தங்கம் திரண்டு சேர்கின்ற பெரிய மேரு மலையை அடைந்து அதன் மேல் தக தக என்று மின்னுகின்ற ஒளிவீசும் செண்டாயுதத்தை (பொற்பிரம்பை) எறிந்திட்ட புகலிடமானவனே, மிக்க மதம் கொண்டு, பலவித பக்ஷணங்களைப் புசித்து, அனைத்தையும் கவள அளவாக உண்டு வளர்ந்த யானைமுகனுக்கு இளையவனாகப் பிறந்த முருகனே, ஆதிசேஷன் மீது அறிதுயில் கொள்ளும் வல்லமை உடையவரும், பாற்கடலை முன்பு (கூர்மாவதாரத்தில்) தாமே கடைந்த பெரும் பொருளும், வானில் படரும் கார்முகில் நிறத்தவருமான திருமாலின் அன்பார்ந்த மருமகனே, பல துன்பங்களால் மனம் சுழன்று கலக்கமுற்ற அற்பனும், புலால் உண்பவனும், கொலைகாரனுமான நான் செய்கின்ற பாவங்கள் எல்லாம் இன்றோடு அழிந்து போக நீ என் முன் தோன்றி திருவருள் புரியவேண்டும். பாவமில்லாதவன் என்ற பெயர் நிலைத்து நின்று, எப்போதும் சுழன்று திரியும் திரிபுரத்தையும் வெற்றி கொள்ள, அக்கினிதேவன் மகிழ்ச்சியோடு வந்து பற்றிக் கொள்ளும்படியாக சிரித்தே எரித்த திறமைகொண்ட சிவனாரின் திருக்குமரனே, வலிமையோடு வந்து முழங்கும் பறை வாத்தியங்கள் (அதே ஒலியோடு) உலகம் அதிர, அண்டங்கள் கூட்டமிகுதியால் நெரிய, போருக்கு வந்த சூரர்களின் மனத்தில் சென்று அக்கினி சுடும்படி, அந்த நாள் அவர்களின் உடல்களும் குடல்களும் கிழியும்படி, மயிலின் முதுகின் மேல் வந்தருளிய மதிப்பும் பெருமையும் உடையவனே, சந்திரனும் சூரியனும் தடவிச் செல்லும்படியான உயரமான மரங்கள் உள்ள சோலைகள் நிறைந்த வளமிக்க திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் பெருமாளே.
கனகந்திரள்கின்ற பெருங்கிரி ... தங்கம் திரண்டு சேர்கின்ற பெரிய மேரு மலையை தனில்வந்து தகன்தகன் என்றிடு ... அடைந்து அதன் மேல் தக தக என்று மின்னுகின்ற கதிர் மிஞ்சிய செண்டை எறிந்திடு ... ஒளிவீசும் செண்டாயுதத்தை (பொற்பிரம்பை) எறிந்திட்ட கதியோனே ... புகலிடமானவனே, கடமிஞ்சி அநந்தவிதம் புணர் ... மிக்க மதம் கொண்டு, பலவித பக்ஷணங்களைப் புசித்து, கவளந்தனை உண்டு வளர்ந்திடு ... அனைத்தையும் கவள அளவாக உண்டு வளர்ந்த கரியின்றுணை என்றுபிறந்திடு முருகோனே ... யானைமுகனுக்கு இளையவனாகப் பிறந்த முருகனே, பனகந்துயில்கின்ற திறம்புனை ... ஆதிசேஷன் மீது அறிதுயில் கொள்ளும் வல்லமை உடையவரும், கடல்முன்பு கடைந்த பரம்பரர் ... பாற்கடலை முன்பு (கூர்மாவதாரத்தில்) தாமே கடைந்த பெரும் பொருளும், படரும்புயல் என்றவர் அன்புகொள் மருகோனே ... வானில் படரும் கார்முகில் நிறத்தவருமான திருமாலின் அன்பார்ந்த மருமகனே, பலதுன்பம் உழன்று கலங்கிய ... பல துன்பங்களால் மனம் சுழன்று கலக்கமுற்ற சிறியன்புலையன் கொலையன் ... அற்பனும், புலால் உண்பவனும், கொலைகாரனுமான நான் புரி பவமின்று கழிந்திட வந்தருள் புரிவாயே ... செய்கின்ற பாவங்கள் எல்லாம் இன்றோடு அழிந்து போக நீ என் முன் தோன்றி திருவருள் புரியவேண்டும். அனகன்பெயர் நின்று ... பாவமில்லாதவன் என்ற பெயர் நிலைத்து நின்று, உருளுந்திரி புரமுந்திரி வென்றிட ... எப்போதும் சுழன்று திரியும் திரிபுரத்தையும் வெற்றி கொள்ள, இன்புடன் அழலுந்த ... அக்கினிதேவன் மகிழ்ச்சியோடு வந்து பற்றிக் கொள்ளும்படியாக நகுந்திறல் கொண்டவர் புதல்வோனே ... சிரித்தே எரித்த திறமைகொண்ட சிவனாரின் திருக்குமரனே, அடல்வந்து முழங்கியிடும்பறை ... வலிமையோடு வந்து முழங்கும் பறை வாத்தியங்கள் டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென ... (அதே ஒலியோடு) அதிர்கின்றிட அண்டநெரிந்திட ... உலகம் அதிர, அண்டங்கள் கூட்டமிகுதியால் நெரிய, வருசூரர் மனமும் தழல் சென்றிட ... போருக்கு வந்த சூரர்களின் மனத்தில் சென்று அக்கினி சுடும்படி, அன்றவர் உடலுங் குடலுங் கிழி கொண்டிட ... அந்த நாள் அவர்களின் உடல்களும் குடல்களும் கிழியும்படி, மயில்வென்றனில் வந்தருளும் ... மயிலின் முதுகின் மேல் வந்தருளிய கன பெரியோனே ... மதிப்பும் பெருமையும் உடையவனே, மதியுங்கதிருந் தடவும்படி ... சந்திரனும் சூரியனும் தடவிச் செல்லும்படியான உயர்கின்ற வனங்கள் பொருந்திய ... உயரமான மரங்கள் உள்ள சோலைகள் நிறைந்த வளமொன்றுப ரங்கிரி வந்தருள் பெருமாளே. ... வளமிக்க திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் பெருமாளே.
This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thiruppugazh song sequence no 11 thalam %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D thiru name %E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1