| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
+ Show Meaning https://www.youtube.com/watch?v=cGo7sTd0afU Add audio link
4.077
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொது -தனித் திருநேரிசை - திருநேரிசை அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
கடும்பகல் நட்டம் ஆடி, கையில் ஓர் கபாலம் ஏந்தி,
இடும் பலிக்கு இல்லம் தோறும் உழி தரும் இறைவனீரே!
நெடும் பொறை மலையர் பாவை நேரிழை நெறி மென் கூந்தல்
கொடுங்குழை புகுந்த அன்றும் கோவணம் அரையதேயோ?
1
கோவணம் உடுத்த ஆறும், கோள் அரவு அசைத்த ஆறும்,
தீ வணச் சாம்பர் பூசித் திரு உரு இருந்த ஆறும்,
பூவணக் கிழவனாரை புலி உரி அரையனாரை,
ஏ வணச் சிலையினாரை, யாவரே எழுதுவாரே?
2
விளக்கினால் பெற்ற இன்பம் மெழுக்கினால் பதிற்றி ஆகும்;
துளக்கு இல் நல் மலர் தொடுத்தால்-தூய விண் ஏறல் ஆகும்;
விளக்கு இட்டார் பேறு, சொல்லின், மெய்ஞ்ஞெறி ஞானம் ஆகும்;
அளப்பு இல கீதம் சொன்னார்க்கு அடிகள் தாம் அருளும் ஆறே!
3
சந்திரன் சடையில் வைத்த சங்கரன், சாமவேதி,
அந்தரத்து அமரர் பெம்மான், ஆன் நல் வெள் ஊர்தியான் தன்
மந்திரம் நமச்சிவாய ஆக, நீறு அணியப் பெற்றால்,
வெந்து அறும், வினையும் நோயும் வெவ் அழல் விறகு இட்டன்றே!
4
புள்ளுவர் ஐவர் கள்வர் புனத்து இடைப் புகுந்து நின்று
துள்ளுவர், சூறை கொள்வர்; தூ நெறி விளைய ஒட்டார்
முள் உடையவர்கள் தம்மை முக்கணான் பாத நீழல்
உள் இடை மறைந்து நின்று, அங்கு உணர்வினால் எய்யல் ஆமே.
5
Go to top
தொண்டனேன் பிறந்து, வாளா தொல் வினைக் குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து, நாளும் பெரியது ஓர் அவாவில் பட்டேன்;
அண்டனே! அமரர்கோவே! அறிவனே! அஞ்சல் என்னாய்-
தெண் திரைக் கங்கை சூடும் திருத் தகு சடையினானே!
6
பாறினாய்,-பாவி நெஞ்சே!-பன்றி போல் அளற்றில் பட்டு
தேறி நீ நினைதி ஆயின், சிவகதி திண்ணம் ஆகும்;
ஊறலே உவர்ப்பு நாறி, உதிரமே ஒழுகும் வாசல்
கூறையால் மூடக் கண்டு கோலமாக் கருதினாயே!
7
உய்த்த கால் உதயத்து உம்பர் உமை அவள் நடுக்கம் தீர
வைத்த கால், அரக்கனோ தன் வான்முடி தனக்கு நேர்ந்தான்;
மொய்த்த கான் முகிழ் வெண் திங்கள் மூர்த்தி என் உச்சி தன் மேல்
வைத்த கால் வருந்தும் என்று வாடி நான் ஒடுங்கினேனே.
8
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: பொது -தனித் திருநேரிசை
4.075
திருநாவுக்கரசர்
தேவாரம்
தொண்டனேன் பட்டது என்னே! தூய
Tune - கொல்லி
(பொது -தனித் திருநேரிசை )
4.076
திருநாவுக்கரசர்
தேவாரம்
மருள் அவா மனத்தன் ஆகி
Tune - திருநேரிசை
(பொது -தனித் திருநேரிசை )
4.077
திருநாவுக்கரசர்
தேவாரம்
கடும்பகல் நட்டம் ஆடி, கையில்
Tune - திருநேரிசை
(பொது -தனித் திருநேரிசை )