங்கொளி பெற்றது பேரொளி வேறு களங்கொளி செய்து கலந்துநின் றானே.
|
3
|
இளங்கொளி ஈசன் பிறப்பொன்றும் இல்லி துளங்கொளி ஞாயிறும் திங்களும் கண்கள் வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றி விளங்கொளி செய்கின்ற மெய்காயம் ஆமே.
|
4
|
மேலொளிக் கீழதின் மேவிய மாருதம் பார்ஒளி அங்கி பரந்தொளி ஆகாசம் நீர்ஒளி செய்து நெடுவிசும் பொன்றினும் ஓர் ஒளி ஐந்தும் ஒருங்கொளி யாமே.
|
5
|
Go to top |
மின்னியல் தூவொளி மேதக்க செவ்வொளி பன்னிய ஞானம் பரந்த பரத்தொளி துன்னிய ஆறொளி தூய்மொழி நாடொறும் உன்னிய ஆறொளி ஒத்தது தானே.
|
6
|
விளங்கொளி மின்னொளி யாகிக் கரந்து துளங்கொளி ஈசனைச் சொல்லும்எப் போதும் உளங்கொளி ஊனிடை நின்றுயிர்க் கின்ற வளங்கொளி எங்கும் மருவிநின் றானே.
|
7
|
விளங்கொளி அவ்வொளி அவ்விருள் மன்னும் துளங்கொளி யான்தொழு வார்க்கும் ஒளியான் அளங்கொளி யார்அமு தாரநஞ் சாரும் களங்கொளி ஈசன் கருதது மாமே.
|
8
|
இலங்கிய தெவ்வொளி அவ்வொளி ஈசன் துளங்கொளி போல்வது தூங்கருட் சத்தி விளங்கொளி மூன்றே விரிசுடர் தோன்றி உளங்கொளி யுள்ளே ஒருங்குகின் றானே.
|
9
|
உளங்கொளி யாவதென்? உள்நின்ற சீவன் வளங்கொளி யாய்நின்ற மாமணிச் சோதி விளங்கொளி யாய்மின்னி விண்ணில் ஒடுங்கி அளங்கொளி ஆயத்து ளாகிநின் றானே.
|
10
|
Go to top |
விளங்கொளி யான விகிர்தன் இருந்த துளங்கொளிப் பாசத்துள் தூங்கிருள் சேரா கலங்கொளி நட்டமே கண்ணுதல் ஆடி உளங்கொளி உன்மனத் தோன்றிநின் றானே.
|
11
|
போது கருங்குழல் போல்நவர் தூதிடை ஆதி பரத்தை அமரர் பிரானொடும் சோதியும் அண்டத்தப் பால் உற்ற தூவொளி நீதியின் அல்லிருள் நீக்கிய வாறே.
|
12
|
உண்டில்லை என்னும் உலகத் தியல்பிது பண்டில்லை என்னும் பரங்கதி உண்டுகொல் கண்டில்லை மானுடர் கண்ட கருத்துறின் விண்டில்லை உள்ளே விளக்கொளி யாமே.
|
13
|
சுடருற ஓங்கிய துள்ளொளி ஆங்கே படருறு காட்சிப் பகலவன் ஈசன் அடருறு மாயையின் ஆரிருள் வீசி உடலுறு ஞானத் துறவிய னாமே.
|
14
|
ஒளிபவ ளத்திரு மேனிவெண் ணீற்றன் அளிபவ ளச்செம்பொன் ஆதிப்பிரானும் களிபவ ளத்தினன் காரிருள் நீக்கி ஒளிபவ ளத்தென்னோ(டு) ஈசன்நின் றானே.
|
15
|
Go to top |
ஈசன்நின் றான்இமை யோர்கள்நின் றார்நின்ற தேசம்ஒன் றின்றித் திகைத்தழைக் கின்றனர் பாசம்ஒன் றாகப் பழவினைப் பற்றுற வாசம்ஒன் றாமலர் போன்றது தானே.
|
16
|
தானே இருக்கும் அவற்றின் தலைவனும் தானே இருக்கும் அவன்என நண்ணிடும் வானாய் இருக்கும்இம் மாயிரு ஞாலத்துப் பானாய் இருக்கப் பாவலும் ஆமே. 5,
|
17
|