சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
257   திருத்தணிகை திருப்புகழ் ( குருஜி இராகவன் # 127 - வாரியார் # 258 )  

கவடுற்ற சித்தர்

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனனத்த தத்தனத் தனனத்த தத்தனத்
     தனனத்த தத்தனத் ...... தனதான


கவடுற்ற சித்தர்சட் சமயப்ர மத்தர்நற்
     கடவுட்ப்ர திஷ்டைபற் ...... பலவாகக்
கருதிப்பெ யர்க்குறித் துருவர்க்க மிட்டிடர்க்
     கருவிற்பு கப்பகுத் ...... துழல்வானேன்
சவடிக்கி லச்சினைக் கிருகைச்ச ரிக்குமிக்
     கசரப்ப ளிக்கெனப் ...... பொருள்தேடி
சகலத்து மொற்றைபட் டயல்பட்டு நிற்குநின்
     சரணப்ர சித்திசற் ...... றுணராரோ
குவடெட்டு மட்டுநெட் டுவரிக்க ணத்தினைக்
     குமுறக்க லக்கிவிக் ...... ரமசூரன்
குடலைப்பு யத்திலிட் டுடலைத்த றித்துருத்
     துதிரத்தி னிற்குளித் ...... தெழும்வேலா
சுவடுற்ற அற்புதக் கவலைப்பு னத்தினிற்
     றுவலைச்சி மிழ்த்துநிற் ...... பவள்நாணத்
தொழுதெத்து முத்தபொற் புரிசைச்செ ருத்தணிச்
     சுருதித்த மிழ்க்கவிப் ...... பெருமாளே.

கவடுற்ற சித்தர்
சட் சமயப்ர மத்தர்
நற் கடவுட்ப்ர திஷ்டைபற்பலவாகக் கருதி
பெயர்க்குறித்து
உருவர்க்கம் இட்டு
இடர்க் கருவிற்புகப் பகுத்து உழல்வானேன்
சவடிக்கு இலச்சினைக்கு இருகைச் சரிக்கும்
மிக்க சரப்பளிக்கு எனப் பொருள்தேடி
சகலத்தும் ஒற்றைபட்டு அயல்பட்டு நிற்குநின்
சரணப்ரசித்தி சற்றுணராரோ
குவடு எட்டும் அட்டு
நெட்டு உவரிக்கணத்தினைக் குமுறக் கலக்கி
விக்ரமசூரன் குடலைப்புயத்திலிட்டு
உடலைத்தறித்து உருத்து உதிரத்தினிற்குளித்து எழும்வேலா
சுவடுற்ற அற்புதக் கவலைப்புனத்தினில்
துவலைச்சிமிழ்த்து நிற்பவள்நாணத் தொழுதெத்து முத்த
பொற் புரிசைச்செருத்தணி
சுருதித் தமிழ்க்கவிப் பெருமாளே.
வஞ்சக எண்ணம் கொண்ட சித்தர்களும், ஆறு சமயங்களையும் மேற்கொண்டு வாதம் செய்யும் வெறியர்களும், சிறந்த கடவுளர்களின் பிரதிஷ்டை என்ற பெயரில் பலப்பல வகையாக யோசித்து, அந்தக் கடவுளருக்குப் பெயர்களைக் குறிப்பிட்டு வைத்து, உருவ அமைப்புக்களை (சிலை, யந்திரம் முதலியவற்றில் வடித்து) ஏற்படுத்தி, துன்ப மயமான கருவிலே புகுவதற்குக் காரணமான பிரிவினை மனப்பான்மையுடன் ஏன் அலைந்து திரிகிறார்கள்? பொன் சரட்டில் கோத்த சங்கிலிக்கும், முத்திரை மோதிரத்துக்கும், இரண்டு கைகளிலும் அணியும் வளையல்களுக்கும், மேலான வைர அட்டிகைக்கும் என்று பெண்களுக்குத் தரும் நகைகளுக்காகப் பொருளைத் தேடிய மக்கள், அனைத்திலும் ஒன்றுபட்டுக் கலந்து, அதேசமயம் கலவாமல் வேறுபட்டு நிற்கும் உனது திருவடிகளின் பெருமையைச் சற்றேனும் உணரமாட்டார்களோ? (கிரெளஞ்சகிரி, சூரனின் ஏழு குல மலைகள் ஆகிய) எட்டு மலைகளையும் அழித்து, பரந்த கடல்களின் கூட்டத்தை ஒலி செய்யும்படி கலக்கி, வீரம் நிறைந்த சூரனின் குடலைத் தோளில் மாலையாகத் தரித்து, அவனது உடலைப் பிளந்து, கோபித்து, அவனுடைய ரத்தத்தில் குளித்து எழுந்த வேலாயுதத்தை உடையவனே, வள்ளியின் திருவடிச் சுவடுகள் பதிந்த அற்புதமான தினைப்புனத்தில், உதிரிப் பூக்களை மாலையாகக் கட்டி அணிந்து நின்ற வள்ளி நாணும்படியாக அவளைத் தொழுது புகழ்ந்த முக்தனே, அழகிய மதில்கள் சூழ்ந்த திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும், வேதமாகிய தேவாரத் தமிழ்க் கவிதைகளைத் தந்த (திருஞான சம்பந்தப்) பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
கவடுற்ற சித்தர் ... வஞ்சக எண்ணம் கொண்ட சித்தர்களும்,
சட் சமயப்ர மத்தர் ... ஆறு சமயங்களையும் மேற்கொண்டு வாதம்
செய்யும் வெறியர்களும்,
நற் கடவுட்ப்ர திஷ்டைபற்பலவாகக் கருதி ... சிறந்த
கடவுளர்களின் பிரதிஷ்டை என்ற பெயரில் பலப்பல வகையாக யோசித்து,
பெயர்க்குறித்து ... அந்தக் கடவுளருக்குப் பெயர்களைக் குறிப்பிட்டு
வைத்து,
உருவர்க்கம் இட்டு ... உருவ அமைப்புக்களை (சிலை, யந்திரம்
முதலியவற்றில் வடித்து) ஏற்படுத்தி,
இடர்க் கருவிற்புகப் பகுத்து உழல்வானேன் ... துன்ப மயமான
கருவிலே புகுவதற்குக் காரணமான பிரிவினை மனப்பான்மையுடன் ஏன்
அலைந்து திரிகிறார்கள்?
சவடிக்கு இலச்சினைக்கு இருகைச் சரிக்கும் ... பொன் சரட்டில்
கோத்த சங்கிலிக்கும், முத்திரை மோதிரத்துக்கும், இரண்டு கைகளிலும்
அணியும் வளையல்களுக்கும்,
மிக்க சரப்பளிக்கு எனப் பொருள்தேடி ... மேலான வைர
அட்டிகைக்கும் என்று பெண்களுக்குத் தரும் நகைகளுக்காகப்
பொருளைத் தேடிய மக்கள்,
சகலத்தும் ஒற்றைபட்டு அயல்பட்டு நிற்குநின் ... அனைத்திலும்
ஒன்றுபட்டுக் கலந்து, அதேசமயம் கலவாமல் வேறுபட்டு நிற்கும் உனது
சரணப்ரசித்தி சற்றுணராரோ ... திருவடிகளின் பெருமையைச்
சற்றேனும் உணரமாட்டார்களோ?
குவடு எட்டும் அட்டு ... (கிரெளஞ்சகிரி, சூரனின் ஏழு குல
மலைகள் ஆகிய) எட்டு மலைகளையும் அழித்து,
நெட்டு உவரிக்கணத்தினைக் குமுறக் கலக்கி ... பரந்த
கடல்களின் கூட்டத்தை ஒலி செய்யும்படி கலக்கி,
விக்ரமசூரன் குடலைப்புயத்திலிட்டு ... வீரம் நிறைந்த சூரனின்
குடலைத் தோளில் மாலையாகத் தரித்து,
உடலைத்தறித்து உருத்து உதிரத்தினிற்குளித்து எழும்வேலா ...
அவனது உடலைப் பிளந்து, கோபித்து, அவனுடைய ரத்தத்தில் குளித்து
எழுந்த வேலாயுதத்தை உடையவனே,
சுவடுற்ற அற்புதக் கவலைப்புனத்தினில் ... வள்ளியின் திருவடிச்
சுவடுகள் பதிந்த அற்புதமான தினைப்புனத்தில்,
துவலைச்சிமிழ்த்து நிற்பவள்நாணத் தொழுதெத்து முத்த ...
உதிரிப் பூக்களை மாலையாகக் கட்டி அணிந்து நின்ற வள்ளி
நாணும்படியாக அவளைத் தொழுது புகழ்ந்த முக்தனே,
பொற் புரிசைச்செருத்தணி ... அழகிய மதில்கள் சூழ்ந்த
திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும்,
சுருதித் தமிழ்க்கவிப் பெருமாளே. ... வேதமாகிய தேவாரத் தமிழ்க்
கவிதைகளைத் தந்த (திருஞான சம்பந்தப்) பெருமாளே.
Similar songs:

257 - கவடுற்ற சித்தர் (திருத்தணிகை)

தனனத்த தத்தனத் தனனத்த தத்தனத்
     தனனத்த தத்தனத் ...... தனதான

Songs from this thalam திருத்தணிகை

239 - அமைவுற்று அடைய

240 - அரகர சிவன் அரி

241 - அருக்கி மெத்தென

242 - இருப்பவல் திருப்புகழ்

243 - இருமலு ரோக

244 - உடலி னூடு

245 - உடையவர்கள் ஏவர்

246 - உய்யஞானத்து நெறி

247 - எத்தனை கலாதி

248 - எலுப்பு நாடிகள்

249 - எனக்கென யாவும்

250 - எனை அடைந்த

251 - ஏது புத்தி

252 - ஓலை இட்ட

253 - கச்சணி இளமுலை

254 - கடற்செகத் தடக்கி

255 - கரிக்குழல் விரித்தும்

256 - கலை மடவார்தம்

257 - கவடுற்ற சித்தர்

258 - கனத்த அற

259 - கனைத்து அதிர்க்கும்

260 - கிரி உலாவிய

261 - கிறி மொழி

262 - குயில் ஒன்று

263 - குருவி என

264 - குலைத்து மயிர்

265 - குவளைக் கணை

266 - கூந்தல் அவிழ்த்து

267 - கூர்வேல் பழித்த

268 - கொந்துவார் குரவடி

269 - சினத்தவர் முடிக்கும்

270 - சினத் திலத் தினை

271 - சொரியும் முகிலை

272 - தாக்கு அமருக்கு

273 - திருட்டு நாரிகள்

274 - துப் பார் அப்பு

275 - தொக்கறாக் குடில்

276 - தொடத்துளக்கிகள்

277 - நிலையாத சமுத்திர

278 - நினைத்தது எத்தனை

279 - பகல் இராவினும்

280 - பருத்தபற் சிரத்தினை

281 - பழமை செப்பிய

282 - புருவ நெறித்து

283 - பூசலிட்டு

284 - பெருக்க உபாயம்

285 - பொரியப் பொரிய

286 - பொருவிக் கந்தொடு

287 - பொற்குடம் ஒத்த

288 - பொற் பதத்தினை

289 - மருக்குல மேவும்

290 - மலை முலைச்சியர்

291 - முகத்தை மினுக்கி

292 - முகிலும் இரவியும்

293 - முடித்த குழலினர்

294 - முத்துத் தெறிக்க

295 - முலைபுளகம் எழ

296 - மொகுமொகு என

297 - வங்கம் பெறு

298 - வட்ட வாள் தன

299 - வரிக் கலையின்

300 - வார் உற்று எழும்

301 - வினைக்கு இனமாகும்

302 - வெற்றி செயவுற்ற

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 257