![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
3.033
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நீர் இடைத் துயின்றவன், தம்பி, பண் - கொல்லி (திருவுசாத்தானம் (கோவிலூர்) மந்திரபுரீசுவரர் பெரியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=nUrPk4HHz-Y |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.033  
நீர் இடைத் துயின்றவன், தம்பி,
பண் - கொல்லி (திருத்தலம் திருவுசாத்தானம் (கோவிலூர்) ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு மந்திரபுரீசுவரர் திருவடிகள் போற்றி )
நீர்இடைத் துயின்றவன், தம்பி,நீள் சாம்புவான், போர்உடைச் சுக்கிரீவன்,அனு மான்தொழ; கார்உடை நஞ்சுஉண்டு, காத்து;அருள் செய்தஎம் சீர்உடைச் சேடர்வாழ் திருஉசாத் தானமே. | [1] |
கொல்லைஏறு உடையவன், கோவண ஆடையன், பல்லைஆர் படுதலைப் பலிகொளும் பரமனார் முல்லைஆர் புறவுஅணி முதுபதி நறைகமழ் தில்லையான் உறைவுஇடம் திருஉசாத் தானமே. | [2] |
தாம்அலார் போலவே தக்கனார் வேள்வியை ஊமனார் தம்கனா ஆக்கினான், ஒருநொடி; காமனார் உடல்கெடக் காய்ந்தஎம் கண்ணுதல்; சேமமா உறைவுஇடம் திருஉசாத் தானமே. | [3] |
மறிதரு கரத்தினான், மால்விடை ஏறியான், குறிதரு கோலநல் குணத்தினார் அடிதொழ, நெறிதரு வேதியர் நித்தலும் நியமம்செய் செறிதரு பொழில்அணி திருஉசாத் தானமே. | [4] |
பண்டு,இரைத்து அயனும்மா லும்,பல பத்தர்கள் தொண்டுஇரைத் தும்,மலர் தூவித்தோத் திரம்சொல, கொண்டுஇரைக் கொடியொடும் குருகினின் நல்இனம் தெண்திரைக் கழனிசூழ் திருஉசாத் தானமே. | [7] |
மடவரல் பங்கினன்; மலைதனை மதியாது சடசட எடுத்தவன் தலைபத்தும் நெரிதர, அடர்தர ஊன்றி,அங் கேஅவற்கு அருள்செய்தான்; திடம்என உறைவுஇடம் திருஉசாத் தானமே. | [8] |
ஆண்அலார், பெண்அலார், அயனொடு மாலுக்கும் காணஒணா வண்ணத்தான், கருதுவார் மனத்துஉளான், பேணுவார் பிணியொடும் பிறப்புஅறுப் பான்இடம் சேண்உலாம் மாளிகைத் திருஉசாத் தானமே. | [9] |
கானம்ஆர் வாழ்க்கையான், கார்அமண் தேரர்சொல் ஊனமாக் கொண்டு,நீர் உரைமின்உய் யஎனில் வானம்ஆர் மதில்,அணி மாளிகை, வளர்பொழில், தேனமா மதியம்தோய் திருஉசாத் தானமே! | [10] |
வரைதிரிந்து இழியும்நீர் வளவயல் புகலிமன், திரைதிரிந்து எறிகடல்- திருஉசாத் தானரை உரைதெரிந்து உணரும்சம் பந்தன்,ஒண் தமிழ்வல்லார் நரைதிரை இன்றியே நன்நெறி சேர்வரே. | [11] |