பரம குரவன் பரம்எங்கும் ஆகி திரம்உற எங்கணும் சேர்ந்தொழி வற்று நிரவு சொரூபத்துள் நீடும் சொரூபம் அரிய துரியத் தணைந்துநின் றானே.
|
1
|
குலைக்கின்ற நீரிற் குவலயம் நீரும் அலைக்கின்ற காற்றும் அனலொடா காசம் நிலத்திடை வானிடை நீண்டகன் றானை வரைத்து வலஞ்செயு மாறறி யேனே.
|
2
|
அங்குநின் றான்அயன் மால்முதல் தேவர்கள் எங்குநின் றாரும் இறைவனென் றேத்துவர் தங்கிநின் றான்தனி நாயகன் எம்மிறை பொங்கிநின் றான்புவ னாபதி தானே.
|
3
|
சமையச் சுவடும் தனைஅறி யாமல் கமையற்ற காமாதி காரணம் எட்டும் திமிரச் செயலும் தெளியுடன் நின்றோர் அமரர்க் கதிபதி யாகிநிற் பாரே.
|
4
|
மூவகைத் தெய்வத் தொருவன் முதல்உரு ஆயது வேறாம் அதுபோல் அணுப்பரன் சேய சிவமுத் துரியத்துச் சீர்பெற ஏயும் நெறியென் றிறைநூல் இயம்புமே.
|
5
|
Go to top |
உருவன்றி யேநின் றுருவம் புணர்க்கும் கருவன்றி யேநின்று தான்கரு வாகும் மருவன்றி யேநின்ற மாயப் பிரானைக் குருவன்றி யாவர்க்கும் கூடஒண் ணாதே.
|
6
|
உருவம் நினைப்பவர்க்(கு) உள்ளுறும் சோதி உருவம் நினைப்பவர் ஊழியும் காண்பர் உருவம் நினைப்பவர் உம்பரும் ஆவர் உருவம் நினைப்பார் உலகத்தில் யாரே.
|
7
|
பரஞ்சோதி யாகும் பதியினைப் பற்றப் பரஞ்சோதி என்னுட் படிந்ததன் பின்னைப் பரஞ்சோதி யுள்நான் படியப் படியப் பரஞ்சோதி தன்னைப் பறையக்கண் டேனே.
|
8
|
சொரூபம் உருவம் குணம்தொல் விழுங்கி அரியன உற்பலம் ஆமாறு போல மருவிய சத்தியாதி நான்கும் மதித்த சொரூபக் குரவன் சுகோயத் தானே.
|
9
|
உரையற்ற ஆனந்த மோனசொரூ பத்தன் கரையற்ற சத்திஆதி காணில் அகாரம் மருவுற் றுகாரம் மகாரம தாகி உரையற்ற தாரத்தில் உள்ளொளி யாமே.
|
10
|
Go to top |
ஆமா றறிந்தேன் அகத்தின் அரும்பொருள் போமா றறிந்தேன் புகுமாறும் ஈதென்றே ஏமாப்ப தில்லை இனிஓர் இடமில்லை நாமாம் முதல்வனும் நாமென லாமே. 20,
|
11
|