சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
301   திருத்தணிகை திருப்புகழ் ( குருஜி இராகவன் # 144 - வாரியார் # 301 )  

வினைக்கு இனமாகும்

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனத்தன தானம் தனத்தன தானம்
     தனத்தன தானம் ...... தனதான


வினைக்கின மாகுத் தனத்தினர் வேளம்
     பினுக்கெதி ராகும் ...... விழிமாதர்
மிகப்பல மானந் தனிற்புகு தாவெஞ்
     சமத்திடை போய்வந் ...... துயர்மூழ்கிக்
கனத்தவி சாரம் பிறப்படி தோயுங்
     கருக்குழி தோறுங் ...... கவிழாதே
கலைப்புல வோர்பண் படைத்திட வோதுங்
     கழற்புக ழோதுங் ...... கலைதாராய்
புனத்திடை போய்வெஞ் சிலைக்குற வோர்வஞ்
     சியைப்புணர் வாகம் ...... புயவேளே
பொருப்பிரு கூறும் படக்கடல் தானும்
     பொருக்கெழ வானும் ...... புகைமூளச்
சினத்தொடு சூரன் கனத்திணி மார்பந்
     திறக்கம ராடுந் ...... திறல்வேலா
திருப்புக ழோதுங் கருத்தினர் சேருந்
     திருத்தணி மேவும் ...... பெருமாளே.

வினைக்கு இனமாகும் தனத்தினர் வேள் அம்பினுக்கு எதிர்
ஆகும் விழி மாதர்
மிகப் பல மானம் தனில் புகுதா
வெம் சமத்திடை போய் வெம் துயர் மூழ்கி
கனத்த விசாரம் பிறப்பு அடி தோயும் கருக் குழி தோறும்
கவிழாதே
கலைப் புலவோர் பண் படைத்திட ஓதும் கழல் புகழ் ஓதும்
கலை தாராய்
புனத்து இடை போய் வெம் சிலை குறவோர் வஞ்சியைப்
புணர் வாகம் புய வேளே
பொருப்பு இரு கூறும் பட கடல் தானும் பொருக்கு எழ
வானும் புகை மூள
சினத்தோடு சூரன் கனத்(த) தி(ண்)ணி(ய) மார்பம் திறக்க
அமர் ஆடும் திறல் வேலா
திருப்புகழ் ஓதும் கருத்தினர் சேரும் திருத்தணி மேவும்
பெருமாளே.
வினையைப் பெருக்குவதற்குக் காரணமான மார்பினை உடையவர்கள், மன்மதனுடைய அம்புக்கு ஒப்பாகும் கண்களை உடையவர்களாகிய விலைமாதர்கள் (மீது வைத்த ஆசையால்), மிகப் பலவான அவமானச் செயல்களில் நுழைந்து, விரும்பிய காமரசப் போர்களிலே ஈடுபட்டு, கொடிய துன்பங்களில் முழுகி அநுபவித்து, தாங்கமுடியாத கவலை அடைந்து, பிறவிக்கு வழி வகுக்கும் கருக்குழிக்குள் மீண்டும் நான் குப்புற விழுந்திடாதபடி, கலைவல்லமை வாய்ந்த புலவர்கள் இசையுடன் சீராக ஓதுகின்ற உனது திருவடிகளின் புகழை ஓதும்படியான கலை ஞானத்தைத் தந்தருள்க. தினைப் புனத்துக்குப் போய், கொடிய வில்லேந்திய குறவர்களின் கொடி போன்ற வள்ளியைச் சேர்ந்த அழகிய புயங்களை உடையவனே, கிரெளஞ்ச மலை இரண்டு கூறாகும்படியும், கடலும் வற்றி போய்க் காய்ந்திடவும், வானமும் புகை மூண்டிடவும், கோபத்துடன், சூரனுடைய கனத்த, திண்ணிய மார்பு பிளவுபடும்படியாகவும் போர் செய்த வீர வேலாயுதனே, திருப்புகழ் ஓதும் கருத்துள்ள அடியார்கள் கூடுகின்ற திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
வினைக்கு இனமாகும் தனத்தினர் வேள் அம்பினுக்கு எதிர்
ஆகும் விழி மாதர்
... வினையைப் பெருக்குவதற்குக் காரணமான
மார்பினை உடையவர்கள், மன்மதனுடைய அம்புக்கு ஒப்பாகும்
கண்களை உடையவர்களாகிய விலைமாதர்கள் (மீது வைத்த ஆசையால்),
மிகப் பல மானம் தனில் புகுதா ... மிகப் பலவான அவமானச்
செயல்களில் நுழைந்து,
வெம் சமத்திடை போய் வெம் துயர் மூழ்கி ... விரும்பிய காமரசப்
போர்களிலே ஈடுபட்டு, கொடிய துன்பங்களில் முழுகி அநுபவித்து,
கனத்த விசாரம் பிறப்பு அடி தோயும் கருக் குழி தோறும்
கவிழாதே
... தாங்கமுடியாத கவலை அடைந்து, பிறவிக்கு வழி
வகுக்கும் கருக்குழிக்குள் மீண்டும் நான் குப்புற விழுந்திடாதபடி,
கலைப் புலவோர் பண் படைத்திட ஓதும் கழல் புகழ் ஓதும்
கலை தாராய்
... கலைவல்லமை வாய்ந்த புலவர்கள் இசையுடன்
சீராக ஓதுகின்ற உனது திருவடிகளின் புகழை ஓதும்படியான கலை
ஞானத்தைத் தந்தருள்க.
புனத்து இடை போய் வெம் சிலை குறவோர் வஞ்சியைப்
புணர் வாகம் புய வேளே
... தினைப் புனத்துக்குப் போய், கொடிய
வில்லேந்திய குறவர்களின் கொடி போன்ற வள்ளியைச் சேர்ந்த
அழகிய புயங்களை உடையவனே,
பொருப்பு இரு கூறும் பட கடல் தானும் பொருக்கு எழ
வானும் புகை மூள
... கிரெளஞ்ச மலை இரண்டு கூறாகும்படியும்,
கடலும் வற்றி போய்க் காய்ந்திடவும், வானமும் புகை மூண்டிடவும்,
சினத்தோடு சூரன் கனத்(த) தி(ண்)ணி(ய) மார்பம் திறக்க
அமர் ஆடும் திறல் வேலா
... கோபத்துடன், சூரனுடைய கனத்த,
திண்ணிய மார்பு பிளவுபடும்படியாகவும் போர் செய்த வீர வேலாயுதனே,
திருப்புகழ் ஓதும் கருத்தினர் சேரும் திருத்தணி மேவும்
பெருமாளே.
... திருப்புகழ் ஓதும் கருத்துள்ள அடியார்கள்
கூடுகின்ற திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே.
Similar songs:

249 - எனக்கென யாவும் (திருத்தணிகை)

தனத்தன தானம் தனத்தன தானம்
     தனத்தன தானம் ...... தனதான

284 - பெருக்க உபாயம் (திருத்தணிகை)

தனத்தன தானம் தனத்தன தானம்
     தனத்தன தானம் ...... தனதான

289 - மருக்குல மேவும் (திருத்தணிகை)

தனத்தன தானம் தனத்தன தானம்
     தனத்தன தானம் ...... தனதான

301 - வினைக்கு இனமாகும் (திருத்தணிகை)

தனத்தன தானம் தனத்தன தானம்
     தனத்தன தானம் ...... தனதான

Songs from this thalam திருத்தணிகை

239 - அமைவுற்று அடைய

240 - அரகர சிவன் அரி

241 - அருக்கி மெத்தென

242 - இருப்பவல் திருப்புகழ்

243 - இருமலு ரோக

244 - உடலி னூடு

245 - உடையவர்கள் ஏவர்

246 - உய்யஞானத்து நெறி

247 - எத்தனை கலாதி

248 - எலுப்பு நாடிகள்

249 - எனக்கென யாவும்

250 - எனை அடைந்த

251 - ஏது புத்தி

252 - ஓலை இட்ட

253 - கச்சணி இளமுலை

254 - கடற்செகத் தடக்கி

255 - கரிக்குழல் விரித்தும்

256 - கலை மடவார்தம்

257 - கவடுற்ற சித்தர்

258 - கனத்த அற

259 - கனைத்து அதிர்க்கும்

260 - கிரி உலாவிய

261 - கிறி மொழி

262 - குயில் ஒன்று

263 - குருவி என

264 - குலைத்து மயிர்

265 - குவளைக் கணை

266 - கூந்தல் அவிழ்த்து

267 - கூர்வேல் பழித்த

268 - கொந்துவார் குரவடி

269 - சினத்தவர் முடிக்கும்

270 - சினத் திலத் தினை

271 - சொரியும் முகிலை

272 - தாக்கு அமருக்கு

273 - திருட்டு நாரிகள்

274 - துப் பார் அப்பு

275 - தொக்கறாக் குடில்

276 - தொடத்துளக்கிகள்

277 - நிலையாத சமுத்திர

278 - நினைத்தது எத்தனை

279 - பகல் இராவினும்

280 - பருத்தபற் சிரத்தினை

281 - பழமை செப்பிய

282 - புருவ நெறித்து

283 - பூசலிட்டு

284 - பெருக்க உபாயம்

285 - பொரியப் பொரிய

286 - பொருவிக் கந்தொடு

287 - பொற்குடம் ஒத்த

288 - பொற் பதத்தினை

289 - மருக்குல மேவும்

290 - மலை முலைச்சியர்

291 - முகத்தை மினுக்கி

292 - முகிலும் இரவியும்

293 - முடித்த குழலினர்

294 - முத்துத் தெறிக்க

295 - முலைபுளகம் எழ

296 - மொகுமொகு என

297 - வங்கம் பெறு

298 - வட்ட வாள் தன

299 - வரிக் கலையின்

300 - வார் உற்று எழும்

301 - வினைக்கு இனமாகும்

302 - வெற்றி செயவுற்ற

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 301