சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
772   சீகாழி திருப்புகழ் ( - வாரியார் # 776 )  

சிந்து உற்று எழு

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தந்தத்தன தானன தந்தத் ...... தனதான

சிந்துற்றெழு மாமதி அங்கித் ...... திரளாலே
தென்றற்றரு வாசமி குந்துற் ...... றெழலாலே
அந்திப்பொழு தாகிய கங்குற் ...... றிரளாலே
அன்புற்றெழு பேதைம யங்கித் ...... தனியானாள்
நந்துற்றிடு வாரியை மங்கத் ...... திகழாயே
நஞ்சொத்தொளிர் வேலினை யுந்திப் ...... பொருவேளே
சந்தக்கவி நூலினர் தஞ்சொற் ...... கினியோனே
சண்பைப்பதி மேவிய கந்தப் ...... பெருமாளே.

சிந்து உற்று எழு மா மதி அங்கித் திரளாலே
தென்றல் தரு வாசம் மிகுந்து உற்று எழலாலே
அந்திப் பொழுதாகிய கங்குல் திரளாலே
அன்புற்று எழு பேதை மயங்கித் தனி ஆனாள்
நந்து உற்றிடு வாரியை மங்கத் திகழாயே நஞ்சு ஒத்து ஒளிர்
வேலினை உந்திப் பொரு வேளே
சந்தக் கவி நூலினர் தம் சொற்கு இனியோனே
சண்பைப் பதி மேவிய கந்தப் பெருமாளே.
கடலில் இருந்து எழுகின்ற அழகிய சந்திரன் வீசும் நெருப்புப் பிழம்பாலே, தென்றல் காற்று சந்தனச் சோலையின் நறு மணத்துடன் எழுந்து வருவதாலே, மாலைப் பொழுதாகிய இரவின் நெருக்கத்தாலே, அன்பு மிகுந்து எழும் இப் பேதைப் பெண் மயக்கம் கொண்டு தனித்திருக்கின்றாள். சங்குகள் உள்ள சமுத்திரத்தை, கலங்கிய தோற்றம்ததும்பும்படியாக, விஷம் போன்று விளங்கும் வேலாயுதத்தைச் செலுத்திப் போர் செய்த அரசே, சந்தக் கவி நூல் சொல்லும் புலவர்களுடைய சொல்லில் விருப்பம் உடையவனே, சண்பை என்னும் சீகாழியில் பொருந்தி வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
சிந்து உற்று எழு மா மதி அங்கித் திரளாலே ... கடலில் இருந்து
எழுகின்ற அழகிய சந்திரன் வீசும் நெருப்புப் பிழம்பாலே,
தென்றல் தரு வாசம் மிகுந்து உற்று எழலாலே ... தென்றல் காற்று
சந்தனச் சோலையின் நறு மணத்துடன் எழுந்து வருவதாலே,
அந்திப் பொழுதாகிய கங்குல் திரளாலே ... மாலைப் பொழுதாகிய
இரவின் நெருக்கத்தாலே,
அன்புற்று எழு பேதை மயங்கித் தனி ஆனாள் ... அன்பு மிகுந்து
எழும் இப் பேதைப் பெண் மயக்கம் கொண்டு தனித்திருக்கின்றாள்.
நந்து உற்றிடு வாரியை மங்கத் திகழாயே நஞ்சு ஒத்து ஒளிர்
வேலினை உந்திப் பொரு வேளே
... சங்குகள் உள்ள சமுத்திரத்தை,
கலங்கிய தோற்றம்ததும்பும்படியாக, விஷம் போன்று விளங்கும்
வேலாயுதத்தைச் செலுத்திப் போர் செய்த அரசே,
சந்தக் கவி நூலினர் தம் சொற்கு இனியோனே ... சந்தக் கவி நூல்
சொல்லும் புலவர்களுடைய சொல்லில் விருப்பம் உடையவனே,
சண்பைப் பதி மேவிய கந்தப் பெருமாளே. ... சண்பை என்னும் சீகாழியில்
பொருந்தி வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.
Similar songs:

772 - சிந்து உற்று எழு (சீகாழி)

தந்தத்தன தானன தந்தத் ...... தனதான

Songs from this thalam சீகாழி

764 - அலைகடல் சிலை

765 - இரதமான தேன்

766 - ஊனத்தசை தோல்கள்

767 - ஒய்யா ரச்சிலை

768 - கட்காமக்ரோத

769 - கொங்கு லாவிய

770 - சந்தனம் பரிமள

771 - சருவி இகழ்ந்து

772 - சிந்து உற்று எழு

773 - செக்கர்வானப் பிறை

774 - தினமணி சார்ங்க

775 - பூமாது உரமேயணி

776 - மதனச்சொற் கார

777 - விடம் என மிகுத்த

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 772