வளர்பிறை யில்தேவர் தம்பாலின் மன்னி உளரொளிப் பானுவி னுள்ளே யொடுங்கித் தளர்வில் பிதிர்பதம் தங்கிச் சசியுள் உளதுறும் யோகி உடல் விட்டால் தானே.
|
1
|
தானிவை யொக்கும் சமாதிகை கூடாது போனவி யோகி புகலிடம் போந்துபின் ஆனவை தீர நிரந்தர மாயோகம் ஆனவை சேர்வர் அருளின்சார் வாகியே.
|
2
|
தானிவ் வகையே புவியோர் நெறிதங்கி ஆன சிவயோகத்தாம் ஆறாம் அவ்விந்து தானதில் அந்தச் சிவயோகி யாகுமுன் ஊனத்தோர் சித்திவந் தோர்காய மாகுமே.
|
3
|
சிவயோகி ஞானி சிதைந்துடல் விட்டால் தவலோகம் சார்ந்து பின்தான்வந்து கூடிச் சிவயோக ஞானத்தால் சேர்ந்தவர் நிற்பன் புவலோகம் போற்றுநர் புண்ணியத் தோரே.
|
4
|
ஊனமில் ஞானிநல் யோகி உடல்விட்டால் தானற மோனச் சமாதியுள் தங்கியே தானவ னாகும் பரகாயஞ் சாராதே ஊனமில் முத்தனாய் `மீளான் உணர்வுற்றே.
|
5
|
Go to top |
செத்தார் பெறும்பய னாவதி யாதெனில் செத்துநீர் சேர்வது சித்தினைக் கூடிடில் செத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம் செத்தார் சிவமாய திண்சித்தர் தாமே.
|
6
|
உன்னக்கருவிட் டுரவோன் அரன்அருள் பன்னப் பரனே அருட்குலம் பாலிப்பன் என்னப் புதல்வர்க்கும் வேண்டியிடும் ஞானி தன்னிச்சைக் கீசன் உருச்செய்யுந் தானே.
|
7
|
எங்கும் சிவமாய் அருளாம் இதயத்துத் தங்கும் சிவஞானிக்(கு) எங்குமாம் தற்பரம் அங்கங் கெனநின் றகமுண்ட வான்தோய்தல் இங்கே யிறந்தெங்கு மாய்நிற்கும் ஈசனே. 19,
|
8
|