சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
465   சிதம்பரம் திருப்புகழ் ( - வாரியார் # 633 )  

பருவம் பணை

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்த
     தனனந் தனத்த தந்த ...... தனதான


பருவம் பணைத்தி ரண்டு கரிகொம் பெனத்தி ரண்டு
     பவளம் பதித்த செம்பொ ...... னிறமார்பிற்
படருங் கனத்த கொங்கை மினல்கொந் தளித்து சிந்த
     பலவிஞ் சையைப்பு லம்பி ...... யழகான
புருவஞ் சுழற்றி யிந்த்ர தநுவந் துதித்த தென்று
     புளகஞ் செலுத்தி ரண்டு ...... கயல்மேவும்
பொறிகண் சுழற்றி ரம்ப பரிசம் பயிற்றி மந்த்ர
     பொடிகொண் டழிக்கும் வஞ்ச ...... ருறவாமோ
உருவந் தரித்து கந்து கரமும் பிடித்து வந்து
     உறவும் பிடித்த ணங்கை ...... வனமீதே
ஒளிர்கொம் பினைச்ச வுந்த ரியவும் பலைக்கொ ணர்ந்து
     ஒளிர்வஞ் சியைப்பு ணர்ந்த ...... மணிமார்பா
செருவெங் களத்தில் வந்த அவுணன் தெறித்து மங்க
     சிவமஞ் செழுத்தை முந்த ...... விடுவோனே
தினமுங் களித்து செம்பொ னுலகந் துதித்தி றைஞ்சு
     திருவம் பலத்த மர்ந்த ...... பெருமாளே.

பருவம் பணைத்து இரண்டு கரி கொம்பு எனத் திரண்டு
பவளம் பதித்த செம் பொன் நிற மார்பில் படரும் கனத்த
கொங்கை மி(ன்)னல் கொந்தளித்து சிந்த
பல விஞ்சையைப் புலம்பி அழகான புருவம் சுழற்றி
இந்த்ரதநு வந்து உதித்தது என்று புளகம் செலுத்து இரண்டு
கயல் மேவும் பொறிகள் சுழற்றி
ரம்ப பரிசம் பயிற்றி மந்த்ர பொடி கொண்டு அழிக்கும்
வஞ்சர் உறவாமோ
உருவம் தரித்து உகந்து கரமும் பிடித்து உவந்து உறவும்
பிடித்த அணங்கை
வனம் மீதே ஒளிர் கொம்பினைச் சவுந்தரிய உம்பலைக்
கொணர்ந்து ஒளிர் வஞ்சியைப் புணர்ந்த மணி மார்பா
செரு வெம் களத்தில் வந்த அவுணன் தெறிந்து மங்க சிவம்
அஞ்செழுத்தை முந்த விடுவோனே
தினமும் களித்து செம் பொன் உலகம் துதித்து இறைஞ்சு
திரு அம்பலத்து அமர்ந்த பெருமாளே.
இளமையான, பருத்த, இரு யானைத் தந்தங்கள் என்று சொல்லும்படி திரட்சியுற்று, பவளம் பதித்தது போன்ற செவ்விய பொன்னிறமான மார்பில் பரந்துள்ள கனம் கொண்ட மார்பகங்கள் மின்னல் மின்னி எழுந்தது போல ஒளி வீச, பல மாய வித்தைப் பேச்சுக்களைப் பலமாகப் பேசி, தமது அழகான புருவங்களைச் சுழற்றி, வானவில் வந்து தோன்றியது போலப் புளகம் தருகின்ற இரண்டு கயல் மீன் போல் உள்ள உறுப்பாகிய கண்களைச் சுழற்றி, நிரம்பவும் தொட்டுப் பயின்று, சொக்குப் பொடி கொண்டு அழிக்கின்ற வஞ்சகர்களாகிய பொது மகளிருடைய உறவு நல்லதாகுமோ? மாறுவேடம் பூண்டு, ஆசையுடன் (வளைச் செட்டியாய் வள்ளியின்) கைகளைப் பற்றி மகிழ்ந்து, அவளது உறவையும் கொண்டு, வள்ளிமலைக் காட்டில் விளங்கும் கொம்பினை உடைய அழகிய (கணபதியாகிய) யானையை வரவழைத்து, விளங்கும் வஞ்சிக்கொடி போன்ற வள்ளியைக் கலந்த அழகிய மார்பனே, போர் நடந்த கொடிய போர்க்களத்தில் வந்த சூரன் பிளவுபட்டு அழிய (நமசிவாய என்ற) பஞ்சாக்ஷரத்தின் ஆற்றலைக் கொண்ட வேலை வேகமாகச் செலுத்தியவனே, நாள்தோறும் மகிழ்ச்சியுடன் செவ்விய பொன்னுலகத்தினரான தேவர்கள் துதித்து வணங்கும் திரு அம்பலத்தில் (சிதம்பரத்தில்) வீற்றிருக்கும் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
பருவம் பணைத்து இரண்டு கரி கொம்பு எனத் திரண்டு
பவளம் பதித்த செம் பொன் நிற மார்பில் படரும் கனத்த
கொங்கை மி(ன்)னல் கொந்தளித்து சிந்த
... இளமையான,
பருத்த, இரு யானைத் தந்தங்கள் என்று சொல்லும்படி திரட்சியுற்று,
பவளம் பதித்தது போன்ற செவ்விய பொன்னிறமான மார்பில் பரந்துள்ள
கனம் கொண்ட மார்பகங்கள் மின்னல் மின்னி எழுந்தது போல ஒளி வீச,
பல விஞ்சையைப் புலம்பி அழகான புருவம் சுழற்றி
இந்த்ரதநு வந்து உதித்தது என்று புளகம் செலுத்து இரண்டு
கயல் மேவும் பொறிகள் சுழற்றி
... பல மாய வித்தைப் பேச்சுக்களைப்
பலமாகப் பேசி, தமது அழகான புருவங்களைச் சுழற்றி, வானவில் வந்து
தோன்றியது போலப் புளகம் தருகின்ற இரண்டு கயல் மீன் போல் உள்ள
உறுப்பாகிய கண்களைச் சுழற்றி,
ரம்ப பரிசம் பயிற்றி மந்த்ர பொடி கொண்டு அழிக்கும்
வஞ்சர் உறவாமோ
... நிரம்பவும் தொட்டுப் பயின்று, சொக்குப் பொடி
கொண்டு அழிக்கின்ற வஞ்சகர்களாகிய பொது மகளிருடைய உறவு
நல்லதாகுமோ?
உருவம் தரித்து உகந்து கரமும் பிடித்து உவந்து உறவும்
பிடித்த அணங்கை
... மாறுவேடம் பூண்டு, ஆசையுடன் (வளைச்
செட்டியாய் வள்ளியின்) கைகளைப் பற்றி மகிழ்ந்து, அவளது
உறவையும் கொண்டு,
வனம் மீதே ஒளிர் கொம்பினைச் சவுந்தரிய உம்பலைக்
கொணர்ந்து ஒளிர் வஞ்சியைப் புணர்ந்த மணி மார்பா
...
வள்ளிமலைக் காட்டில் விளங்கும் கொம்பினை உடைய அழகிய
(கணபதியாகிய) யானையை வரவழைத்து, விளங்கும் வஞ்சிக்கொடி
போன்ற வள்ளியைக் கலந்த அழகிய மார்பனே,
செரு வெம் களத்தில் வந்த அவுணன் தெறிந்து மங்க சிவம்
அஞ்செழுத்தை முந்த விடுவோனே
... போர் நடந்த கொடிய
போர்க்களத்தில் வந்த சூரன் பிளவுபட்டு அழிய (நமசிவாய என்ற)
பஞ்சாக்ஷரத்தின் ஆற்றலைக் கொண்ட வேலை வேகமாகச்
செலுத்தியவனே,
தினமும் களித்து செம் பொன் உலகம் துதித்து இறைஞ்சு
திரு அம்பலத்து அமர்ந்த பெருமாளே.
... நாள்தோறும்
மகிழ்ச்சியுடன் செவ்விய பொன்னுலகத்தினரான தேவர்கள் துதித்து
வணங்கும் திரு அம்பலத்தில் (சிதம்பரத்தில்) வீற்றிருக்கும் பெருமாளே.
Similar songs:

465 - பருவம் பணை (சிதம்பரம்)

தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்த
     தனனந் தனத்த தந்த ...... தனதான

466 - மதவெம் கரி (சிதம்பரம்)

தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்த
     தனனந் தனத்த தந்த ...... தனதான

Songs from this thalam சிதம்பரம்

449 - கனகசபை மேவும்

450 - கைத்தருண சோதி

451 - இருவினையின் மதி

452 - குகனே குருபரனே

453 - வண்டையொத்து

454 - கங்குலின் குழல்

455 - கொந்தளம் புழு

456 - மந்தரமென் குவடார்

457 - வந்து வந்துவித்தூறி

458 - கதித்துப் பொங்கலு

459 - சிரித்துச் சங்கொளி

460 - தத்தையென்று

461 - தனத்தில் குங்குமத்தை

462 - திருடிகள் இணக்கி

463 - கொந்தரம் குழல்

464 - தியங்கும் சஞ்சலம்

465 - பருவம் பணை

466 - மதவெம் கரி

467 - முகசந்திர புருவம்

468 - சந்திர வோலை

469 - காய மாய வீடு

470 - அவகுண விரகனை

471 - கட்டி முண்டக

472 - நஞ்சினைப் போலுமன

473 - செம் கலச

474 - கரிய மேகமெனும்

475 - கூந்தலாழ விரிந்து

476 - அத்தன் அன்னை

477 - இருள் காட்டு

478 - முல்லைமலர் போலும்

479 - அடப்பக்கம் பிடித்து

480 - அக்குப் பீளை

481 - ஆரத்தோடு அணி

482 - காதைக் காதி

483 - கொள்ளை ஆசை

484 - தாது மாமலர்

485 - எலுப்புத் தோல்

486 - நீல மாமுகில்

487 - வாத பித்தமொடு

488 - சுரும்பு உற்ற

489 - இணங்கித் தட்பொடு

490 - விடுங்கைக்கு ஒத்த

491 - கொந்தள வோலைகள் ஆட

492 - நகையா லெத்திகள்

493 - எழுகடல் மணலை

494 - தறுகணன் மறலி

495 - இரசபா கொத்தமொழி

496 - இருளும் ஓர்கதிரணு

497 - காவி உடுத்தும்

498 - கோதிக் கோதி

499 - சகசம்பக் குடைசூழ்

500 - சகுட முந்தும்

501 - சாந்துடனே புழுகு

502 - சுடரனைய திருமேனி

503 - தத்தை மயில்

504 - துத்தி பொற்றன

505 - நாடா பிறப்பு

506 - நாலு சதுரத்த பஞ்ச

507 - நீலக் குழலார்

508 - பனி போலத் துளி

509 - மகரமொடுறு குழை

510 - மச்ச மெச்சு

511 - மதிய மண்குண

512 - மருவு கடல்முகில்

513 - மனமே உனக்குறுதி

514 - முத்த மோகன

515 - பரமகுரு நாத

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 465