சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
440   திருவருணை திருப்புகழ் ( - வாரியார் # 555 )  

மொழிய நிறம்

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனதன தந்ததத்த தனதன தந்ததத்த
     தனதன தந்ததத்த ...... தனதான


மொழியநி றங்கறுத்து மகரவி னங்கலக்கி
     முடியவ ளைந்தரற்று ...... கடலாலும்
முதிரவி டம்பரப்பி வடவைமு கந்தழற்குள்
     முழுகியெ ழுந்திருக்கு ...... நிலவாலும்
மழையள கந்தரித்த கொடியிடை வஞ்சியுற்ற
     மயல்தணி யும்படிக்கு ...... நினைவாயே
மரகத துங்கவெற்றி விகடந டங்கொள்சித்ர
     மயிலினில் வந்துமுத்தி ...... தரவேணும்
அழகிய மென்குறத்தி புளகித சந்தனத்தி
     னமுதத னம்படைத்த ...... திருமார்பா
அமரர்பு ரந்தனக்கு மழகிய செந்திலுக்கு
     மருணைவ ளம்பதிக்கு ...... மிறையோனே
எழுபுவ னம்பிழைக்க அசுரர்சி ரந்தெறிக்க
     எழுசயி லந்தொளைத்த ...... சுடர்வேலா
இரவிக ளந்தரத்தர் அரியர பங்கயத்த
     ரிவர்கள்ப யந்தவிர்த்த ...... பெருமாளே.

மொழிய நிறங்கறுத்து மகர இனங்கலக்கி
முடிய வளைந்து அரற்று கடலாலும்
முதிர விடம் பரப்பி வடவை முகந்து அழற்குள் முழுகி
எழுந்திருக்கு நிலவாலும்
மழை அளகம் தரித்த கொடியிடை வஞ்சியுற்ற மயல் தணி
யும்படிக்கு நினைவாயே
மரகத துங்கவெற்றி விகட நடங்கொள் சித்ர மயிலினில் வந்து
முத்தி தரவேணும்
அழகிய மென்குறத்தி புளகித சந்தனத்தின் அமுத
தனம்படைத்த திருமார்பா
அமரர் புரந்தனக்கும் அழகிய செந்திலுக்கும் அருணை
வளம்பதிக்கும் இறையோனே
எழு புவனம் பிழைக்க அசுரர் சிரந்தெறிக்க எழு சயிலம்
தொளைத்த சுடர்வேலா
இரவிகள் அந்தரத்தர் அரியர பங்கயத்தர் இவர்கள்
பயந்தவிர்த்த பெருமாளே.
யாவரும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக நிறம் கருமையடைந்து, மகர மீன்களின் கூட்டத்தால் கலக்கப்பட்டு, கிடைக்கின்ற முழு இடத்தையும் வளைத்து ஆரவாரம் செய்யும் கடலாலும், (சந்திரனின் கலைகள்) வளர்ந்து, விஷத்தை எங்கும் பரப்பி, (யுக முடிவில் தீப் பிரளயமாக வரும்) வடவா முகாக்கினியை மொண்டு கொண்டும், நெருப்பில் மூழ்கியும் எழுந்துவரும் நிலவாலும், கார்மேகம் போன்ற கூந்தலைக் கொண்ட, வஞ்சிக்கொடி போன்ற இடையை உடைய என் மகள் அடைந்த விரக தாபம் தணியும்படிக்கு நீ நினைந்து, பச்சை நிறம், தூய்மை, வெற்றி இவைகளைக் கொண்டதாகவும், அழகுள்ள நடனம் கொண்டதாகவும் உள்ள அலங்கார மயில் மீது வந்து அவளுக்கு முக்தியைத் தரவேண்டும். அழகிய மென்மை வாய்ந்த குறத்தி வள்ளியின் புளகம் கொண்டதும், சந்தனமும் அமுதமும் பொதிந்ததுமான மார்பகத்தை அணைந்துள்ள திருமார்பனே, தேவர்களின் ஊராகிய அமராவதியிலும், அழகிய திருச்செந்தூரிலும், திருவருணை என்ற வளமான தலத்திலும் தங்கும் இறைவனே, ஏழு உலகங்களும் பிழைக்க, அசுரர்களின் தலைகள் தெறிக்கும்படியாக ஏழு மலைகளையும் தொளைத்த ஒளி வேலனே, ஆதித்தர்கள் (அதிதியின் புத்திரர்கள்), விண்ணுலகத்தவர், திருமால், ருத்திரன், தாமரை மீதமர்ந்த பிரமன் இவர்களது பயத்தை ஒழித்த பெருமாளே.
Add (additional) Audio/Video Link
மொழிய நிறங்கறுத்து மகர இனங்கலக்கி ... யாவரும் குறிப்பிட்டுச்
சொல்லும்படியாக நிறம் கருமையடைந்து, மகர மீன்களின் கூட்டத்தால்
கலக்கப்பட்டு,
முடிய வளைந்து அரற்று கடலாலும் ... கிடைக்கின்ற முழு
இடத்தையும் வளைத்து ஆரவாரம் செய்யும் கடலாலும்,
முதிர விடம் பரப்பி வடவை முகந்து அழற்குள் முழுகி
எழுந்திருக்கு நிலவாலும்
... (சந்திரனின் கலைகள்) வளர்ந்து,
விஷத்தை எங்கும் பரப்பி, (யுக முடிவில் தீப் பிரளயமாக வரும்)
வடவா முகாக்கினியை மொண்டு கொண்டும், நெருப்பில்
மூழ்கியும் எழுந்துவரும் நிலவாலும்,
மழை அளகம் தரித்த கொடியிடை வஞ்சியுற்ற மயல் தணி
யும்படிக்கு நினைவாயே
... கார்மேகம் போன்ற கூந்தலைக்
கொண்ட, வஞ்சிக்கொடி போன்ற இடையை உடைய என் மகள்
அடைந்த விரக தாபம் தணியும்படிக்கு நீ நினைந்து,
மரகத துங்கவெற்றி விகட நடங்கொள் சித்ர மயிலினில் வந்து
முத்தி தரவேணும்
... பச்சை நிறம், தூய்மை, வெற்றி இவைகளைக்
கொண்டதாகவும், அழகுள்ள நடனம் கொண்டதாகவும் உள்ள
அலங்கார மயில் மீது வந்து அவளுக்கு முக்தியைத் தரவேண்டும்.
அழகிய மென்குறத்தி புளகித சந்தனத்தின் அமுத
தனம்படைத்த திருமார்பா
... அழகிய மென்மை வாய்ந்த குறத்தி
வள்ளியின் புளகம் கொண்டதும், சந்தனமும் அமுதமும்
பொதிந்ததுமான மார்பகத்தை அணைந்துள்ள திருமார்பனே,
அமரர் புரந்தனக்கும் அழகிய செந்திலுக்கும் அருணை
வளம்பதிக்கும் இறையோனே
... தேவர்களின் ஊராகிய
அமராவதியிலும், அழகிய திருச்செந்தூரிலும், திருவருணை என்ற
வளமான தலத்திலும் தங்கும் இறைவனே,
எழு புவனம் பிழைக்க அசுரர் சிரந்தெறிக்க எழு சயிலம்
தொளைத்த சுடர்வேலா
... ஏழு உலகங்களும் பிழைக்க, அசுரர்களின்
தலைகள் தெறிக்கும்படியாக ஏழு மலைகளையும் தொளைத்த
ஒளி வேலனே,
இரவிகள் அந்தரத்தர் அரியர பங்கயத்தர் இவர்கள்
பயந்தவிர்த்த பெருமாளே.
... ஆதித்தர்கள் (அதிதியின் புத்திரர்கள்),
விண்ணுலகத்தவர், திருமால், ருத்திரன், தாமரை மீதமர்ந்த பிரமன்
இவர்களது பயத்தை ஒழித்த பெருமாளே.
Similar songs:

440 - மொழிய நிறம் (திருவருணை)

தனதன தந்ததத்த தனதன தந்ததத்த
     தனதன தந்ததத்த ...... தனதான

Songs from this thalam திருவருணை

6 - முத்தைத்தரு

367 - குமர குருபர குணதர

368 - அருவ மிடையென

369 - கருணை சிறிதும்

370 - துகிலு ம்ருகமத

371 - மகர மெறிகடல்

372 - முகிலை யிகல்

373 - முருகு செறிகுழல் சொரு

374 - விடமும் அமுதமும்

375 - கமரி மலர்குழல்

376 - கயல் விழித்தேன்

377 - கறுவு மிக்கு ஆவி

378 - பரியகைப் பாசம்

379 - தருண மணி

380 - முழுகிவட

381 - வடவை அனல் ஊடு

382 - ஆலவிழி நீல

383 - பேதக விரோத

384 - அமுதம் ஊறு சொல்

385 - உருகும் மாமெழுகாக

386 - கரி உரி அரவம்

387 - கனை கடல் வயிறு

388 - இரவியும் மதியும்

389 - விரகொடு வளை

390 - இடம் அடு சுறவை

391 - கெஜ நடை மடவார்

392 - அருக்கார் நலத்தை

393 - அருமா மதனை

394 - அழுதும் ஆவா

395 - ஆனை வரிக் கோடு

396 - இடருக்கு இடர்

397 - இமராஜன் நிலாவது

398 - இரத சுரதமுலை

399 - இரவுபகற் பலகாலும்

400 - இருவர் மயலோ

401 - இருவினை அஞ்ச

402 - இருவினை ஊண்

403 - இருளளகம் அவிழ

404 - இறுகு மணி முலை

405 - உலையிலனல்

406 - கடல்பரவு தரங்க

407 - கமலமுகப் பிறை

408 - கமல மொட்டை

409 - கரிமுகக் கடகளிறு

410 - கரு நிறம் சிறந்து

411 - காணாத தூர நீள்

412 - காராடக் குழல்

413 - காரும் மருவும்

414 - கீத விநோத மெச்சு

415 - குரவ நறும் அளக

416 - குழவியுமாய் மோகம்

417 - கேதகையபூ முடித்த

418 - கோடு ஆன மடவார்கள்

419 - கோடு செறி

420 - சிலைநுதல் வைத்து

421 - சிவமாதுடனே

422 - சினமுடுவல் நரிகழுகு

423 - சுக்கிலச் சுரொணித

424 - செஞ்சொற் பண்

425 - செயசெய அருணா

426 - தமரம் குரங்களும்

427 - தமிழோதிய குயிலோ

428 - தலையை மழித்து

429 - திருட்டு வாணிப

430 - தேதென வாச முற்ற

431 - தோதகப் பெரும்

432 - பாண மலரது

433 - பாலாய் நூலாய்

434 - புணர்முலை மடந்தை

435 - புலையனான

436 - போக கற்ப

437 - மானை விடத்தை

438 - முகத் துலக்கிகள்

439 - மேக மொத்தகுழலார்

440 - மொழிய நிறம்

441 - வலிவாத பித்தமொடு

442 - விடு மதவேள்

443 - விதி அதாகவே

444 - விந்துப் புளகித

445 - வீறு புழுகான பனி

1328 - ஏறுமயிலேறி

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 440