சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
9.012   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா   கருவூர்த் தேவர் - திரைலோக்கிய சுந்தரம்
பண் -   (பொது -திரைலோக்கிய சுந்தரம் )
Audio: https://www.youtube.com/watch?v=HOLFzgY4IKs
Audio: https://www.youtube.com/watch?v=Iqo6harvYXs
Audio: https://www.youtube.com/watch?v=dLve31rr8K4

Back to Top
கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
9.012   கருவூர்த் தேவர் - திரைலோக்கிய சுந்தரம்  
பண் -   (திருத்தலம் பொது -திரைலோக்கிய சுந்தரம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
நீரோங்கி வளர்கமல
    நீர்பொருந்தாந் தன்மையன்றே
ஆரோங்கி முகமலர்ந்தாங்(கு)
    அருவினையேன் திறம்மறந்தின்(று)
ஊரோங்கும் பழிபாரா(து)
    உன்பாலே விழுந்தொழிந்தேன்
சீரோங்கும் பொழிற்கோடைத்
    திரைலோக்கிய சுந்தரனே ! 
[1]
நையாத மனத்தினனை
    நைவிப்பான் இத்தெருவே
ஐயா !நீ உலாப்போந்த
    அன்றுமுதல் இன்றுவரை
கையாரத் தொழுதுஅருவி
    கண்ணாரச் சொரிந்தாலும்
செய்யாயோ அருள்கோடைத்
    திரைலோக்கிய சுந்தரனே ! 
[2]
அம்பளிங்கு பகலோன்பால்
    அடைப்பற்றாய் இவள்மனத்தில்
முன்பளிந்த காதலும்நின்
    முகத்தோன்ற விளங்கிற்றால்
வம்பளிந்த கனியே !
    என் மருந்தே ! நல் வளர்முக்கண்
செம்பளிங்கே ! பொழிற்கோடைத்
    திரைலோக்கிய சுந்தரனே ! 
[3]
மைஞ்ஞின்ற குழலாள்தன்
    மனந்தரவும் வளைதாராது
இஞ்ஞின்ற கோவணவன்
    இவன்செய்தது யார்செய்தார்
மெய்ஞ்ஞின்ற தமர்க்கெல்லாம்
    மெய்ஞ்ஞிற்கும் பண்பினுறு
செய்ஞ்ஞன்றி யிலன்கோடைத்
    திரைலோக்கிய சுந்தரனே.
[4]
நீவாரா(து) ஒழிந்தாலும்
    நின்பாலே விழுந்தேழை
கோவாத மணிமுத்தும்
    குவளைமலர் சொரிந்தனவால்;
ஆவா !என்று அருள் புரியாய்
    அமரர்கணம் தொழுதேத்தும்
தேவா !தென் பொழிற்கோடைத்
    திரைலோக்கிய சுந்தரனே.
[5]
முழுவதும்நீ ஆயினும் இம்
    மொய்குழலாள் மெய்ம்முழுதும்
பழுதெனவே நினைந்தோராள்
    பயில்வதும்நின் ஒரு நாமம்
அழுவதும்நின் திறம்நினைந்தே
    அதுவன்றோ பெறும்பேறு
செழுமதில்சூழ் பொழிற்கோடைத்
    திரைலோக்கிய சுந்தரனே.
[6]
தன்சோதி எழுமேனித்
    தபனியப்பூஞ் சாய்க்காட்டாய்
உன்சோதி எழில்காண்பான்
    ஒலிடவும் உருக்காட்டாய்
துஞ்சாகண் இவளுடைய
    துயர்தீரு மாறுரையாய்
செஞ்சாலி வயற்கோடைத்
    திரைலோக்கிய சுந்தரனே.
[7]
அரும்பேதைக்(கு) அருள்புரியா(து)
    ஒழிந்தாய்நின் அவிர்சடைமேல்
நிரம்பாத பிறைதூவும்
    நெருப்பொடுநின் கையிலியாழ்
நரம்பாலும் உயிர்ஈர்ந்தாய்
    நளிர்புரிசைக் குளிர்வனம்பா
திரம்போது சொரிகோடைத்
    திரைலோக்கிய சுந்தரனே.
[8]
ஆறாத பேரன்பின்
    அவருள்ளம் குடிகொண்டு
வேறாகப் பலர்சூழ
    வீற்றிருத்தி அதுகொண்டு
வீறாடி இவள்உன்னைப்
    பொதுநீப்பான் விரைந்தின்னம்
தேறாள்தென் பொழிற்கோடைத்
    திரைலோக்கிய சுந்தரனே.
[9]
சரிந்ததுகில் தளர்ந்தஇடை
    அவிழ்ந்தகுழல் இளந்தெரிவை
இருந்தபரி(சு) ஒருநாள்கண்(டு)
    இரங்காய்எம் பெருமானே !
முரிந்தநடை மடந்தையர் தம்
    முழங்கொலியும் வழங்கொலியும்
திருந்துவிழ(வு) அணிகோடைத்
    திரைலோக்கிய சுந்தரனே.
[10]
ஆரணத்தேன் பருகிஅருந்
    தமிழ்மாலை கமழவரும்
காரணத்தின் நிலைபெற்ற
    கருவூரன் தமிழ்மாலை
பூரணத்தால் ஈரைந்தும்
    போற்றிசைப்பார் காந்தாரம்
சீரணைத்த பொழிற்கோடைத்
    திரைலோக்கிய சுந்தரனே.
[11]
Back to Top

This page was last modified on Sun, 09 Mar 2025 21:46:14 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list column name thalam string value %E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D