This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
தனதன தந்த தனதன தந்த தனதன தந்த ...... தனதான
இருவினை யஞ்ச மலவகை மங்க இருள்பிணி மங்க ...... மயிலேறி இனவரு ளன்பு மொழியக டம்பு வினதக முங்கொ ...... டளிபாடக் கரிமுக னெம்பி முருகனெ னண்டர் களிமலர் சிந்த ...... அடியேன்முன் கருணைபொ ழிந்து முகமும லர்ந்து கடுகிந டங்கொ ...... டருள்வாயே திரிபுர மங்க மதனுடல் மங்க திகழ்நகை கொண்ட ...... விடையேறிச் சிவம்வெளி யங்க ணருள்குடி கொண்டு திகழந டஞ்செய் ...... தெமையீண அரசியி டங்கொள் மழுவுடை யெந்தை அமலன்ம கிழ்ந்த ...... குருநாதா அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை அமளிந லங்கொள் ...... பெருமாளே.
இருவினை யஞ்ச மலவகை மங்க
இருள்பிணி மங்க மயிலேறி
இனவருள் அன்பு மொழிய க டம்பு
வின் அதகமும் கொடு அளிபாட
கரிமுகன் எம்பி முருகனென அண்டர்
களிமலர் சிந்த அடியேன்முன்
கருணைபொழிந்து முகமும் மலர்ந்து
கடுகி நடங்கொடு அருள்வாயே
திரிபுர மங்க மதனுடல் மங்க
திகழ்நகை கொண்ட விடையேறிச்
சிவம் வெளி யங்கண்அருள் குடிகொண்டு
திகழந டஞ்செய்து எமையீண்
அரசியிடங்கொள மழுவுடை யெந்தை
அமலன் மகிழ்ந்த குருநாதா
அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை
அமளிந லங்கொள் பெருமாளே.
நல்வினை, தீவினை இரண்டுமே அஞ்சி ஒழிய, மலக் கூட்டங்கள் (மாசுகள்) மங்கி அழிய, அஞ்ஞானமும், நோய்களும் அகல, நீ மயில் வாகனத்தில் ஏறிவந்து, அருள் வாக்குகளும், அன்பான மொழிகளும் கூற, உன் கடப்பமலரின் உயிர்தரு மருந்தாம் தேனைச்சுற்றி வண்டுகள் ரீங்காரம் செய்து முரல, யானைமுகன் கணபதி என் தம்பியே, முருகா என்றழைக்க, தேவர்கள் மகிழ்ந்து மலர் மாரி பொழிய, என் முன்னே கருணை மிகக் காட்டி மலர்ந்த முகத்தோடு வேகமாக நடனம் செய்தவாறு வந்து அருள் புரியவேண்டும். திரிபுரம் அழியவும், மன்மதனின் உடல் எரியவும், விளங்கும் புன்சிரிப்பைச் சிரித்தே எரித்த ரிஷப வாகனம் ஏறும் சிவபெருமான் பரவெளியில் திருவருளோடு வீற்றிருந்து, விளங்க நடனம் செய்து, எம்மைப் பெற்ற தேவியை இடது பாகத்தில் ஏற்றுக்கொண்டு, மழு ஆயுதத்தை ஏந்திய எம் தந்தை மாசற்றவன் மகிழ்ச்சியடைந்த குருநாதனே, திருஅண்ணாமலைக் குன்றிலே மகிழும் குறமங்கையின் மலர்ப்படுக்கையிலே மனமகிழும் பெருமாளே.
Audio/Video Link(s)
இருவினை யஞ்ச ... நல்வினை, தீவினை இரண்டுமே அஞ்சி ஒழிய,மலவகை மங்க ... மலக் கூட்டங்கள் (மாசுகள்) மங்கி அழிய,இருள்பிணி மங்க ... அஞ்ஞானமும், நோய்களும் அகல,மயிலேறி ... நீ மயில் வாகனத்தில் ஏறிவந்து,இனவருள் அன்பு மொழிய ... அருள் வாக்குகளும், அன்பான மொழிகளும் கூற,க டம்புவின் அதகமும் கொடு ... உன் கடப்பமலரின் உயிர்தரு மருந்தாம் தேனைச்சுற்றிஅளிபாட ... வண்டுகள் ரீங்காரம் செய்து முரல,கரிமுகன் எம்பி முருகனென ... யானைமுகன் கணபதி 'என் தம்பியே, முருகா' என்றழைக்க,அண்டர் களிமலர் சிந்த ... தேவர்கள் மகிழ்ந்து மலர் மாரி பொழிய,அடியேன்முன் கருணைபொழிந்து ... என் முன்னே கருணை மிகக் காட்டிமுகமும் மலர்ந்து கடுகி ... மலர்ந்த முகத்தோடு வேகமாகநடங்கொடு அருள்வாயே ... நடனம் செய்தவாறு வந்து அருள் புரியவேண்டும்.திரிபுர மங்க மதனுடல் மங்க ... திரிபுரம் அழியவும், மன்மதனின் உடல் எரியவும்,திகழ்நகை கொண்ட ... விளங்கும் புன்சிரிப்பைச் சிரித்தே எரித்தவிடையேறிச் சிவம் ... ரிஷப வாகனம் ஏறும் சிவபெருமான்வெளி யங்கண்அருள் குடிகொண்டு ... பரவெளியில் திருவருளோடு வீற்றிருந்து,திகழந டஞ்செய்து ... விளங்க நடனம் செய்து,எமையீண் அரசியிடங்கொள ... எம்மைப் பெற்ற தேவியை இடது பாகத்தில் ஏற்றுக்கொண்டு,மழுவுடை யெந்தை அமலன் ... மழு ஆயுதத்தை ஏந்திய எம் தந்தை மாசற்றவன்மகிழ்ந்த குருநாதா ... மகிழ்ச்சியடைந்த குருநாதனே,அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை ... திருஅண்ணாமலைக் குன்றிலே மகிழும் குறமங்கையின்அமளிந லங்கொள் பெருமாளே. ... மலர்ப்படுக்கையிலே மனமகிழும் பெருமாளே.
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000