சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
62   திருச்செந்தூர் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 30 - வாரியார் # 103 )  

தண்டை அணி

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந்
     தந்ததன தந்தனந் ...... தந்ததானா


தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
     தண்கழல்சி லம்புடன் ...... கொஞ்சவேநின்
தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
     சந்தொடம ணைந்துநின் ...... றன்புபோலக்
கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
     கஞ்சமலர் செங்கையுஞ் ...... சிந்துவேலும்
கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
     கண்குளிர என்றன்முன் ...... சந்தியாவோ
புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்
     பொங்கியெழ வெங்களங் ...... கொண்டபோது
பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
     புண்டரிகர் தந்தையுஞ் ...... சிந்தைகூரக்
கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
     கொஞ்சிநட னங்கொளுங் ...... கந்தவேளே
கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
     கும்பமுநி கும்பிடுந் ...... தம்பிரானே.

தண்டை அணி வெண்டையங் கிண் கிணி சதங்கையுந்
     தண்கழல் சிலம்புடன் கொஞ்சவே நின்
தந்தையினை முன்பரிந்து இன்பவுரி கொண்டு நன்
     சந்தொடம் அணைந்து நின்று அன்பு போல
கண்டுற கடம்புடன் சந்த மகுடங்களும்
     கஞ்ச மலர் செங்கையும் சிந்துவேலும்
கண்களு முகங்களும் சந்திர நிறங்களும்
     கண் குளிர என்றன்முன் சந்தியாவோ?
புண்டரிகர் அண்டமும் கொண்ட பகிரண்டமும்
     பொங்கி எழ வெங்களங் கொண்ட போது
பொன்கிரி யெனஞ் சிறந்து எங்கினும் வளர்ந்து முன்
     புண்டரிகர் தந்தையும் சிந்தைகூர
கொண்ட நடனம் பதம் செந்திலிலும் என்றன் முன்
     கொஞ்சி நடனங் கொளும் கந்தவேளே
கொங்கை குறமங்கையின் சந்த மணம் உண்டிடும் (தம்பிரானே)
     கும்பமுனி கும்பிடும் தம்பிரானே
தண்டை என்கின்ற காலணி, வெண்டையம் என்ற வீரக் காலணி, கிண்கிணி, (சலங்கை என்னும்) சதங்கையும், அருள் கழல்களும், சிலம்புடன் (எல்லாம் ஒன்றுபட்டுக்) கொஞ்சி ஒலிக்க உன் தந்தை சிவனை அன்புடன் வலம்வந்து நல்ல மகிழ்ச்சி கொண்டு அணைத்து நிலைத்து நின்ற அந்த அன்பு போலவே, (இப்போது நான் உன்னைக்) கண்டு மனம் ஒன்றுபட, கடம்ப மாலையும், அழகிய மணிமுடிகளும், தாமரை மலர் போன்ற சிவந்த கைகளும், சூரனை அழித்த வேலும், பன்னிரு கண்களும், ஆறு திரு முகங்களும், (அவற்றில் தோன்றும்) நிலவொளிகளும், என் கண்கள் குளிரும்படியாக என் முன்புவந்து தோன்ற மாட்டாவோ? தாமரையில் தோன்றியவன் (பிரமன்) உலகமும், அதனை உட்கொண்ட வெளியண்டங்களூம், மகிழ்ச்சி பொங்கி எழ, நீ போர்க்களம் புகுந்த போது, பொன்மலை என்னும்படி அழகு சிறந்து எல்லாத் திசைகளிலும் நிறைந்து நின்று தாமரைக்கண்ணன் திருமாலும், தந்தை சிவனும் மன மகிழ்ச்சி கொள்ளும் படியாக நீ கொண்ட நடனப் பாதங்கள் திருச்செந்தூர் ஆகிய இந்தப் பதியிலும், என்முன் கொஞ்சி நடனம் கொள்ளும் கந்தனாகிய மன்மத சொரூபனே குறமங்கை வள்ளியின் சந்தன மணம் வீசும் மார்பை நுகர்கின்ற தம்பிரானே அகத்திய முனிவர் தொழும் தம்பிரானே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
தண்டை அணி ... தண்டை என்கின்ற காலணி,
வெண்டையங் கிண் கிணி ... வெண்டையம் என்ற வீரக் காலணி,
கிண்கிணி,
சதங்கையுந் ... (சலங்கை என்னும்) சதங்கையும்,
தண்கழல் சிலம்புடன் ... அருள் கழல்களும், சிலம்புடன்
கொஞ்சவே ... (எல்லாம் ஒன்றுபட்டுக்) கொஞ்சி ஒலிக்க
நின் தந்தையினை முன்பரிந்து ... உன் தந்தை சிவனை அன்புடன்
இன்பவுரி கொண்டு ... வலம்வந்து
நன் சந்தொடம் அணைந்து ... நல்ல மகிழ்ச்சி கொண்டு அணைத்து
நின்று அன்பு போல ... நிலைத்து நின்ற அந்த அன்பு போலவே,
கண்டுற ... (இப்போது நான் உன்னைக்) கண்டு மனம் ஒன்றுபட,
கடம்புடன் சந்த மகுடங்களும் ... கடம்ப மாலையும், அழகிய
மணிமுடிகளும்,
கஞ்ச மலர் செங்கையும் ... தாமரை மலர் போன்ற சிவந்த கைகளும்,
சிந்துவேலும் ... சூரனை அழித்த வேலும்,
கண்களு முகங்களும் ... பன்னிரு கண்களும், ஆறு திரு முகங்களும்,
சந்திர நிறங்களும் ... (அவற்றில் தோன்றும்) நிலவொளிகளும்,
கண் குளிர ... என் கண்கள் குளிரும்படியாக
என்றன்முன் சந்தியாவோ? ... என் முன்புவந்து தோன்ற
மாட்டாவோ?
புண்டரிகர் அண்டமும் ... தாமரையில் தோன்றியவன் (பிரமன்)
உலகமும்,
கொண்ட பகிரண்டமும் ... அதனை உட்கொண்ட
வெளியண்டங்களூம்,
பொங்கி எழ ... மகிழ்ச்சி பொங்கி எழ,
வெங்களங் கொண்ட போது ... நீ போர்க்களம் புகுந்த போது,
பொன்கிரி யெனஞ் சிறந்து ... பொன்மலை என்னும்படி
அழகு சிறந்து
எங்கினும் வளர்ந்து ... எல்லாத் திசைகளிலும் நிறைந்து நின்று
புண்டரிகர் தந்தையும் ... தாமரைக்கண்ணன் திருமாலும், தந்தை
சிவனும்
சிந்தைகூர ... மன மகிழ்ச்சி கொள்ளும் படியாக
கொண்ட நடனம் பதம் ... நீ கொண்ட நடனப் பாதங்கள்
செந்திலிலும் ... திருச்செந்தூர் ஆகிய இந்தப் பதியிலும்,
என்றன் முன் கொஞ்சி நடனங் கொளும் ... என்முன் கொஞ்சி
நடனம் கொள்ளும்
கந்தவேளே ... கந்தனாகிய மன்மத சொரூபனே
கொங்கை குறமங்கையின் சந்த மணம் ... குறமங்கை வள்ளியின்
சந்தன மணம் வீசும்
உண்டிடும் (தம்பிரானே) ... மார்பை நுகர்கின்ற தம்பிரானே
கும்பமுனி கும்பிடும் தம்பிரானே. ... அகத்திய முனிவர் தொழும்
தம்பிரானே.
Similar songs:

62 - தண்டை அணி (திருச்செந்தூர்)

தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந்
     தந்ததன தந்தனந் ...... தந்ததானா

Songs from this thalam திருச்செந்தூர்

21 - அங்கை மென்குழல்

22 - அந்தகன் வருந்தினம்

23 - அமுத உததி விடம்

24 - அம்பொத்த விழி

25 - அருணமணி மேவு

26 - அவனி பெறுந்தோடு

27 - அளக பாரமலைந்து

28 - அறிவழிய மயல்பெருக

29 - அனிச்சம் கார்முகம்

30 - அனைவரும் மருண்டு

31 - இயலிசையில் உசித

32 - இருகுழை யெறிந்த

33 - இருள்விரி குழலை

34 - உததியறல் மொண்டு

35 - உருக்கம் பேசிய

36 - ஏவினை நேர்விழி

37 - ஓராது ஒன்றை

38 - கட்டழகு விட்டு

39 - கண்டுமொழி

40 - கமல மாதுடன்

41 - கரிக்கொம்பம்

42 - கருப்பம் தங்கு

43 - களபம் ஒழுகிய

44 - கனங்கள் கொண்ட

45 - கன்றிலுறு மானை

46 - காலனார் வெங்கொடும்

47 - குகர மேவுமெய்

48 - குடர்நிண மென்பு

49 - குழைக்கும் சந்தன

50 - கொங்கைகள்

51 - கொங்கைப் பணை

52 - கொடியனைய இடை

53 - கொம்பனையார்

54 - கொலை மதகரி

55 - சங்குபோல் மென்

56 - சங்கை தான் ஒன்று

57 - சத்தம் மிகு ஏழு

58 - சந்தன சவ்வாது

59 - சேமக் கோமள

60 - தகரநறை

61 - தண் தேனுண்டே

62 - தண்டை அணி

63 - தந்த பசிதனை

64 - தரிக்குங்கலை

65 - துன்பங்கொண்டு அங்கம்

66 - தெருப்புறத்து

67 - தொடரியமன்

68 - தொந்தி சரிய

69 - தோலொடு மூடிய

70 - நாலும் ஐந்து வாசல்

71 - நிதிக்குப் பிங்கலன்

72 - நிலையாப் பொருளை

73 - நிறுக்குஞ் சூதன

74 - பங்கம் மேவும் பிறப்பு

75 - பஞ்ச பாதகம்

76 - படர்புவியின் மீது

77 - பதும இருசரண்

78 - பரிமள களப

79 - பருத்தந்த

80 - பாத நூபுரம்

81 - புகரப் புங்க

82 - பூரண வார கும்ப

83 - பெருக்கச் சஞ்சலித்து

84 - மங்கை சிறுவர்

85 - மஞ்செனுங் குழல்

86 - மனத்தின் பங்கு

87 - மனைகனக மைந்தர்

88 - மாய வாடை

89 - மான்போல் கண்

90 - முகிலாமெனும்

91 - முந்துதமிழ் மாலை

92 - முலை முகம்

93 - மூப்புற்றுச் செவி

94 - மூளும்வினை சேர

95 - வஞ்சங்கொண்டும்

96 - வஞ்சத்துடன் ஒரு

97 - வந்து வந்து முன்

98 - வரியார் கருங்கண்

99 - விதி போலும் உந்து

100 - விந்ததில் ஊறி

101 - விறல்மாரன் ஐந்து

102 - வெங்காளம் பாணம்

103 - வெம் சரோருகமோ

1334 - கன்றிவரு நீல

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song sequence no 62 thalam %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D thiru name %E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF