சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
375   திருவருணை திருப்புகழ் ( - வாரியார் # 569 )  

கமரி மலர்குழல்

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனன தனதன தனன தனதன
     தனன தனதன தனன தனதன
          தனன தனதன தனன தனதன ...... தனதான


கமரி மலர்குழல் சரிய புளகித
     கனக தனகிரி யசைய பொருவிழி
          கணைக ளெனநுதல் புரள துகிலதை ...... நெகிழ்மாதர்
கரிய மணிபுர ளரிய கதிரொளி
     பரவ இணைகுழை யசைய நகைகதிர்
          கனக வளைகல நடைகள் பழகிகள் ...... மயில்போலத்
திமிரு மதபுழு கொழுக தெருவினி
     லலைய விலைமுலை தெரிய மயல்கொடு
          திலத மணிமுக அழகு சுழலிக ...... ளிதழூறல்
திரையி லமுதென கழைகள் பலசுளை
     யெனவு மவர்மயல் தழுவு மசடனை
          திருகு புலைகொலை கலிகள் சிதறிட ...... அருள்தாராய்
குமர குருபர குமர குருபர
     குமர குருபர குமர குருபர
          குமர குருபர குமர குருபர ...... எனதாளங்
குரைசெய் முரசமொ டரிய விருதொலி
     டமட டமடம டமட டமவென
          குமுற திமிலைச லரிகி னரிமுத ...... லிவைபாட
அமரர் முநிவரு மயனு மனைவரு
     மதுகை மலர்கொடு தொழுது பதமுற
          அசுரர் பரிகரி யிரத முடைபட ...... விடும்வேலா
அகில புவனமொ டடைய வொளிபெற
     அழகு சரண்மயில் புறம தருளியொ
          ரருண கிரிகுற மகளை மருவிய ...... பெருமாளே.

கம அரி மலர் குழல் சரிய புளகித கனக தன கிரி அசைய
பொரு விழி கணைகள் என நுதல் புரள துகில் அதை நெகிழ்
மாதர்
கரிய மணி புரள அரிய கதிர் ஒளி பரவ இணை குழை அசைய
நகை கதிர் கனக வளை கல நடைகள் பழகிகள் மயில்
போல
திமிரு மத புழுகு ஒழுக தெரிவினில் அலைய விலை முலை
தெரிய மயல் கொடு திலத மணிமுக அழகு சுழலிகள்
இதழ் ஊறல் திரையில் அமுதென கழைகள் பல சுளை
எனவும் அவர் மயல் தழுவும் அசடனை திருகு புலை கொலை
கலிகள் சிதறிட அருள்தாராய்
குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர
குருபர குமர குருபர என தாளம் குரை செய் முரசமொடு
அரிய விருது ஒலி டமட டமடம டமட டம என குமுற
திமிலை சலரி கி(ன்)னரி முதல் இவை பாட அமரர்
முநிவரும் அயனும் அனைவரும் மதுகை மலர் கொடு தொழுது
பதம் உற
அசுரர் பரி கரி இரதமும் உடைபட விடும் வேலா
அகில புவனமொடு அடைய ஒளி பெற அழகு சரண் மயில்
புறம் அது அருளி ஒர் அருண கிரி குற மகளை மருவிய
பெருமாளே.
நிறைந்த வண்டுகள் மொய்க்கும் கூந்தல் அவிழ்ந்து சரிய, புளகிதம் கொண்ட பொன் மயமான மலையைப் போன்ற மார்பகங்கள் அசைய, போரிடுவது போன்ற கண்கள் அம்புகள் என்னும்படியாக விளங்க, நெற்றி புரள, ஆடையை நெகிழ விடுகின்ற விலைமாதர்கள், கழுத்தில் கரிய மணி மாலை புரள்வதால் அருமையான ஜோதி ஒளி பரவ, இரண்டு குண்டலங்களும் அசைய, ஒளி விளக்கமுள்ள பொன்னாலாகிய வளையல்கள் கலகல என ஒலிக்க, மயில் போல நடை பயிற்றுபவர்கள், பூசப்பட்ட சாரமான புனுகு சட்டம் ஒழுகும்படி வீதியில் அலைய, விற்கப்படும் மார்பு வெளித்தோன்ற காமப் பற்றுடன் நெற்றிப் பொட்டு அணிந்துள்ள முக அழகுடன் அங்குமிங்கும் திரிபவர்களாகிய விலைமாதர்களின் வாயிதழ் ஊறலை பாற்கடலில் எடுத்த அமுதே இது என்றும், கரும்புச் சாறு இது என்றும், பலாப்பழத்தின் சுளை இது என்றும் கருதி, அந்த விலைமாதர்களை மோகத்தில் தழுவுகின்ற முட்டாளாகிய எனது குற்றங்கள், இழிவான குணங்கள், கொலைக்கு ஈடான நீசபுத்தி முதலியவைகள் சிதறி விலக அருள் புரிவாயாக. குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என்னும் ஓசையுடன் தாளங்கள் ஒலி செய்கின்ற முரசு போன்ற போர்ப் பறையுடன் அருமையான வெற்றி ஒலிகள் டமடம டமட டம டமட இவ்வாறு பலத்து ஒலிக்க, திமிலைப் பறை, சல்லரி என்னும் ஜாலரா வகை, கின்னரி என்னும் யாழ்வகை முதலிய வாத்தியங்கள் இசைக்க, தேவர்களும், முனிவர்களும் பிரமனும் மற்றும் எல்லாரும் தேன் நிறைந்த பூக்களோடு வணங்கி தத்தம் பதவிகளைப் பெற, அசுரர்களின் குதிரை, யானை, தேர்ப்படைகள் உடைபட்டு ஒழியவும் வேலாயுதத்தைச் செலுத்தியவனே, எல்லா உலகங்களும் எங்கும் ஒளி பெறவும் அழகிய பாதங்களை மயிலின் மேல் இருத்தி, ஒப்பற்ற திருவண்ணாமலையில் குறப் பெண்ணாகிய வள்ளியைச் சேர்ந்த பெருமாளே.
Add (additional) Audio/Video Link
கம அரி மலர் குழல் சரிய புளகித கனக தன கிரி அசைய
பொரு விழி கணைகள் என நுதல் புரள துகில் அதை நெகிழ்
மாதர்
... நிறைந்த வண்டுகள் மொய்க்கும் கூந்தல் அவிழ்ந்து சரிய,
புளகிதம் கொண்ட பொன் மயமான மலையைப் போன்ற மார்பகங்கள்
அசைய, போரிடுவது போன்ற கண்கள் அம்புகள் என்னும்படியாக விளங்க,
நெற்றி புரள, ஆடையை நெகிழ விடுகின்ற விலைமாதர்கள்,
கரிய மணி புரள அரிய கதிர் ஒளி பரவ இணை குழை அசைய
நகை கதிர் கனக வளை கல நடைகள் பழகிகள் மயில்
போல
... கழுத்தில் கரிய மணி மாலை புரள்வதால் அருமையான ஜோதி
ஒளி பரவ, இரண்டு குண்டலங்களும் அசைய, ஒளி விளக்கமுள்ள
பொன்னாலாகிய வளையல்கள் கலகல என ஒலிக்க, மயில் போல நடை
பயிற்றுபவர்கள்,
திமிரு மத புழுகு ஒழுக தெரிவினில் அலைய விலை முலை
தெரிய மயல் கொடு திலத மணிமுக அழகு சுழலிகள்
...
பூசப்பட்ட சாரமான புனுகு சட்டம் ஒழுகும்படி வீதியில் அலைய,
விற்கப்படும் மார்பு வெளித்தோன்ற காமப் பற்றுடன் நெற்றிப் பொட்டு
அணிந்துள்ள முக அழகுடன் அங்குமிங்கும் திரிபவர்களாகிய
விலைமாதர்களின்
இதழ் ஊறல் திரையில் அமுதென கழைகள் பல சுளை
எனவும் அவர் மயல் தழுவும் அசடனை திருகு புலை கொலை
கலிகள் சிதறிட அருள்தாராய்
... வாயிதழ் ஊறலை பாற்கடலில்
எடுத்த அமுதே இது என்றும், கரும்புச் சாறு இது என்றும், பலாப்பழத்தின்
சுளை இது என்றும் கருதி, அந்த விலைமாதர்களை மோகத்தில்
தழுவுகின்ற முட்டாளாகிய எனது குற்றங்கள், இழிவான குணங்கள்,
கொலைக்கு ஈடான நீசபுத்தி முதலியவைகள் சிதறி விலக அருள்
புரிவாயாக.
குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர
குருபர குமர குருபர என தாளம் குரை செய் முரசமொடு
அரிய விருது ஒலி டமட டமடம டமட டம என குமுற
... குமர
குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர
என்னும் ஓசையுடன் தாளங்கள் ஒலி செய்கின்ற முரசு போன்ற போர்ப்
பறையுடன் அருமையான வெற்றி ஒலிகள் டமடம டமட டம டமட
இவ்வாறு பலத்து ஒலிக்க,
திமிலை சலரி கி(ன்)னரி முதல் இவை பாட அமரர்
முநிவரும் அயனும் அனைவரும் மதுகை மலர் கொடு தொழுது
பதம் உற
... திமிலைப் பறை, சல்லரி என்னும் ஜாலரா வகை, கின்னரி
என்னும் யாழ்வகை முதலிய வாத்தியங்கள் இசைக்க, தேவர்களும்,
முனிவர்களும் பிரமனும் மற்றும் எல்லாரும் தேன் நிறைந்த பூக்களோடு
வணங்கி தத்தம் பதவிகளைப் பெற,
அசுரர் பரி கரி இரதமும் உடைபட விடும் வேலா ...
அசுரர்களின் குதிரை, யானை, தேர்ப்படைகள் உடைபட்டு ஒழியவும்
வேலாயுதத்தைச் செலுத்தியவனே,
அகில புவனமொடு அடைய ஒளி பெற அழகு சரண் மயில்
புறம் அது அருளி ஒர் அருண கிரி குற மகளை மருவிய
பெருமாளே.
... எல்லா உலகங்களும் எங்கும் ஒளி பெறவும் அழகிய
பாதங்களை மயிலின் மேல் இருத்தி, ஒப்பற்ற திருவண்ணாமலையில்
குறப் பெண்ணாகிய வள்ளியைச் சேர்ந்த பெருமாளே.
Similar songs:

146 - குருதி மலசலம் (பழநி)

தனன தனதன தனன தனதன
     தனன தனதன தனன தனதன
          தனன தனதன தனன தனதன ...... தனதான

375 - கமரி மலர்குழல் (திருவருணை)

தனன தனதன தனன தனதன
     தனன தனதன தனன தனதன
          தனன தனதன தனன தனதன ...... தனதான

Songs from this thalam திருவருணை

6 - முத்தைத்தரு

367 - குமர குருபர குணதர

368 - அருவ மிடையென

369 - கருணை சிறிதும்

370 - துகிலு ம்ருகமத

371 - மகர மெறிகடல்

372 - முகிலை யிகல்

373 - முருகு செறிகுழல் சொரு

374 - விடமும் அமுதமும்

375 - கமரி மலர்குழல்

376 - கயல் விழித்தேன்

377 - கறுவு மிக்கு ஆவி

378 - பரியகைப் பாசம்

379 - தருண மணி

380 - முழுகிவட

381 - வடவை அனல் ஊடு

382 - ஆலவிழி நீல

383 - பேதக விரோத

384 - அமுதம் ஊறு சொல்

385 - உருகும் மாமெழுகாக

386 - கரி உரி அரவம்

387 - கனை கடல் வயிறு

388 - இரவியும் மதியும்

389 - விரகொடு வளை

390 - இடம் அடு சுறவை

391 - கெஜ நடை மடவார்

392 - அருக்கார் நலத்தை

393 - அருமா மதனை

394 - அழுதும் ஆவா

395 - ஆனை வரிக் கோடு

396 - இடருக்கு இடர்

397 - இமராஜன் நிலாவது

398 - இரத சுரதமுலை

399 - இரவுபகற் பலகாலும்

400 - இருவர் மயலோ

401 - இருவினை அஞ்ச

402 - இருவினை ஊண்

403 - இருளளகம் அவிழ

404 - இறுகு மணி முலை

405 - உலையிலனல்

406 - கடல்பரவு தரங்க

407 - கமலமுகப் பிறை

408 - கமல மொட்டை

409 - கரிமுகக் கடகளிறு

410 - கரு நிறம் சிறந்து

411 - காணாத தூர நீள்

412 - காராடக் குழல்

413 - காரும் மருவும்

414 - கீத விநோத மெச்சு

415 - குரவ நறும் அளக

416 - குழவியுமாய் மோகம்

417 - கேதகையபூ முடித்த

418 - கோடு ஆன மடவார்கள்

419 - கோடு செறி

420 - சிலைநுதல் வைத்து

421 - சிவமாதுடனே

422 - சினமுடுவல் நரிகழுகு

423 - சுக்கிலச் சுரொணித

424 - செஞ்சொற் பண்

425 - செயசெய அருணா

426 - தமரம் குரங்களும்

427 - தமிழோதிய குயிலோ

428 - தலையை மழித்து

429 - திருட்டு வாணிப

430 - தேதென வாச முற்ற

431 - தோதகப் பெரும்

432 - பாண மலரது

433 - பாலாய் நூலாய்

434 - புணர்முலை மடந்தை

435 - புலையனான

436 - போக கற்ப

437 - மானை விடத்தை

438 - முகத் துலக்கிகள்

439 - மேக மொத்தகுழலார்

440 - மொழிய நிறம்

441 - வலிவாத பித்தமொடு

442 - விடு மதவேள்

443 - விதி அதாகவே

444 - விந்துப் புளகித

445 - வீறு புழுகான பனி

1328 - ஏறுமயிலேறி

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 375