சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
611   ஊதிமலை திருப்புகழ் ( குருஜி இராகவன் # 149 - வாரியார் # 401 )  

ஆதிமக மாயி

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தானதன தான தந்த தானதன தான தந்த
     தானதன தான தந்த ...... தனதான


ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த
     ஆவுடைய மாது தந்த ...... குமரேசா
ஆதரவ தாய்வ ருந்தி யாதியரு ணேச ரென்று
     ஆளுமுனை யேவ ணங்க ...... அருள்வாயே
பூதமது வான வைந்து பேதமிட வேய லைந்து
     பூரணசி வாக மங்க ...... ளறியாதே
பூணுமுலை மாதர் தங்கள் ஆசைவகை யேநி னைந்து
     போகமுற வேவி ரும்பு ...... மடியேனை
நீதயவ தாயி ரங்கி நேசவரு ளேபு ரிந்து
     நீதிநெறி யேவி ளங்க ...... வுபதேச
நேர்மைசிவ னார்தி கழ்ந்த காதிலுரை வேத மந்த்ர
     நீலமயி லேறி வந்த ...... வடிவேலா
ஓதுமறை யாக மஞ்சொல் யோகமது வேபு ரிந்து
     ஊழியுணர் வார்கள் தங்கள் ...... வினைதீர
ஊனுமுயி ராய்வ ளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த
     ஊதிமலை மீது கந்த ...... பெருமாளே.

ஆதிமக மாயி யம்பை
தேவி சிவனார்மகிழ்ந்த ஆவுடைய மாது
தந்த குமரேசா
ஆதரவதாய் வருந்தி
ஆதியருணேச ரென்று
ஆளும் உனையே வணங்க அருள்வாயே
பூதமதுவான ஐந்து பேதமிடவே அலைந்து
பூரண சிவாகமங்கள் அறியாதே
பூணுமுலை மாதர் தங்கள்
ஆசைவகை யேநி னைந்து
போகமுறவே விரும்பும் அடியேனை
நீதயவதாய் இரங்கி
நேசவருளே புரிந்து
நீதிநெறியே விளங்க
உபதேச நேர்மை
சிவனார் திகழ்ந்த காதிலுரை
வேத மந்த்ர
நீலமயி லேறி வந்த
வடிவேலா
ஓதுமறை யாகமஞ்சொல்
யோகமதுவே புரிந்து
ஊழியுணர்வார்கள் தங்கள்
வினைதீர
ஊனும் உயிராய் வளர்ந்து
ஓசையுடன் வாழ்வு தந்த
ஊதிமலை மீது உகந்த பெருமாளே.
முதன்மை பெற்ற மாபெரும் தாயாரும், அம்பாளும், தேவியும், சிவபிரான் மகிழ்கின்ற ஆவுடையாள் என்ற பெயர் கொண்டவளுமான உமாதேவியார் பெற்றருளிய குமாரக் கடவுளே, அன்புடன் மனம் கசிந்து உருகி, முழுமுதலாகிய செம்பொருள் ஈசனே என்று துதித்து, ஆட்கொள்கின்ற உன்னை வணங்க அருள்வாய். ஐந்து பூதங்களின் மாறுபாட்டால் உண்டாகிய இந்த உடம்போடு எங்கெல்லாமோ அலைந்து, நிறைவான சிவ ஆகமங்களைத் தெரிந்துகொள்ளாமல், நகைகள் அணிந்த மார்புடைய பெண்களின் விதவிதமான ஆசைகளையே நினைந்து, இன்பம் சுகிக்கவே விரும்பும் என்னை நீ மிக்க கருணை கொண்டு இரக்கப்பட்டு அன்போடு திருவருள் புரிந்து, சைவ நீதியும் சன்மார்க்க நெறியும் விளங்குமாறு எனக்கு உபதேசம் செய்த தன்மையானது, சிவபிரானின் விளங்கும் காதில் உரைத்த ஓம் என்னும் பிரணவ மந்திரப் பொருளே ஆகும். அவ்வாறு எனக்கு உபதேசிக்க நீலமயிலில் ஏறி வந்தருளிய, கூர்மையான வேலாயுதத்தைக் கொண்ட கடவுளே, ஓதப்படும் வேதங்கள், ஆகமங்கள் ஆகியவை கூறும் சிவயோகத்தையே செய்து, விதியின் வழியை நன்கு உணரும் பெரியோர்களின் வினைகள் தீருமாறு அவர்களின் உடலோடும் உயிரோடும் கலந்து வளர்ந்து கீர்த்தியுடன் சிவானுபவ வாழ்வைத் தந்த ஊதிமலை மேல் உள்ளம் உவந்து வாழும் பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
ஆதிமக மாயி யம்பை ... முதன்மை பெற்ற மாபெரும் தாயாரும்,
அம்பாளும்,
தேவி சிவனார்மகிழ்ந்த ஆவுடைய மாது ... தேவியும், சிவபிரான்
மகிழ்கின்ற ஆவுடையாள் என்ற பெயர் கொண்டவளுமான
உமாதேவியார்
தந்த குமரேசா ... பெற்றருளிய குமாரக் கடவுளே,
ஆதரவதாய் வருந்தி ... அன்புடன் மனம் கசிந்து உருகி,
ஆதியருணேச ரென்று ... முழுமுதலாகிய செம்பொருள் ஈசனே
என்று துதித்து,
ஆளும் உனையே வணங்க அருள்வாயே ... ஆட்கொள்கின்ற
உன்னை வணங்க அருள்வாய்.
பூதமதுவான ஐந்து பேதமிடவே அலைந்து ... ஐந்து பூதங்களின்
மாறுபாட்டால் உண்டாகிய இந்த உடம்போடு எங்கெல்லாமோ
அலைந்து,
பூரண சிவாகமங்கள் அறியாதே ... நிறைவான சிவ ஆகமங்களைத்
தெரிந்துகொள்ளாமல்,
பூணுமுலை மாதர் தங்கள் ... நகைகள் அணிந்த மார்புடைய
பெண்களின்
ஆசைவகை யேநி னைந்து ... விதவிதமான ஆசைகளையே
நினைந்து,
போகமுறவே விரும்பும் அடியேனை ... இன்பம் சுகிக்கவே விரும்பும்
என்னை
நீதயவதாய் இரங்கி ... நீ மிக்க கருணை கொண்டு இரக்கப்பட்டு
நேசவருளே புரிந்து ... அன்போடு திருவருள் புரிந்து,
நீதிநெறியே விளங்க ... சைவ நீதியும் சன்மார்க்க நெறியும்
விளங்குமாறு
உபதேச நேர்மை ... எனக்கு உபதேசம் செய்த தன்மையானது,
சிவனார் திகழ்ந்த காதிலுரை ... சிவபிரானின் விளங்கும் காதில்
உரைத்த
வேத மந்த்ர ... ஓம் என்னும் பிரணவ மந்திரப் பொருளே ஆகும்.
நீலமயி லேறி வந்த ... அவ்வாறு எனக்கு உபதேசிக்க நீலமயிலில்
ஏறி வந்தருளிய,
வடிவேலா ... கூர்மையான வேலாயுதத்தைக் கொண்ட கடவுளே,
ஓதுமறை யாகமஞ்சொல் ... ஓதப்படும் வேதங்கள், ஆகமங்கள்
ஆகியவை கூறும்
யோகமதுவே புரிந்து ... சிவயோகத்தையே செய்து,
ஊழியுணர்வார்கள் தங்கள் ... விதியின் வழியை நன்கு உணரும்
பெரியோர்களின்
வினைதீர ... வினைகள் தீருமாறு
ஊனும் உயிராய் வளர்ந்து ... அவர்களின் உடலோடும் உயிரோடும்
கலந்து வளர்ந்து
ஓசையுடன் வாழ்வு தந்த ... கீர்த்தியுடன் சிவானுபவ வாழ்வைத் தந்த
ஊதிமலை மீது உகந்த பெருமாளே. ... ஊதிமலை மேல்
உள்ளம் உவந்து வாழும் பெருமாளே.
Similar songs:

232 - வாதமொடு சூலை (சுவாமிமலை)

தானதன தான தந்த தானதன தான தந்த
     தானதன தான தந்த ...... தனதான

545 - நீல மயில் சேரும் (பேறைநகர்)

தானதன தான தந்த தானதன தான தந்த
     தானதன தான தந்த ...... தனதான

611 - ஆதிமக மாயி (ஊதிமலை)

தானதன தான தந்த தானதன தான தந்த
     தானதன தான தந்த ...... தனதான

703 - ஆதிமுதன் நாளில் (கோடைநகர்)

தானதன தான தந்த தானதன தான தந்த
     தானதன தான தந்த ...... தனதான

704 - சாலநெடு நாள் (கோடைநகர்)

தானதன தான தந்த தானதன தான தந்த
     தானதன தான தந்த ...... தனதான

1310 - சீலமுள தாயர் (பழமுதிர்ச்சோலை)

தானதன தான தந்த தானதன தான தந்த
     தானதன தான தந்த ...... தனதான

1311 - வீர மதன் நூல் (பழமுதிர்ச்சோலை)

தானதன தான தந்த தானதன தான தந்த
     தானதன தான தந்த ...... தனதான

Songs from this thalam ஊதிமலை

1307 - அகரமுமாகி

1308 - இலவிதழ் கோதி

1309 - காரணமதாக

1310 - சீலமுள தாயர்

1311 - வீர மதன் நூல்

1312 - வாரண முகம்

1313 - ஆசை நாலுசதுர

1314 - கருவாகியெதாய்

1315 - சீர் சிறக்கும் மேனி

1316 - துடிகொள் நோய்

1317 - பாசத்தால் விலை

1318 - வாதினை அடர்ந்த

1319 - வார்குழையை

1320 - அழகு தவழ்குழல்

1321 - தலைமயிர் கொக்கு

1322 - மலரணை ததும்ப

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 611