சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

3.037   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருப்பிரமபுரம் (சீர்காழி) - கொல்லி கனகாங்கி நவரோசு கனகாம்பரி ராகத்தில் திருமுறை அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி
https://www.youtube.com/watch?v=tqhqYRo6zLU   Add audio link Add Audio
கரம் முனம் மலரால், புனல் மலர் தூவியே கலந்து ஏத்துமின்-
பரமன் ஊர் பலபேரினால் பொலி, பத்தர் சித்தர்கள் தாம் பயில்,
வரம் முன்ன(வ்) அருள் செய்ய வல்ல எம் ஐயன் நாள்தொறும் மேய சீர்ப்
பிரமன் ஊர், பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன்(ன்) அருள் பேணியே!


1


விண்ணில் ஆர் மதி சூடினான், விரும்பும் மறையவன் தன் தலை
உண்ண நன் பலி பேணினான், உலகத்துள் ஊன் உயிரான், மலைப்-
பெண்ணின் ஆர் திருமேனியான்-பிரமாபுரத்து உறை கோயிலு
அண்ணல் ஆர் அருளாளனாய் அமர்கின்ற எம் உடை ஆதியே.


2


எல்லை இல் புகழாளனும்(ம்), இமையோர் கணத்து உடன் கூடியும்,
பல்லை ஆர் தலையில் பலி அது கொண்டு உகந்த படிறனும்
தொல்லை வையகத்து ஏறு தொண்டர்கள் தூ மலர் சொரிந்து ஏத்தவே,
மல்லை அம் பொழில் தேன் பில்கும் பிரமாபுரத்து உறை மைந்தனே.


3


அடையலார் புரம் சீறி அந்தணர் ஏத்த, மா மடமாதொடும்,
பெடை எலாம் கடல் கானல் புல்கும் பிரமாபுரத்து உறை கோயிலான்;
தொடையல் ஆர் நறுங்கொன்றையான் தொழிலே பரவி நின்று ஏத்தினால்,
இடை இலார், சிவலோகம் எய்துதற்கு; ஈது காரணம் காண்மினே!


4


வாய் இடை(ம்) மறை ஓதி, மங்கையர் வந்து இடப் பலி கொண்டு, போய்ப்-
போய் இடம்(ம்) எரிகான் இடைப் புரி நாடகம்(ம்) இனிது ஆடினான்;
பேயொடும் குடிவாழ்வினான்-பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன்;
தாய், இடைப் பொருள், தந்தை, ஆகும் என்று ஓதுவார்க்கு அருள்-தன்மையே!


5


Go to top
ஊடினால் இனி யாவது? என் உயர் நெஞ்சமே!-உறு வல்வினைக்கு
ஓடி நீ உழல்கின்றது என்? அழல் அன்று தன் கையில் ஏந்தினான்,
பீடு நேர்ந்தது கொள்கையான்-பிரமாபுரத்து உறை வேதியன்,
ஏடு நேர் மதியோடு அரா அணி எந்தை என்று நின்று ஏத்திடே!


6


செய்யன், வெள்ளியன், ஒள்ளியார்சிலர் என்றும் ஏத்தி நினைந்திட,
ஐயன், ஆண்டகை, அந்தணன், அருமா மறைப்பொருள் ஆயினான்;
பெய்யும் மா மழை ஆனவன்; பிரமாபுரம் இடம் பேணிய
வெய்ய வெண்மழு ஏந்தியை(ந்) நினைந்து, ஏத்துமின், வினை வீடவே!


7


கன்று ஒரு(க்) கையில் ஏந்தி நல்விளவின் கனி பட நூறியும்,
சென்று ஒருக்கிய மாமறைப்பொருள் தேர்ந்த செம்மலரோனும் ஆய்,
அன்று அரக்கனைச் செற்றவன்(ன்) அடியும் முடி அவை காண்கிலார்
பின் தருக்கிய தண்பொழில் பிரமாபுரத்து அரன் பெற்றியே!


8


உண்டு உடுக்கை விட்டார்களும்(ம்), உயர் கஞ்சி மண்டை கொள் தேரரும்,
பண்டு அடக்கு சொல் பேசும் அப் பரிவு ஒன்று இலார்கள் சொல் கொள்ளன்மின்!
தண்டொடு, அக்கு, வன் சூலமும், தழல், மா மழுப்படை, தன் கையில்
கொண்டு ஒடுக்கிய மைந்தன்-எம் பிரமாபுரத்து உறை கூத்தனே.


9


பித்தனை, பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன், கழல் பேணியே,
மெய்த்தவத்து நின்றோர்களுக்கு உரைசெய்து, நன்பொருள் மேவிட
வைத்த சிந்தையுள் ஞானசம்பந்தன் வாய் நவின்று எழு மாலைகள்,
பொய்த் தவம் பொறி நீங்க, இன் இசை போற்றி செய்யும்,
மெய்ம் மாந்தரே!


10


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பிரமபுரம் (சீர்காழி)
1.001   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தோடு உடைய செவியன், விடை
Tune - நட்டபாடை   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி )
1.063   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   எரி ஆர் மழு ஒன்று
Tune - தக்கேசி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.090   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அரனை உள்குவீர்! பிரமன் ஊருள்
Tune - குறிஞ்சி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.117   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   காடு அது, அணிகலம் கார்
Tune - வியாழக்குறிஞ்சி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.127   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம
Tune - வியாழக்குறிஞ்சி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.128   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஓர் உரு ஆயினை; மான்
Tune - வியாழக்குறிஞ்சி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) )
2.040   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும்,
Tune - சீகாமரம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.065   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கறை அணி வேல் இலர்போலும்;
Tune - காந்தாரம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.073   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விளங்கிய சீர்ப் பிரமன் ஊர்,
Tune - காந்தாரம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.074   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன்
Tune - காந்தாரம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.037   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கரம் முனம் மலரால், புனல்
Tune - கொல்லி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.056   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   இறையவன், ஈசன், எந்தை, இமையோர்
Tune - பஞ்சமம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.067   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சுரர் உலகு, நரர்கள் பயில்
Tune - சாதாரி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.110   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வரம் அதே கொளா, உரம்
Tune - பழம்பஞ்சுரம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.113   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   உற்று உமை சேர்வது மெய்யினையே;
Tune - பழம்பஞ்சுரம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.117   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   யாமாமா நீ யாமாமா யாழீகாமா
Tune - கௌசிகம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song author %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D paadal name %E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%2C+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D pathigam no 3.037