சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
487   சிதம்பரம் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 492 - வாரியார் # 655 )  

வாத பித்தமொடு

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தான தத்ததன தான தத்ததன
     தான தத்ததன தான தத்ததன
          தான தத்ததன தான தத்ததன ...... தந்ததான


வாத பித்தமொடு சூலை விப்புருதி
     யேறு கற்படுவ னீளை பொக்கிருமல்
          மாலை புற்றெழுத லூசல் பற்சனியொ ...... டந்திமாலை
மாச டைக்குருடு காத டைப்பு செவி
     டூமை கெட்டவலி மூல முற்றுதரு
          மாலை யுற்றதொணு றாறு தத்துவர்க ...... ளுண்டகாயம்
வேத வித்துபரி கோல முற்றுவிளை
     யாடு வித்தகட லோட மொய்த்தபல
          வேட மிட்டுபொரு ளாசை பற்றியுழல் ...... சிங்கியாலே
வீடு கட்டிமய லாசை பட்டுவிழ
     வோசை கெட்டுமடி யாமல் முத்திபெற
          வீட ளித்துமயி லாடு சுத்தவெளி ...... சிந்தியாதோ
ஓத அத்திமுகி லோடு சர்ப்பமுடி
     நீறு பட்டலற சூர வெற்பவுண
          ரோடு பட்டுவிழ வேலை விட்டபுக ...... ழங்கிவேலா
ஓந மச்சிவய சாமி சுத்தஅடி
     யார்க ளுக்குமுப காரி பச்சையுமை
          ஓர்பு றத்தருள்சி காம ணிக்கடவுள் ...... தந்தசேயே
ஆதி கற்பகவி நாய கர்க்குபிற
     கான பொற்சரவ ணாப ரப்பிரம
          னாதி யுற்றபொருள் ஓது வித்தமைய ...... றிந்தகோவே
ஆசை பெற்றகுற மாதை நித்தவன
     மேவி சுத்தமண மாடி நற்புலியு
          ராட கப்படிக கோபு ரத்தின்மகிழ் ...... தம்பிரானே.

வாதம் பித்தமோடு சூலை விப்புருதி
     ஏறு கல் படுவன் ஈளை பொக்கு இருமல்
     மாலை புற்று எழுதல் ஊசல் பற்ச(ன்)னி ஓடு அந்தி மாலை
மாசு அடை குருடு காது அடைப்பு செவிடு
     ஊமை கெட்ட வலி மூலம் முற்று தரு
     மாலை உற்ற தொ(ண்)ணூறு ஆறு தத்துவர்கள் உண்ட காயம்
வேத வித்து பரிகோலம் உற்று விளை
     யாடுவித்த கடல் ஓடம் மொய்த்த பல
     வேடம் இட்டு பொருள் ஆசை பற்றி உழல் சிங்கியாலே
வீடு கட்டி மயல் ஆசை பட்டு விழ
     ஓசை கெட்டு மடியாமல் முத்தி பெற
     வீடு அளித்து மயில் ஆடு சுத்த வெளி சிந்தியாதோ
ஓத அத்தி முகிலோடு சர்ப்ப முடி
     நீறு பட்டு அலற சூர(ன்) வெற்பு அவுண
     ரோடு பட்டு விழ வேலை விட்ட புகழ் அங்கி வேலா
ஓம் நமச்சிவய சாமி சுத்த அடி
     யார்களுக்கும் உபகாரி பச்சை உமை
     ஓர் புறத்து அருள் சிகா மணி கடவுள் தந்த சேயே
ஆதி கற்பக விநாயகற்கு பிற
     கான பொன் சரவணா பர பிரமன்
     ஆதி உற்ற பொருள் ஓதுவித்தமை அறிந்த கோவே
ஆசை பெற்ற குற மாதை நித்த(ம்) வனம்
     மேவி சுத்த மணம் ஆடி நல் புலியூர்
     ஆடகப் படிக கோபுரத்தின் மகிழ் தம்பிரானே.
வாதம் பித்தம் மிகுதியால் ஏற்படும் நோய்கள், வயிற்று உளைவு, சிலந்தி, கல் போன்ற ஒரு வகைப் புண் கட்டி, கோழை நோய், குத்திருமல், கண்ட மாலை, புற்றுநோய், (உடல், மனம்) தடுமாற்றம், பல விதமான ஜன்னி நோய் இவற்றுடன் மாலைக்கண், அழுக்கு அடைவதால் வரும் குருடு, காது அடைப்பினால் வரும் செவிட்டுத் தன்மை, ஊமை, கெட்ட வலிப்புகள், மூல நோய் (ஆகிய நோய்கள்) காய்த்து முதிர்ந்த மரம்போன்றது இந்த உடல், முறையாகப் பொருந்திய தொண்ணூற்றாறு தத்துவங்கள் இடம்பெறுகின்ற உடல், வேதத்தின் வித்தாகிய இறைவன் பல திருக்கோலத்தைப் பூண்டு விளையாட்டாக ஆட்டுவிக்கின்ற கடலிடைத் தோணிபோல அலைப்புறும் உடல், சூழ்கின்ற பலவிதமான வேடங்களைப் பூண்டு பொருளாசை கொண்டு திரிகின்ற, விஷம் போன்ற அழி செயலாலே, வீடு கட்டி, அதனுள் காம மயக்க ஆசையில் பட்டு வீழ்ந்து, (உள்ளோசையாகிய) நாதம் அழிந்து, நான் இறந்து படாமல் முக்தியை அடையுமாறு வீட்டை அளித்து, நீ மயில் மீது நடனம் செய்கின்ற வெட்ட வெளியான பரமானந்த நிலையைப் பெற என் உள்ளம் தியானிக்காதோ? அலையோசை மிகுந்த கடல், மேகங்கள், (ஆதிசேஷனாகிய) பாம்பின் முடிகள் (இவை எல்லாம்) பொடிபட்டுக் கலங்க, சூரனும், அவனுடைய எழுகிரியும், அங்கிருந்த அசுரர்களோடு அழிந்து விழும்படி கடலில் செலுத்திய புகழ் மிக்க நெருப்புப்போன்ற வேலை உடையவனே, ஓம் நமசிவய என்னும் பிரணவத்தோடு கூடிய ஐந்தெழுத்துக்கு மூலப் பொருளாகிய கடவுள், தூய அடியார்களுக்கு உதவி செய்பவர், பச்சை நிறங் கொண்ட உமையை தமது ஒரு பாகத்தில் வைத்து அருள் சுரக்கும் சிகாமணித் தெய்வமாகிய சிவபெருமான் பெற்ற குழந்தையே, முதலில் தோன்றிய கற்பக விநாயகருக்குப் பின்னர் தோன்றிய அழகிய சரவண மூர்த்தியே, ஆதியாயுள்ள மூலமந்திரப் பொருளை ஓதுவிக்கும் தன்மை எவ்வண்ணம் என்று தெரிந்திருந்த தலைவனே, உன் காதலைப் பெற்ற குற மாதாகிய வள்ளியை நாள்தோறும் தினைப்புனத்துக்குச் சென்று பரிசுத்தமான வகையில் திருமணம் புரிந்து நல்ல புலியூர் (சிதம்பரம்) என்னும் தலத்தில் பொன்னும் பளிங்கும் போல அழகு வாய்ந்த கோபுரத்தில் மகிழ்ந்து மேவும் தம்பிரானே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
வாதம் பித்தமோடு சூலை விப்புருதி ... வாதம் பித்தம் மிகுதியால்
ஏற்படும் நோய்கள், வயிற்று உளைவு, சிலந்தி,
ஏறு கல் படுவன் ஈளை பொக்கு இருமல் ... கல் போன்ற ஒரு
வகைப் புண் கட்டி, கோழை நோய், குத்திருமல்,
மாலை புற்று எழுதல் ஊசல் பற்ச(ன்)னி ஓடு அந்தி மாலை ...
கண்ட மாலை, புற்றுநோய், (உடல், மனம்) தடுமாற்றம், பல விதமான
ஜன்னி நோய் இவற்றுடன் மாலைக்கண்,
மாசு அடை குருடு காது அடைப்பு செவிடு ... அழுக்கு
அடைவதால் வரும் குருடு, காது அடைப்பினால் வரும் செவிட்டுத்
தன்மை,
ஊமை கெட்ட வலி மூலம் முற்று தரு ... ஊமை, கெட்ட வலிப்புகள்,
மூல நோய் (ஆகிய நோய்கள்) காய்த்து முதிர்ந்த மரம்போன்றது இந்த
உடல்,
மாலை உற்ற தொ(ண்)ணூறு ஆறு தத்துவர்கள் உண்ட
காயம்
... முறையாகப் பொருந்திய தொண்ணூற்றாறு தத்துவங்கள்
இடம்பெறுகின்ற உடல்,
வேத வித்து பரிகோலம் உற்று விளையாடுவித்த ... வேதத்தின்
வித்தாகிய இறைவன் பல திருக்கோலத்தைப் பூண்டு விளையாட்டாக
ஆட்டுவிக்கின்ற
கடல் ஓடம் ... கடலிடைத் தோணிபோல அலைப்புறும் உடல்,
மொய்த்த பல வேடம் இட்டு ... சூழ்கின்ற பலவிதமான
வேடங்களைப் பூண்டு
பொருள் ஆசை பற்றி உழல் சிங்கியாலே ... பொருளாசை
கொண்டு திரிகின்ற, விஷம் போன்ற அழி செயலாலே,
வீடு கட்டி மயல் ஆசை பட்டு விழ ... வீடு கட்டி, அதனுள்
காம மயக்க ஆசையில் பட்டு வீழ்ந்து,
ஓசை கெட்டு மடியாமல் முத்தி பெற வீடு அளித்து ...
(உள்ளோசையாகிய) நாதம் அழிந்து, நான் இறந்து படாமல் முக்தியை
அடையுமாறு வீட்டை அளித்து,
மயில் ஆடு சுத்த வெளி சிந்தியாதோ ... நீ மயில் மீது நடனம்
செய்கின்ற வெட்ட வெளியான பரமானந்த நிலையைப் பெற என்
உள்ளம் தியானிக்காதோ?
ஓத அத்தி முகிலோடு சர்ப்ப முடி ... அலையோசை மிகுந்த
கடல், மேகங்கள், (ஆதிசேஷனாகிய) பாம்பின் முடிகள் (இவை எல்லாம்)
நீறு பட்டு அலற சூர(ன்) வெற்பு அவுணரோடு ... பொடிபட்டுக்
கலங்க, சூரனும், அவனுடைய எழுகிரியும், அங்கிருந்த அசுரர்களோடு
பட்டு விழ வேலை விட்ட புகழ் அங்கி வேலா ... அழிந்து
விழும்படி கடலில் செலுத்திய புகழ் மிக்க நெருப்புப்போன்ற வேலை
உடையவனே,
ஓம் நமச்சிவய சாமி சுத்த அடியார்களுக்கும் உபகாரி ... ஓம்
நமசிவய என்னும் பிரணவத்தோடு கூடிய ஐந்தெழுத்துக்கு மூலப்
பொருளாகிய கடவுள், தூய அடியார்களுக்கு உதவி செய்பவர்,
பச்சை உமை ஓர் புறத்து அருள் சிகா மணி கடவுள் தந்த
சேயே
... பச்சை நிறங் கொண்ட உமையை தமது ஒரு பாகத்தில் வைத்து
அருள் சுரக்கும் சிகாமணித் தெய்வமாகிய சிவபெருமான் பெற்ற
குழந்தையே,
ஆதி கற்பக விநாயகற்கு பிறகான பொன் சரவணா ... முதலில்
தோன்றிய கற்பக விநாயகருக்குப் பின்னர் தோன்றிய அழகிய சரவண
மூர்த்தியே,
பர பிரமன் ஆதி உற்ற பொருள் ஓதுவித்தமை அறிந்த
கோவே
... ஆதியாயுள்ள மூலமந்திரப் பொருளை ஓதுவிக்கும் தன்மை
எவ்வண்ணம் என்று தெரிந்திருந்த தலைவனே,
ஆசை பெற்ற குற மாதை நித்த(ம்) வனம் மேவி ... உன்
காதலைப் பெற்ற குற மாதாகிய வள்ளியை நாள்தோறும்
தினைப்புனத்துக்குச் சென்று
சுத்த மணம் ஆடி நல் புலியூர் ... பரிசுத்தமான வகையில் திருமணம்
புரிந்து நல்ல புலியூர் (சிதம்பரம்) என்னும் தலத்தில்
ஆடகப் படிக கோபுரத்தின் மகிழ் தம்பிரானே. ... பொன்னும்
பளிங்கும் போல அழகு வாய்ந்த கோபுரத்தில் மகிழ்ந்து மேவும் தம்பிரானே.
Similar songs:

487 - வாத பித்தமொடு (சிதம்பரம்)

தான தத்ததன தான தத்ததன
     தான தத்ததன தான தத்ததன
          தான தத்ததன தான தத்ததன ...... தந்ததான

Songs from this thalam சிதம்பரம்

449 - கனகசபை மேவும்

450 - கைத்தருண சோதி

451 - இருவினையின் மதி

452 - குகனே குருபரனே

453 - வண்டையொத்து

454 - கங்குலின் குழல்

455 - கொந்தளம் புழு

456 - மந்தரமென் குவடார்

457 - வந்து வந்துவித்தூறி

458 - கதித்துப் பொங்கலு

459 - சிரித்துச் சங்கொளி

460 - தத்தையென்று

461 - தனத்தில் குங்குமத்தை

462 - திருடிகள் இணக்கி

463 - கொந்தரம் குழல்

464 - தியங்கும் சஞ்சலம்

465 - பருவம் பணை

466 - மதவெம் கரி

467 - முகசந்திர புருவம்

468 - சந்திர வோலை

469 - காய மாய வீடு

470 - அவகுண விரகனை

471 - கட்டி முண்டக

472 - நஞ்சினைப் போலுமன

473 - செம் கலச

474 - கரிய மேகமெனும்

475 - கூந்தலாழ விரிந்து

476 - அத்தன் அன்னை

477 - இருள் காட்டு

478 - முல்லைமலர் போலும்

479 - அடப்பக்கம் பிடித்து

480 - அக்குப் பீளை

481 - ஆரத்தோடு அணி

482 - காதைக் காதி

483 - கொள்ளை ஆசை

484 - தாது மாமலர்

485 - எலுப்புத் தோல்

486 - நீல மாமுகில்

487 - வாத பித்தமொடு

488 - சுரும்பு உற்ற

489 - இணங்கித் தட்பொடு

490 - விடுங்கைக்கு ஒத்த

491 - கொந்தள வோலைகள் ஆட

492 - நகையா லெத்திகள்

493 - எழுகடல் மணலை

494 - தறுகணன் மறலி

495 - இரசபா கொத்தமொழி

496 - இருளும் ஓர்கதிரணு

497 - காவி உடுத்தும்

498 - கோதிக் கோதி

499 - சகசம்பக் குடைசூழ்

500 - சகுட முந்தும்

501 - சாந்துடனே புழுகு

502 - சுடரனைய திருமேனி

503 - தத்தை மயில்

504 - துத்தி பொற்றன

505 - நாடா பிறப்பு

506 - நாலு சதுரத்த பஞ்ச

507 - நீலக் குழலார்

508 - பனி போலத் துளி

509 - மகரமொடுறு குழை

510 - மச்ச மெச்சு

511 - மதிய மண்குண

512 - மருவு கடல்முகில்

513 - மனமே உனக்குறுதி

514 - முத்த மோகன

515 - பரமகுரு நாத

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 487