வாசியும் மூசியும் பேசி வகையினால் பேசி யிருந்து பிதற்றிப் பயனில்லை ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின் ஈசன் இருந்த இடம்எளி தாகுமே.
|
1
|
மாடத் துளான் அலன் மண்டபத் தான்அலன் கூடத் துளான்அலன் கோயிலுள் ளான் அலன் வேடத் துளான்அல்லன் வேட்கைவிட் டார்நெஞ்சில் மூடத்து ளேநின்று முத்திதந் தானே.
|
2
|
ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள் ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.
|
3
|
அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே படுவழி செய்கின்ற பற்றற வீசி விடுவது வேட்கையை மெய்ந்நின்ற ஞானம் தொடுவது தம்மைத் தொடர்தலும் ஆமே.
|
4
|
உவாக்கடல் ஒக்கின்ற ஊழியும் போன(து) உவாக்கட லுட்படுத் துஞ்சினர் வானோர் அவாக்கட லுட்பட்(டு) அழுந்தினர் மண்ணோர் தவாக்கடல் ஈசன் தரித்துநின் றானே.
|
5
|
Go to top |
நின்ற வினையும் பிணியும் நெடுஞ்செயல் துன்றுந் தொழில்அற்றுச் சுத்தம் தாகலும் பின்றைங் கருமமும் பேர்த்தருள் நேர்பெற்றுத் துன்றி அழுந்தலும் ஞானிகள் தூய்மையே.
|
6
|
உண்மை உணர்ந்துற ஒண்சித்தி முத்தி ஆம் பெண்மயல் கெட்டறப் பேறட்ட சித்தியாம் திண்மையின் ஞானி சிவகாயம் கைவிட்டால் அண்மை அருள்தான் அடைந்தன்பின் ஆறுமே.
|
7
|
அவன் இவன் ஈசன் என்(று) அன்புற நாடிச் `சிவன் இவன் ஈசன் என்(று) உண்மையைஓரார் பவனிவன் பல்வகை யாம்இப் பிறவிப் புவன் இவன் போவது பொய்கண்ட போதே.
|
8
|
கொதிக்கின்ற வாறும் குளிர்கின்ற வாறும் பதிக்கின்ற வாறிந்தப் பாரகம் முற்றும் விதிக்கின்ற ஐவரை வேண்டா துலகம் நொதிக்கின்ற காயத்துள் நூல்ஒன்றல் ஆமே. 41,
|
9
|