சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
திருமுறை pann ஏரார் இளங்கிளியே
8.119   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருத்தசாங்கம் - ஏரார் இளங்கிளியே
பண் - ஏரார் இளங்கிளியே   (கோயில் (சிதம்பரம்) )
Audio: https://sivaya.org/thiruvaasagam/19 Thiruchathagam Thiruvasagam.mp3
8.147   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருவெண்பா - வெய்ய வினையிரண்டும்
பண் - ஏரார் இளங்கிளியே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
Audio: https://sivaya.org/thiruvaasagam/47 Thiruvenba Thiruvasagam.mp3
8.148   மாணிக்க வாசகர்    திருவாசகம்   பண்டாய நான்மறை - பண்டாய நான்மறையும்
பண் - ஏரார் இளங்கிளியே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
Audio: https://sivaya.org/thiruvaasagam/48 Pandaaya Naanmara Thiruvasagam.mp3

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.119   திருத்தசாங்கம் - ஏரார் இளங்கிளியே  
பண் - ஏரார் இளங்கிளியே   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
நேரிசை வெண்பா
அடிமை கொண்ட முறைமை; இறைவனது தசாங்கங்களையும் தலைவி கிளியின் வாயால் கேட்டு மகிழும் பதிகம்; இறைவன் மாணிக்கவாசகரைத் தடுத்தாட்கொண்டு, தனக்கு அடிமையாக ஏற்றுக்கொண்ட விதத்தை இந்தப் பதிகம் விவரிக்கிறது.
ஏர் ஆர் இளம் கிளியே! எங்கள் பெருந்துறைக் கோன்
சீர் ஆர் திரு நாமம் தேர்ந்து உரையாய் ஆரூரன்,
செம் பெருமான்,' வெள் மலரான், பால் கடலான், செப்புவ போல்,
எம் பெருமான், தேவர் பிரான்,' என்று.

[1]
ஏதம் இலா இன் சொல் மரகதமே! ஏழ் பொழிற்கும்
நாதன், நமை ஆளுடையான், நாடு உரையாய் காதலர்க்கு
அன்பு ஆண்டு, மீளா அருள் புரிவான் நாடு, என்றும்,
தென் பாண்டி நாடே, தெளி.

[2]
தாது ஆடு பூஞ்சோலைத் தத்தாய்! நமை ஆளும்
மாது ஆடும் பாகத்தன் வாழ் பதி என்? கோதாட்டிப்
பத்தர் எல்லாம் பார்மேல், சிவபுரம்போல், கொண்டாடும்
உத்தரகோசமங்கை ஊர்.

[3]
செய்ய வாய்ப் பைம் சிறகின் செல்வீ! நம் சிந்தை சேர்
ஐயன், பெருந்துறையான், ஆறு உரையாய் தையலாய்!
வான் வந்த சிந்தை மலம் கழுவ வந்து, இழியும்
ஆனந்தம் காண், உடையான் ஆறு.

[4]
கிஞ்சுக வாய் அம் சுகமே! கேடு இல் பெருந்துறைக் கோன்
மஞ்சு மருவு மலை பகராய் நெஞ்சத்து
இருள் அகல வாள் வீசி, இன்பு அமரும் முத்தி
அருளும் மலை என்பது காண், ஆய்ந்து.

[5]
இப் பாடே வந்து, இயம்பு; கூடு புகல் என்? கிளியே!
ஒப்பு ஆடாச் சீர் உடையான் ஊர்வது என்னே? எப்போதும்
தேன் புரையும் சிந்தையர் ஆய், தெய்வப் பெண் ஏத்து இசைப்ப,
வான் புரவி ஊரும், மகிழ்ந்து.

[6]
கோல் தேன் மொழிக் கிள்ளாய்! கோது இல் பெருந்துறைக் கோன்,
மாற்றாரை வெல்லும் படை பகராய் ஏற்றார்
அழுக்கு அடையா நெஞ்சு உருக, மும் மலங்கள் பாயும்
கழுக்கடை காண், கைக்கொள் படை.

[7]
இன் பால் மொழிக் கிள்ளாய்! எங்கள் பெருந்துறைக் கோன்
முன்பால் முழங்கும் முரசு இயம்பாய் அன்பால்,
பிறவிப் பகை கலங்க, பேரின்பத்து ஓங்கும்,
பரு மிக்க நாதப் பறை.

[8]
ஆய மொழிக் கிள்ளாய்! அள்ளூறும் அன்பர்பால்
மேய பெருந்துறையான் மெய்த் தார் என்? தீய வினை
நாளும் அணுகாவண்ணம் நாயேனை ஆளுடையான்,
தாளி அறுகு ஆம், உவந்த தார்.

[9]
சோலைப் பசும் கிளியே! தூ நீர்ப் பெருந்துறைக் கோன்
கோலம் பொலியும் கொடி கூறாய் சாலவும்
ஏதிலார் துண் என்ன, மேல் விளங்கி, ஏர் காட்டும்
கோது இலா ஏறு ஆம், கொடி.

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.147   திருவெண்பா - வெய்ய வினையிரண்டும்  
பண் - ஏரார் இளங்கிளியே   (திருத்தலம் திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
நேரிசை வெண்பா
அணைந்தோர் தன்மை; சிவனை முழுமையாகச் சரணடைந்து, சீவன் முக்தர்களாக விளங்கும் அடியவர்களின் இயல்பு, மெய்யுருகிப் பொய்யும் பொடியாகி, வினை நீங்கிச் சிவத்தை எய்தும் பதிகம்.
வெய்ய வினை இரண்டும் வெந்து அகல, மெய் உருகி,
பொய்யும் பொடி ஆகாது; என் செய்கேன்? செய்ய
திரு ஆர் பெருந்துறையான் தேன் உந்து செம் தீ
மருவாது இருந்தேன் மனத்து.

[1]
ஆர்க்கோ? அரற்றுகோ? ஆடுகோ? பாடுகோ?
பார்க்கோ? பரம்பரனே, என் செய்கேன்? தீர்ப்பு அரிய
ஆனந்த மால் ஏற்றும் அத்தன், பெருந்துறையான்
தான்' என்பார் ஆர் ஒருவர் தாழ்ந்து?

[2]
செய்த பிழை அறியேன்; சேவடியே, கை தொழுதே,
உய்யும் வகையின் உயிர்ப்பு அறியேன் வையத்து
இருந்து, உறையுள் வேல் மடுத்து, என் சிந்தனைக்கே கோத்தான்
பெருந்துறையில் மேய பிரான்.

[3]
முன்னை வினை இரண்டும் வேர் அறுத்து, முன் நின்றான்
பின்னைப் பிறப்பு அறுக்கும் பேராளன்; தென்னன்;
பெருந்துறையில் மேய பெரும் கருணையாளன்;
வரும் துயரம் தீர்க்கும் மருந்து.

[4]
அறையோ, அறிவார்க்கு? அனைத்து உலகும் ஈன்ற
மறையோனும், மாலும், மால் கொள்ளும் இறையோன்;
பெருந்துறையுள் மேய பெருமான்; பிரியாது
இருந்து உறையும், என் நெஞ்சத்து இன்று.

[5]
பித்து என்னை ஏற்றும்; பிறப்பு அறுக்கும்; பேச்சு அரிது ஆம்;
மத்தமே ஆக்கும், வந்து, என் மனத்தை; அத்தன்,
பெருந்துறையான், ஆட்கொண்டு பேர் அருளால் நோக்கும்
மருந்து, இறவாப் பேரின்பம், வந்து.

[6]
வாரா வழி அருளி வந்து, எனக்கு மாறு இன்றி,
ஆரா அமுதாய் அமைந்தன்றே சீர் ஆர்
திருத்தன், பெருந்துறையான், என் சிந்தை மேய
ஒருத்தன், பெருக்கும் ஒளி.

[7]
யாவர்க்கும் மேல் ஆம் அளவு இலாச் சீர் உடையான்,
யாவர்க்கும் கீழ் ஆம் அடியேனை, யாவரும்
பெற்று அறியா இன்பத்துள் வைத்தாய்க்கு, என் எம்பெருமான்!
மற்று அறியேன் செய்யும் வகை.

[8]
மூவரும், முப்பத்து மூவரும், மற்று ஒழிந்த
தேவரும், காணாச் சிவபெருமான் மா ஏறி,
வையகத்தே வந்திழிந்த வார் கழல்கள் வந்திக்க,
மெய்யகத்தே இன்பம் மிகும்.

[9]
இருந்து என்னை ஆண்டான் இணை அடியே சிந்தித்து
இருந்து, இரந்துகொள், நெஞ்சே! எல்லாம் தரும் காண்
பெருந்துறையில் மேய பெரும் கருணையாளன்,
மருந்து உருவாய், என் மனத்தே, வந்து.

[10]
இன்பம் பெருக்கி, இருள் அகற்றி, எஞ்ஞான்றும்
துன்பம் தொடர்வு அறுத்து, சோதி ஆய், அன்பு அமைத்து,
சீர் ஆர் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே
ஊர் ஆகக் கொண்டான், உவந்து.

[11]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.148   பண்டாய நான்மறை - பண்டாய நான்மறையும்  
பண் - ஏரார் இளங்கிளியே   (திருத்தலம் திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
நேரிசை வெண்பா
அனுபவத்துக்கு ஐயமின்மை உரைத்தல்; சிவானுபவத்தை ஐயமற உணர்ந்த நிலையைத் தெரிவிக்கும் பகுதி. இறைவன் தன் உள்ளத்தில் நிலைபெற்றுள்ளதையும், சிவானுபவத்தையும், அனுபவ அறிவையும் உறுதிபடக் கூறும் பதிகம்.
பண்டு ஆய நான்மறையும் பால் அணுகா; மால், அயனும்,
கண்டாரும் இல்லை; கடையேனைத் தொண்டு ஆகக்
கொண்டருளும் கோகழி எம் கோமாற்கு, நெஞ்சமே!
உண்டாமோ கைம்மாறு? உரை.

[1]
உள்ள மலம் மூன்றும் மாய, உகு பெரும் தேன்
வெள்ளம் தரும், பரியின் மேல் வந்த, வள்ளல்
மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள்; வாழ்த்த,
கருவும் கெடும், பிறவிக் காடு.

[2]
காட்டகத்து வேடன்; கடலில் வலை வாணன்;
நாட்டில் பரிப் பாகன்; நம் வினையை வீட்டி,
அருளும் பெருந்துறையான்; அம் கமல பாதம்,
மருளும் கெட, நெஞ்சே! வாழ்த்து.

[3]
வாழ்ந்தார்கள் ஆவாரும், வல் வினையை மாய்ப்பாரும்,
தாழ்ந்து உலகம் ஏத்தத் தகுவாரும் சூழ்ந்து அமரர்
சென்று, இறைஞ்சி, ஏத்தும் திரு ஆர் பெருந்துறையை
நன்று இறைஞ்சி, ஏத்தும் நமர்.

[4]
நண்ணிப் பெருந்துறையை, நம் இடர்கள் போய் அகல,
எண்ணி எழு கோகழிக்கு அரசை, பண்ணின்
மொழியாளோடு உத்தரகோசமங்கை மன்னிக்
கழியாது இருந்தவனை, காண்.

[5]
காணும் கரணங்கள் எல்லாம் பேரின்பம் என,
பேணும் அடியார் பிறப்பு அகல, காணும்
பெரியானை, நெஞ்சே! பெருந்துறையில் என்றும்
பிரியானை, வாய் ஆரப் பேசு.

[6]
பேசும் பொருளுக்கு இலக்கிதம் ஆய், பேச்சு இறந்த
மாசு இல் மணியின் மணி வார்த்தை பேசி,
பெருந்துறையே என்று, பிறப்பு அறுத்தேன் நல்ல
மருந்தின் அடி என் மனத்தே வைத்து.

[7]
Back to Top
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000