நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப் பாங்கான பாசம் படரா படரினும் ஆங்கார நீங்கி அதனிலை நிற்கவே நீங்கா அமுதம் நிலைபெற லாமே.
|
1
|
ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நீங்கிடும் ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும் ஞேயத்தின் ஞேயத்தை யுற்றவர் ஆயத்தில் நின்ற அறிவறி யாரே.
|
2
|
தானென் றவனென் றிரண்டாகும் தத்துவம் தானென் றவனென் றிரண்டும் தனிற்கண்டு தானென்ற பூவை அவனடிச் சாத்தினால் நானென் றவனென்கை நல்லதொன் றன்றே.
|
3
|
வைச்சன ஆறாறும் மாற்றி எனைவைத்து மெச்சப் பரன்றன் வியாத்துவம் மேலிட்டு நிச்சய மாக்கிச் சிவமாக்கி ஞேயத்தால் அச்சங் கெடுத்தென்னை ஆண்டனன் நந்தியே.
|
4
|
முன்னை யறிவறி யாதஅம் மூடர்போல் பின்னை யறிவறி யாமையைப் பேதித்தான் தன்னை யறியப் பரனாக்கித் தற்சிவத் தென்னை யறிவித் திருந்தனன் நந்தியே.
|
5
|
Go to top |
காணாத கண்ணுடன் கேளாத கேள்வியும் கோணாத போகமும் கூடாத கூட்டமும் நாணாத நாணமும் நாதாந்த போதமும் காணா யெனவந்து காட்டினன் நந்தியே.
|
6
|
மோனங்கை வந்தோர்க்கு முத்தியும் கைகூடும் மோனங்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும் மோனங்கை வந்தூமை யாம்மொழி முற்றுங்காண் மோனங்கை வந்தைங் கருமமும் முன்னுமே.
|
7
|
முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றன்பால் வைத்த கலைகாலை நான்மடங் கான்மாற்றி உய்த்தவத் தானந்தத் தொண்குரு பாதத்தே பெத்த மறுத்தோர் பிறந்திற வாரே.
|
8
|
மேலைச் சொரூபங்கள் மூன்றும் மிகுசத்தி பாலித்த முத்திரை பற்றும் பரஞானம் ஆலித்த நட்டமே ஞேயம் புகுந்தற்ற மூலச் சொரூபன் மொழிஞா துருவனே. 4,
|
9
|