சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
208   சுவாமிமலை திருப்புகழ் ( குருஜி இராகவன் # 98 - வாரியார் # 232 )  

கடாவினிடை

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனாதனன தானம் தனாதனன தானம்
     தனாதனன தானம் ...... தனதான


கடாவினிடை வீரங் கெடாமலினி தேறுங்
     கடாவினிக ராகுஞ் ...... சமனாருங்
கடாவிவிடு தூதன் கெடாதவழி போலுங்
     கனாவில்விளை யாடுங் ...... கதைபோலும்
இடாதுபல தேடுங் கிராதர்பொருள் போலிங்
     கிராமலுயிர் கோலிங் ...... கிதமாகும்
இதாமெனிரு போதுஞ் சதாவின்மொழி யாலின்
     றியானுமுனை யோதும் ...... படிபாராய்
விடாதுநட நாளும் பிடாரியுட னாடும்
     வியாகரண ஈசன் ...... பெருவாழ்வே
விகாரமுறு சூரன் பகாரமுயிர் வாழ்வும்
     விநாசமுற வேலங் ...... கெறிவோனே
தொடாதுநெடு தூரந் தடாதுமிக வோடுஞ்
     சுவாசமது தானைம் ...... புலனோடுஞ்
சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேருஞ்
     சுவாமிமலை வாழும் ...... பெருமாளே.

கடாவினிடை வீரங் கெடாமல்
இனிது ஏறுங் கடாவின் நிகராகுஞ் சமனாரும்
கடாவிவிடு தூதன்
கெடாதவழி போலும்
கனாவில் விளையாடுங் கதைபோலும்
இடாதுபல தேடுங் கிராதர்பொருள்போல்
இங்கிராமல் உயிர் கோலிங்கு
இதமாகும் இதாம் என
இரு போதுஞ் சதா இன்மொழியால்
இன்று யானும் உனை ஓதும்படி பாராய்
விடாதுநட நாளும் பிடாரியுட னாடும்
வியாகரண ஈசன்பெருவாழ்வே
விகாரமுறு சூரன்
பகாரமுயிர் வாழ்வும் விநாசமுற
வேல் அங்கு எறிவோனே
தொடாதுநெடு தூரந் தடாது
மிக வோடுஞ் சுவாசமதுதான்
ஐம்புலனோடுஞ் சுபானமுறு
ஞானந் தபோதனர்கள் சேரும்
சுவாமிமலை வாழும் பெருமாளே.
எருமைக்கடா வாகனத்தின் மேல் தனது வீரம் குன்றாமல் விரும்பி ஏறும், கடாவைப் போன்ற முரட்டு யமனும் கட்டளை இட்டு ஏவிவிட்ட யமதூதன் தவறாமல் சரியான வழியில் வந்து உயிரைப் பற்றுதல் போலும், கனவில் தோன்றிய விளையாட்டு விழித்தால் மறப்பது போலும், கொடுக்காமல் பலப்பல தேடும் கொடியவர் பொருள் போலும், இவ்வுலகில் நிலைத்து நிற்காதவண்ணம் உயிர் பறி போகிற சுகம்தான் இந்த வாழ்க்கையென்று உணர்ந்து, காலையும் மாலையும் மற்றும் எப்போதும் நல்வார்த்தைகளால் இன்று அடியேனும் உன்னைத் துதிக்க கண்பார்த்தருள்வாய். எந்நாளும் விடாமல் நடனத்தை காளியுடன் ஆடுகின்ற நாட்டிய இலக்கண நிபுணனாம் சிவபெருமான் பெற்ற பெரும் செல்வமே, மாறுபட்ட குணமுடைய சூரனின் பகட்டான வாழ்வும் உயிரும் அழியும்படியாக அவ்விடத்தில் வேலாயுதத்தை விடுத்தவனே, தொட முடியாத காற்றாகவும், நெடுந்தூரம் தடைபடாமல் விடாமல் ஓடுகின்றதுமான பிராணவாயுவையும், ஐந்து புலன்களையும் நன்றாக யோகமுறையால் உள்ளே அடக்கவல்ல ஞானத் தவசிகள் கூடுகின்ற சுவாமிமலையில் எழுந்தருளியுள்ள பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
கடாவினிடை வீரங் கெடாமல் ... எருமைக்கடா வாகனத்தின் மேல்
தனது வீரம் குன்றாமல்
இனிது ஏறுங் கடாவின் நிகராகுஞ் சமனாரும் ... விரும்பி ஏறும்,
கடாவைப் போன்ற முரட்டு யமனும்
கடாவிவிடு தூதன் ... கட்டளை இட்டு ஏவிவிட்ட யமதூதன்
கெடாதவழி போலும் ... தவறாமல் சரியான வழியில் வந்து உயிரைப்
பற்றுதல் போலும்,
கனாவில் விளையாடுங் கதைபோலும் ... கனவில் தோன்றிய
விளையாட்டு விழித்தால் மறப்பது போலும்,
இடாதுபல தேடுங் கிராதர்பொருள்போல் ... கொடுக்காமல்
பலப்பல தேடும் கொடியவர் பொருள் போலும்,
இங்கிராமல் உயிர் கோலிங்கு ... இவ்வுலகில் நிலைத்து
நிற்காதவண்ணம் உயிர் பறி போகிற
இதமாகும் இதாம் என ... சுகம்தான் இந்த வாழ்க்கையென்று
உணர்ந்து,
இரு போதுஞ் சதா இன்மொழியால் ... காலையும் மாலையும்
மற்றும் எப்போதும் நல்வார்த்தைகளால்
இன்று யானும் உனை ஓதும்படி பாராய் ... இன்று அடியேனும்
உன்னைத் துதிக்க கண்பார்த்தருள்வாய்.
விடாதுநட நாளும் பிடாரியுட னாடும் ... எந்நாளும் விடாமல்
நடனத்தை காளியுடன் ஆடுகின்ற
வியாகரண ஈசன்பெருவாழ்வே ... நாட்டிய இலக்கண நிபுணனாம்
சிவபெருமான் பெற்ற பெரும் செல்வமே,
விகாரமுறு சூரன் ... மாறுபட்ட குணமுடைய சூரனின்
பகாரமுயிர் வாழ்வும் விநாசமுற ... பகட்டான வாழ்வும் உயிரும்
அழியும்படியாக
வேல் அங்கு எறிவோனே ... அவ்விடத்தில் வேலாயுதத்தை
விடுத்தவனே,
தொடாதுநெடு தூரந் தடாது ... தொட முடியாத காற்றாகவும்,
நெடுந்தூரம் தடைபடாமல்
மிக வோடுஞ் சுவாசமதுதான் ... விடாமல் ஓடுகின்றதுமான
பிராணவாயுவையும்,
ஐம்புலனோடுஞ் சுபானமுறு ... ஐந்து புலன்களையும் நன்றாக
யோகமுறையால் உள்ளே அடக்கவல்ல
ஞானந் தபோதனர்கள் சேரும் ... ஞானத் தவசிகள் கூடுகின்ற
சுவாமிமலை வாழும் பெருமாளே. ... சுவாமிமலையில்
எழுந்தருளியுள்ள பெருமாளே.
Similar songs:

204 - இராவினிருள் போலும் (சுவாமிமலை)

தனாதனன தானம் தனாதனன தானம்
     தனாதனன தானம் ...... தனதான

208 - கடாவினிடை (சுவாமிமலை)

தனாதனன தானம் தனாதனன தானம்
     தனாதனன தானம் ...... தனதான

Songs from this thalam சுவாமிமலை

201 - அவாமருவு

202 - ஆனனம் உகந்து

203 - ஆனாத பிருதி

204 - இராவினிருள் போலும்

205 - இருவினை புனைந்து

206 - எந்தத் திகையினும்

207 - ஒருவரையும் ஒருவர்

208 - கடாவினிடை

209 - கடிமா மலர்க்குள்

210 - கதிரவனெ ழுந்து

211 - கறை படும் உடம்பு

212 - காமியத் தழுந்தி

213 - குமரகுருபர முருக குகனே

214 - குமர குருபர முருக சரவண

215 - கோமள வெற்பினை

216 - சரண கமலாலயத்தில்

217 - சுத்திய நரப்புடன்

218 - செகமாயை உற்று

219 - சேலும் அயிலும்

220 - தருவர் இவர்

221 - தெருவினில் நடவா

222 - நாசர்தங் கடை

223 - நாவேறு பா மணத்த

224 - நிலவினிலே

225 - நிறைமதி முகமெனும்

226 - பரவரிதாகி

227 - பலகாதல் பெற்றிட

228 - பாதி மதிநதி

229 - மகர கேதனத்தன்

230 - மருவே செறித்த

231 - முறுகு காள

232 - வாதமொடு சூலை

233 - வாரம் உற்ற

234 - வார்குழலை

235 - வார்குழல் விரித்து

236 - விடமும் வடிவேலும்

237 - விரித்த பைங்குழல்

238 - விழியால் மருட்டி

1336 - வறுமைப் பாழ்பிணி

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 208