சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
13   திருப்பரங்குன்றம் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 9 - வாரியார் # 15 )  

சந்ததம் பந்த

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தந்தனந் தந்தத் ...... தனதான
     தந்தனந் தந்தத் ...... தனதான


சந்ததம் பந்தத் ...... தொடராலே
     சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே
கந்தனென் றென்றுற் ...... றுனைநாளும்
     கண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே
     சங்கரன் பங்கிற் ...... சிவைபாலா
செந்திலங் கண்டிக் ...... கதிர்வேலா
     தென்பரங் குன்றிற் ...... பெருமாளே.

சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலந் துஞ்சித் திரியாதே
கந்தனென்று என்று உற்று உனைநாளும்
கண்டுகொண்டு அன்புற்றிடுவேனோ
தந்தியின் கொம்பை புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றிற் பெருமாளே.
எப்பொழுதும் பாசம் என்ற தொடர்பினாலே துயரத்தால் சோர்ந்து திரியாமல், கந்தன் என அடிக்கடி மனதார உன்னை தினமும் உள்ளக் கண்களால் கண்டு தரிசித்து, யான்அன்பு கொள்வேனோ? (ஐராவதம் என்னும்) யானை வளர்த்த கொடி போன்ற தேவயானையை மணம் செய்துகொண்டு சேர்பவனே, சங்கரனின் பக்கத்தில் தங்கிய பார்வதியின் குழந்தாய், திருச்செந்தூரிலும், அழகிய கண்டியிலும் ஒளிவீசும் வேலோடு விளங்குபவனே, அழகிய திருப்பரங்குன்றில் அமர்ந்த பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
சந்ததம் பந்தத் தொடராலே ... எப்பொழுதும் பாசம் என்ற
தொடர்பினாலே
சஞ்சலந் துஞ்சித் திரியாதே ... துயரத்தால் சோர்ந்து திரியாமல்,
கந்தனென்று என்று உற்று உனைநாளும் ... கந்தன் என அடிக்கடி
மனதார உன்னை தினமும்
கண்டுகொண்டு ... உள்ளக் கண்களால் கண்டு தரிசித்து,
அன்புற்றிடுவேனோ ... யான்அன்பு கொள்வேனோ?
தந்தியின் கொம்பை ... (ஐராவதம் என்னும்) யானை வளர்த்த கொடி
போன்ற தேவயானையை
புணர்வோனே ... மணம் செய்துகொண்டு சேர்பவனே,
சங்கரன் பங்கிற் சிவைபாலா ... சங்கரனின் பக்கத்தில் தங்கிய
பார்வதியின் குழந்தாய்,
செந்திலங் கண்டிக் கதிர்வேலா ... திருச்செந்தூரிலும், அழகிய
கண்டியிலும் ஒளிவீசும் வேலோடு விளங்குபவனே,
தென்பரங் குன்றிற் பெருமாளே. ... அழகிய திருப்பரங்குன்றில்
அமர்ந்த பெருமாளே.
Similar songs:

13 - சந்ததம் பந்த (திருப்பரங்குன்றம்)

தந்தனந் தந்தத் ...... தனதான
     தந்தனந் தந்தத் ...... தனதான

Songs from this thalam திருப்பரங்குன்றம்

7 - அருக்கு மங்கையர்

8 - உனைத் தினம்

9 - கருவடைந்து

10 - கறுக்கும் அஞ்சன

11 - கனகந்திரள்கின்ற

12 - காதடருங்கயல்

13 - சந்ததம் பந்த

14 - சருவும்படி

15 - தடக்கைப் பங்கயம்

16 - பதித்த செஞ்சந்த

17 - பொருப்புறுங்

18 - மன்றலங் கொந்துமிசை

19 - வடத்தை மிஞ்சிய

20 - வரைத்தடங் கொங்கை

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song sequence no 13 thalam %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D thiru name %E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4