| ஒளியை அறியில் உருவும் ஒளியும் ஒளியும் அருவம் அறியில் அருவாம்
 ஒளியின் உருவம் அறியில் ஒளியே
 ஒளியும் உருக உடன்இருந் தானே.
 
 
 
 | 1 
 
 
 | 
 | புகல்எளி தாகும் புவனங்கள் எட்டும் அகல்ஒளி தாய்இருள் ஆசற வீசும்
 பகல்ஒளி செய்ததும் அத்தா மரையில்
 இகல்ஒளி செய்தெம் பிரான் இருந்தானே.
 
 
 
 | 2 
 
 
 | 
 | விளங்கொளி அங்கி விரிகதிர் சோமன் துளங்கொளி பெற்றன சோதி அருள
 வளங்கொளி பெற்றது பேரொளி வேறு
 களங்கொளி செய்து கலந்துநின் றானே.
 
 
 
 | 3 
 
 
 | 
 | இளங்கொளி ஈசன் பிறப்பொன்றும் இல்லி துளங்கொளி ஞாயிறும் திங்களும் கண்கள்
 வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றி
 விளங்கொளி செய்கின்ற மெய்காயம் ஆமே.
 
 
 
 | 4 
 
 
 | 
 | மேலொளிக் கீழதின் மேவிய மாருதம் பார்ஒளி அங்கி பரந்தொளி ஆகாசம்
 நீர்ஒளி செய்து நெடுவிசும் பொன்றினும்
 ஓர் ஒளி ஐந்தும் ஒருங்கொளி யாமே.
 
 
 
 | 5 
 
 
 | 
| Go to top | 
  | மின்னியல் தூவொளி மேதக்க செவ்வொளி பன்னிய ஞானம் பரந்த பரத்தொளி
 துன்னிய ஆறொளி தூய்மொழி நாடொறும்
 உன்னிய ஆறொளி ஒத்தது தானே.
 
 
 
 | 6 
 
 
 | 
 | விளங்கொளி மின்னொளி யாகிக் கரந்து துளங்கொளி ஈசனைச் சொல்லும்எப் போதும்
 உளங்கொளி ஊனிடை நின்றுயிர்க் கின்ற
 வளங்கொளி எங்கும் மருவிநின் றானே.
 
 
 
 | 7 
 
 
 | 
 | விளங்கொளி அவ்வொளி அவ்விருள் மன்னும் துளங்கொளி யான்தொழு வார்க்கும் ஒளியான்
 அளங்கொளி யார்அமு தாரநஞ் சாரும்
 களங்கொளி ஈசன் கருதது மாமே.
 
 
 
 | 8 
 
 
 | 
 | இலங்கிய தெவ்வொளி அவ்வொளி ஈசன் துளங்கொளி போல்வது தூங்கருட் சத்தி
 விளங்கொளி மூன்றே விரிசுடர் தோன்றி
 உளங்கொளி யுள்ளே ஒருங்குகின் றானே.
 
 
 
 | 9 
 
 
 | 
 | உளங்கொளி யாவதென்? உள்நின்ற சீவன் வளங்கொளி யாய்நின்ற மாமணிச் சோதி
 விளங்கொளி யாய்மின்னி விண்ணில் ஒடுங்கி
 அளங்கொளி ஆயத்து ளாகிநின் றானே.
 
 
 
 | 10 
 
 
 | 
| Go to top | 
  | விளங்கொளி யான விகிர்தன் இருந்த துளங்கொளிப் பாசத்துள் தூங்கிருள் சேரா
 கலங்கொளி நட்டமே கண்ணுதல் ஆடி
 உளங்கொளி உன்மனத் தோன்றிநின் றானே.
 
 
 
 | 11 
 
 
 | 
 | போது கருங்குழல் போல்நவர் தூதிடை ஆதி பரத்தை அமரர் பிரானொடும்
 சோதியும் அண்டத்தப் பால் உற்ற தூவொளி
 நீதியின் அல்லிருள் நீக்கிய வாறே.
 
 
 
 | 12 
 
 
 | 
 | உண்டில்லை என்னும் உலகத் தியல்பிது பண்டில்லை என்னும் பரங்கதி உண்டுகொல்
 கண்டில்லை மானுடர் கண்ட கருத்துறின்
 விண்டில்லை உள்ளே விளக்கொளி யாமே.
 
 
 
 | 13 
 
 
 | 
 | சுடருற ஓங்கிய துள்ளொளி ஆங்கே படருறு காட்சிப் பகலவன் ஈசன்
 அடருறு மாயையின் ஆரிருள் வீசி
 உடலுறு ஞானத் துறவிய னாமே.
 
 
 
 | 14 
 
 
 | 
 | ஒளிபவ ளத்திரு மேனிவெண் ணீற்றன் அளிபவ ளச்செம்பொன் ஆதிப்பிரானும்
 களிபவ ளத்தினன் காரிருள் நீக்கி
 ஒளிபவ ளத்தென்னோ(டு) ஈசன்நின் றானே.
 
 
 
 | 15 
 
 
 | 
| Go to top | 
  | ஈசன்நின் றான்இமை யோர்கள்நின் றார்நின்ற தேசம்ஒன் றின்றித் திகைத்தழைக் கின்றனர்
 பாசம்ஒன் றாகப் பழவினைப் பற்றுற
 வாசம்ஒன் றாமலர் போன்றது தானே.
 
 
 
 | 16 
 
 
 | 
 | தானே இருக்கும் அவற்றின் தலைவனும் தானே இருக்கும் அவன்என நண்ணிடும்
 வானாய் இருக்கும்இம் மாயிரு ஞாலத்துப்
 பானாய் இருக்கப் பாவலும் ஆமே. 5,
 
 
 
 | 17 
 
 
 |