சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
78   திருச்செந்தூர் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 41 - வாரியார் # 55 )  

பரிமள களப

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனதன தனதன தந்தத் தந்தத் ...... தனதானா
     தனதன தனதன தந்தத் தந்தத் ...... தனதானா


பரிமள களபசு கந்தச் சந்தத் ...... தனமானார்
     படையம படையென அந்திக் குங்கட் ...... கடையாலே
வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற் ...... குழலாலே
     மறுகிடு மருளனை யின்புற் றன்புற் ...... றருள்வாயே
அரிதிரு மருகக டம்பத் தொங்கற் ...... றிருமார்பா
     அலைகுமு குமுவென வெம்பக் கண்டித் ...... தெறிவேலா
திரிபுர தகனரும் வந்திக் குஞ்சற் ...... குருநாதா
     ஜெயஜெய ஹரஹர செந்திற் கந்தப் ...... பெருமாளே.

பரிமள களப சுகந்த சந்தத் தனமானார்
     படை யமபடையென அந்திக்கும் கண் கடையாலே
வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற் குழலாலே
     மறுகிடு மருளனை இன்புற்று அன்புற்று அருள்வாயே
அரிதிரு மருக கடம்பத் தொங்கற் றிருமார்பா
     அலைகுமு குமுவென வெம்ப கண்டித்து எறிவேலா
திரிபுர தகனரும் வந்திக்குஞ் சற்குருநாதா
     ஜெயஜெய ஹரஹர செந்திற் கந்தப் பெருமாளே.
நறுமணம் மிக்க சந்தனக் கலவைகளின் வாசனை வீசும் அழகிய மார்பினை உடைய பெண்களின், படைகளிலேயே மிகக் கொடிய யமபடைக்கு ஒப்பாக கடைக்கண்ணால் சந்திக்கின்ற பார்வையாலும், கோடுகளை உடைய வண்டுகளின் கூட்டம் ஒலிக்கின்ற பூவாசம் மிகுந்த கரும் கூந்தலின் அழகாலும், மயங்கித் திரிகின்ற அடியேனை, இன்பத்துடனும், பிரியமாகவும் ஆட்கொண்டு அருள்வாயாக. திருமாலுக்கும் லக்ஷ்மிக்கும் மருமகனே, கடம்ப மாலையை அணிந்துள்ள திருமார்பனே, அலைகள் குமுகுமுவென கொதித்துப் பொங்குமாறு கடலினைக் கோபித்து வேலினைச் செலுத்தியவனே, முப்புரத்தை எரித்த சிவனார் கும்பிடும் உத்தம குருநாதா, வெற்றியை உடையவனே, பாவத்தை நீக்குபவனே, திருச்செந்தூரில் எழுந்தருளிய கந்தப் பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
பரிமள களப சுகந்த ... நறுமணம் மிக்க சந்தனக் கலவைகளின்
வாசனை வீசும்
சந்தத் தனமானார் ... அழகிய மார்பினை உடைய பெண்களின்,
படை யமபடையென ... படைகளிலேயே மிகக் கொடிய யமபடைக்கு
ஒப்பாக
அந்திக்கும் கண் கடையாலே ... கடைக்கண்ணால் சந்திக்கின்ற
பார்வையாலும்,
வரியளி நிரைமுரல் ... கோடுகளை உடைய வண்டுகளின் கூட்டம்
ஒலிக்கின்ற
கொங்குக் கங்குற் குழலாலே ... பூவாசம் மிகுந்த கரும் கூந்தலின்
அழகாலும்,
மறுகிடு மருளனை ... மயங்கித் திரிகின்ற அடியேனை,
இன்புற்று அன்புற்று அருள்வாயே ... இன்பத்துடனும், பிரியமாகவும்
ஆட்கொண்டு அருள்வாயாக.
அரிதிரு மருக ... திருமாலுக்கும் லக்ஷ்மிக்கும் மருமகனே,
க டம்பத் தொங்கற் றிருமார்பா ... கடம்ப மாலையை அணிந்துள்ள
திருமார்பனே,
அலைகுமு குமுவென வெம்ப ... அலைகள் குமுகுமுவென
கொதித்துப் பொங்குமாறு
கண்டித்து எறிவேலா ... கடலினைக் கோபித்து வேலினைச்
செலுத்தியவனே,
திரிபுர தகனரும் வந்திக்குஞ் சற்குருநாதா ... முப்புரத்தை எரித்த
சிவனார் கும்பிடும் உத்தம குருநாதா,
ஜெயஜெய ஹரஹர ... வெற்றியை உடையவனே, பாவத்தை
நீக்குபவனே,
செந்திற் கந்தப் பெருமாளே. ... திருச்செந்தூரில் எழுந்தருளிய
கந்தப் பெருமாளே.
Similar songs:

78 - பரிமள களப (திருச்செந்தூர்)

தனதன தனதன தந்தத் தந்தத் ...... தனதானா
     தனதன தனதன தந்தத் தந்தத் ...... தனதானா

Songs from this thalam திருச்செந்தூர்

21 - அங்கை மென்குழல்

22 - அந்தகன் வருந்தினம்

23 - அமுத உததி விடம்

24 - அம்பொத்த விழி

25 - அருணமணி மேவு

26 - அவனி பெறுந்தோடு

27 - அளக பாரமலைந்து

28 - அறிவழிய மயல்பெருக

29 - அனிச்சம் கார்முகம்

30 - அனைவரும் மருண்டு

31 - இயலிசையில் உசித

32 - இருகுழை யெறிந்த

33 - இருள்விரி குழலை

34 - உததியறல் மொண்டு

35 - உருக்கம் பேசிய

36 - ஏவினை நேர்விழி

37 - ஓராது ஒன்றை

38 - கட்டழகு விட்டு

39 - கண்டுமொழி

40 - கமல மாதுடன்

41 - கரிக்கொம்பம்

42 - கருப்பம் தங்கு

43 - களபம் ஒழுகிய

44 - கனங்கள் கொண்ட

45 - கன்றிலுறு மானை

46 - காலனார் வெங்கொடும்

47 - குகர மேவுமெய்

48 - குடர்நிண மென்பு

49 - குழைக்கும் சந்தன

50 - கொங்கைகள்

51 - கொங்கைப் பணை

52 - கொடியனைய இடை

53 - கொம்பனையார்

54 - கொலை மதகரி

55 - சங்குபோல் மென்

56 - சங்கை தான் ஒன்று

57 - சத்தம் மிகு ஏழு

58 - சந்தன சவ்வாது

59 - சேமக் கோமள

60 - தகரநறை

61 - தண் தேனுண்டே

62 - தண்டை அணி

63 - தந்த பசிதனை

64 - தரிக்குங்கலை

65 - துன்பங்கொண்டு அங்கம்

66 - தெருப்புறத்து

67 - தொடரியமன்

68 - தொந்தி சரிய

69 - தோலொடு மூடிய

70 - நாலும் ஐந்து வாசல்

71 - நிதிக்குப் பிங்கலன்

72 - நிலையாப் பொருளை

73 - நிறுக்குஞ் சூதன

74 - பங்கம் மேவும் பிறப்பு

75 - பஞ்ச பாதகம்

76 - படர்புவியின் மீது

77 - பதும இருசரண்

78 - பரிமள களப

79 - பருத்தந்த

80 - பாத நூபுரம்

81 - புகரப் புங்க

82 - பூரண வார கும்ப

83 - பெருக்கச் சஞ்சலித்து

84 - மங்கை சிறுவர்

85 - மஞ்செனுங் குழல்

86 - மனத்தின் பங்கு

87 - மனைகனக மைந்தர்

88 - மாய வாடை

89 - மான்போல் கண்

90 - முகிலாமெனும்

91 - முந்துதமிழ் மாலை

92 - முலை முகம்

93 - மூப்புற்றுச் செவி

94 - மூளும்வினை சேர

95 - வஞ்சங்கொண்டும்

96 - வஞ்சத்துடன் ஒரு

97 - வந்து வந்து முன்

98 - வரியார் கருங்கண்

99 - விதி போலும் உந்து

100 - விந்ததில் ஊறி

101 - விறல்மாரன் ஐந்து

102 - வெங்காளம் பாணம்

103 - வெம் சரோருகமோ

1334 - கன்றிவரு நீல

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song sequence no 78 thalam %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D thiru name %E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B3+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA