சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
382   திருவருணை திருப்புகழ் ( - வாரியார் # 576 )  

ஆலவிழி நீல

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தானதன தானத் தானதன தானத்
     தானதன தானத் ...... தந்ததான


ஆலவிழி நீலத் தாலதர பானத்
     தாலளக பாரக் ...... கொண்டலாலே
ஆரநகை யால்விற் போர்நுதலி னால்வித்
     தாரநடை யால்நற் ...... கொங்கையாலே
சாலமய லாகிக் காலதிரி சூலத்
     தாலிறுகு பாசத் ...... துன்பமூழ்கித்
தாழ்விலுயிர் வீழ்பட் டூழ்வினைவி டாமற்
     சாவதன்மு னேவற் ...... கொண்டிடாயோ
சோலைதரு கானிற் கோலமற மானைத்
     தோளிலுற வாகக் ...... கொண்டவாழ்வே
சோதிமுரு காநித் தாபழய ஞானச்
     சோணகிரி வீதிக் ...... கந்தவேளே
பாலகக லாபக் கோமளம யூரப்
     பாகவுமை பாகத் ...... தன்குமாரா
பாதமலர் மீதிற் போதமலர் தூவிப்
     பாடுமவர் தோழத் ...... தம்பிரானே.

ஆல விழி நீலத்தால் அதர பானத்தால் அளக பாரக்
கொண்டலாலே
ஆர நகையால் வில் போர் நுதலினால் வித்தார நடையால்
நற் கொங்கையாலே சால மயலாகி
கால(ன்) திரி சூலத்தால் இறுகு பாசத் துன்ப(ம்) மூழ்கித்
தாழ்வில் உயிர் வீழ் பட்டு
ஊழ் வினை விடாமல் சாவதன் முன் ஏவல் கொண்டிடாயோ
சோலை தரு கானில் கோல மற மானைத் தோளில்
உறவாகக் கொண்ட வாழ்வே
சோதி முருகா நித்தா பழய ஞானச் சோணகிரி வீதிக் கந்த
வேளே
பாலக கலாபக் கோமள மயூரப் பாக உமை பாகத்தன்
குமாரா
பாத மலர் மீதில் போத மலர் தூவிப் பாடுமவர் தோழத்
தம்பிரானே.
விஷம் போன்ற கண்களாகிய நீலோற்பல மலராலும், வாயிதழ் ஊறல் பருகுவதாலும், கூந்தல் பாரமாகிய மேகத்தாலும், முத்துப்போன்ற பற்களாலும், வில்லைப் போன்ற நெற்றியாலும், விரிந்து அசைந்த நடையாலும், நல்ல மார்பகங்களாலும், மிகவும் மோகம் கொண்டவனாகி, யமனுடைய முத்தலைச் சூலத்தைக் கண்டு, அவன் கட்டும் பாசக் கயிற்றினால் துன்பத்தில் ஆழ்ந்து, அந்த மனச் சோர்வில் உயிர் வீழுதல் அடைந்து, ஊழ்வினை என்னை விடாது தொடர்ந்து, இறப்பதற்கு முன்னே என்னை ஆட்கொள்ள மாட்டாயோ? சோலைகளைக் கொண்ட காட்டில் அழகிய வேடர் பெண்ணாகிய வள்ளியை தோளில் உறவு பூண்டு அணைந்து கொண்ட செல்வமே, ஜோதி வடிவமான முருகனே, என்றும் அழியாமல் இருப்பவனே, ஞான பூமியாகிய திருவண்ணாமலையின் தெருவில் வீற்றிருக்கும் கந்த வேளே, குழந்தையே, தோகை நிறைந்த அழகிய மயிலை நடத்துபவனே, உமை பங்கனான சிவ குமாரனே, பாதத் தாமரையில் ஞான மலரை இட்டுப் பாடும் அடியார்களின் தோழனே, தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
ஆல விழி நீலத்தால் அதர பானத்தால் அளக பாரக்
கொண்டலாலே
... விஷம் போன்ற கண்களாகிய நீலோற்பல மலராலும்,
வாயிதழ் ஊறல் பருகுவதாலும், கூந்தல் பாரமாகிய மேகத்தாலும்,
ஆர நகையால் வில் போர் நுதலினால் வித்தார நடையால்
நற் கொங்கையாலே சால மயலாகி
... முத்துப்போன்ற பற்களாலும்,
வில்லைப் போன்ற நெற்றியாலும், விரிந்து அசைந்த நடையாலும், நல்ல
மார்பகங்களாலும், மிகவும் மோகம் கொண்டவனாகி,
கால(ன்) திரி சூலத்தால் இறுகு பாசத் துன்ப(ம்) மூழ்கித்
தாழ்வில் உயிர் வீழ் பட்டு
... யமனுடைய முத்தலைச் சூலத்தைக்
கண்டு, அவன் கட்டும் பாசக் கயிற்றினால் துன்பத்தில் ஆழ்ந்து, அந்த
மனச் சோர்வில் உயிர் வீழுதல் அடைந்து,
ஊழ் வினை விடாமல் சாவதன் முன் ஏவல் கொண்டிடாயோ ...
ஊழ்வினை என்னை விடாது தொடர்ந்து, இறப்பதற்கு முன்னே என்னை
ஆட்கொள்ள மாட்டாயோ?
சோலை தரு கானில் கோல மற மானைத் தோளில்
உறவாகக் கொண்ட வாழ்வே
... சோலைகளைக் கொண்ட காட்டில்
அழகிய வேடர் பெண்ணாகிய வள்ளியை தோளில் உறவு பூண்டு
அணைந்து கொண்ட செல்வமே,
சோதி முருகா நித்தா பழய ஞானச் சோணகிரி வீதிக் கந்த
வேளே
... ஜோதி வடிவமான முருகனே, என்றும் அழியாமல்
இருப்பவனே, ஞான பூமியாகிய திருவண்ணாமலையின் தெருவில்
வீற்றிருக்கும் கந்த வேளே,
பாலக கலாபக் கோமள மயூரப் பாக உமை பாகத்தன்
குமாரா
... குழந்தையே, தோகை நிறைந்த அழகிய மயிலை
நடத்துபவனே, உமை பங்கனான சிவ குமாரனே,
பாத மலர் மீதில் போத மலர் தூவிப் பாடுமவர் தோழத்
தம்பிரானே.
... பாதத் தாமரையில் ஞான மலரை இட்டுப் பாடும்
அடியார்களின் தோழனே, தம்பிரானே.
Similar songs:

382 - ஆலவிழி நீல (திருவருணை)

தானதன தானத் தானதன தானத்
     தானதன தானத் ...... தந்ததான

383 - பேதக விரோத (திருவருணை)

தானதன தானத் தானதன தானத்
     தானதன தானத் ...... தந்ததான

Songs from this thalam திருவருணை

6 - முத்தைத்தரு

367 - குமர குருபர குணதர

368 - அருவ மிடையென

369 - கருணை சிறிதும்

370 - துகிலு ம்ருகமத

371 - மகர மெறிகடல்

372 - முகிலை யிகல்

373 - முருகு செறிகுழல் சொரு

374 - விடமும் அமுதமும்

375 - கமரி மலர்குழல்

376 - கயல் விழித்தேன்

377 - கறுவு மிக்கு ஆவி

378 - பரியகைப் பாசம்

379 - தருண மணி

380 - முழுகிவட

381 - வடவை அனல் ஊடு

382 - ஆலவிழி நீல

383 - பேதக விரோத

384 - அமுதம் ஊறு சொல்

385 - உருகும் மாமெழுகாக

386 - கரி உரி அரவம்

387 - கனை கடல் வயிறு

388 - இரவியும் மதியும்

389 - விரகொடு வளை

390 - இடம் அடு சுறவை

391 - கெஜ நடை மடவார்

392 - அருக்கார் நலத்தை

393 - அருமா மதனை

394 - அழுதும் ஆவா

395 - ஆனை வரிக் கோடு

396 - இடருக்கு இடர்

397 - இமராஜன் நிலாவது

398 - இரத சுரதமுலை

399 - இரவுபகற் பலகாலும்

400 - இருவர் மயலோ

401 - இருவினை அஞ்ச

402 - இருவினை ஊண்

403 - இருளளகம் அவிழ

404 - இறுகு மணி முலை

405 - உலையிலனல்

406 - கடல்பரவு தரங்க

407 - கமலமுகப் பிறை

408 - கமல மொட்டை

409 - கரிமுகக் கடகளிறு

410 - கரு நிறம் சிறந்து

411 - காணாத தூர நீள்

412 - காராடக் குழல்

413 - காரும் மருவும்

414 - கீத விநோத மெச்சு

415 - குரவ நறும் அளக

416 - குழவியுமாய் மோகம்

417 - கேதகையபூ முடித்த

418 - கோடு ஆன மடவார்கள்

419 - கோடு செறி

420 - சிலைநுதல் வைத்து

421 - சிவமாதுடனே

422 - சினமுடுவல் நரிகழுகு

423 - சுக்கிலச் சுரொணித

424 - செஞ்சொற் பண்

425 - செயசெய அருணா

426 - தமரம் குரங்களும்

427 - தமிழோதிய குயிலோ

428 - தலையை மழித்து

429 - திருட்டு வாணிப

430 - தேதென வாச முற்ற

431 - தோதகப் பெரும்

432 - பாண மலரது

433 - பாலாய் நூலாய்

434 - புணர்முலை மடந்தை

435 - புலையனான

436 - போக கற்ப

437 - மானை விடத்தை

438 - முகத் துலக்கிகள்

439 - மேக மொத்தகுழலார்

440 - மொழிய நிறம்

441 - வலிவாத பித்தமொடு

442 - விடு மதவேள்

443 - விதி அதாகவே

444 - விந்துப் புளகித

445 - வீறு புழுகான பனி

1328 - ஏறுமயிலேறி
 


1
   

send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000