சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

5.019   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருக்கடம்பூர் - திருக்குறுந்தொகை அருள்தரு சோதிமின்னம்மை உடனுறை அருள்மிகு அமுதகடேசுவரர் திருவடிகள் போற்றி
https://www.youtube.com/watch?v=apt_My0HYZY   Add audio link Add Audio
தளரும் கோள் அரவத்தொடு தண்மதி
வளரும் கோல வளர்சடையார்க்கு இடம்-
கிளரும் பேர் இசைக் கின்னரம் பாட்டு அறாக்
களரும் கார்க் கடம்பூர்க் கரக்கோயிலே.


1


வெல வலான், புலன் ஐந்தொடு; வேதமும்
சொல வலான்; சுழலும் தடுமாற்றமும்
அல வலான்; மனை ஆர்ந்த மென்தோளியைக்
கல வலான்; கடம்பூர்க் கரக்கோயிலே.


2


பொய் தொழாது, புலி உரியோன் பணி
செய்து எழா எழுவார் பணி செய்து எழா,
வைது எழாது எழுவார் அவர் எள்க, நீர்
கைதொழா எழுமின், கரக்கோயிலே!


3


துண்ணெனா, மனத்தால்-தொழு, நெஞ்சமே!
பண்ணினால் முனம் பாடல் அது செய்தே;
எண் இலார் எயில் மூன்றும் எரித்த முக்-
கண்ணினான் கடம்பூர்க் கரக்கோயிலே!


4


சுனையுள் நீலமலர் அன கண்டத்தன்,
புனையும் பொன்நிறக் கொன்றை புரிசடைக்
கனையும் பைங்கழலான், கரக்கோயிலை
நினையும் உள்ளத்தவர் வினை நீங்குமே.


5


Go to top
குணங்கள் சொல்லியும் குற்றங்கள் பேசியும்
வணங்கி வாழ்த்துவர், அன்பு உடையார் எலாம்-
வணங்கி வான் மலர் கொண்டு அடி வைகலும்
கணங்கள் போற்று இசைக்கும் கரக்கோயிலே.


6


பண்ணின் ஆர் மறை பல்பலபூசனை
மண்ணினார் செய்வது அன்றியும், வைகலும்
விண்ணினார்கள் வியக்கப்படுமவன்
கண்ணின் ஆர் கடம்பூர்க் கரக்கோயிலே.


7


அங்கை ஆர் அழல் ஏந்தி நின்று ஆடலன்,
மங்கை பாட மகிழ்ந்து உடன் வார்சடைக்
கங்கையான், உறையும் கரக்கோயிலைத்
தம் கையால்-தொழுவார் வினை சாயுமே.


8


நன் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்,
தென் கடம்பைத் திருக்கரக்கோயிலான்
தன் கடன்(ன்) அடியேனையும் தாங்குதல்;
என் கடன் பணி செய்து கிடப்பதே.


9


பணம் கொள் பாற்கடல் பாம்பு அணையானொடும்,
மணம் கமழ் மலர்த்தாமரையான் அவன்,
பிணங்கும் பேர் அழல் எம்பெருமாற்கு இடம்-
கணங்கள் போற்று இசைக்கும் கரக்கோயிலே.


10


Go to top
வரைக்கண் நால்-அஞ்சுதோள் உடையான் தலை
அரைக்க ஊன்றி அருள் செய்த ஈசனார்,
திரைக்கும் தண் புனல் சூழ், கரக்கோயிலை
உரைக்கும் உள்ளத்தவர் வினை ஓயுமே.


11



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கடம்பூர்
2.068   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வான் அமர் திங்களும் நீரும்
Tune - காந்தாரம்   (திருக்கடம்பூர் அமுதகடேசுவரர் சோதிமின்னம்மை)
5.019   திருநாவுக்கரசர்   தேவாரம்   தளரும் கோள் அரவத்தொடு தண்மதி
Tune - திருக்குறுந்தொகை   (திருக்கடம்பூர் அமுதகடேசுவரர் சோதிமின்னம்மை)
5.020   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஒருவராய் இரு மூவரும் ஆயவன்,
Tune - திருக்குறுந்தொகை   (திருக்கடம்பூர் அமுதகடேசுவரர் சோதிமின்னம்மை)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song author %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D paadal name %E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF pathigam no 5.019