மலமில்லைமாசில்லை மானாபி மானம் குலமில்லை கொள்ளும் குணங்களு மில்லை நலமில்லை நந்தியை ஞானத்தி னாலே பலம்மன்னி அன்பில் பதித்துவைப் பார்க்கே.
|
1
|
ஒழிந்தேன் பிறவி உறவெனும் பாசம் கழிந்தேன் கடவுளும் நானும்ஒன் றானேன் அழிந்தாங் கினிவரும் ஆக்கமும் வேண்டன் செழுஞ்சார் புடைய சிவனைக்கண் டேனே.
|
2
|
ஆலைக் கரும்பும் அமுதும் அக் காரமும் சோலைத்தண் ணீரும் உடைத்தெங்கள் நாட்டிடைப் பீலிக்கண் ணன்ன வடிவுசெய் வாளொரு கோலப்பெண் ணாட்குக் குறையொன்று மில்லை.
|
3
|
ஆராலும் என்னை அமட்டஒண் ணாதினிச் சீரார் பிரன்வந்தென் சிந்தை புகுந்தனன் சீராடி அங்கே திரிவதல் லா(து)இனி யார்பாடுஞ் சாரா அறிவறிந் தேனே.
|
4
|
பிரிந்தேன் பிரமன் பிணித்ததோர் பாசம் தெரிந்தேன் சிவகதி செல்லும் நிலையை அரிந்தேன் வினையை அயில்மன வாளால் முரிந்தேன் புரத்தினை முந்துகின் றேனே.
|
5
|
Go to top |
ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும் ஒன்றுகண்டீர்உல குக்குயி ராவதும் நன்றுகண் டீர்இன் னமச்சிவா யப்பழம் தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே.
|
6
|
சந்திரன் பாம்பொடுஞ் சூடும் சடாதரன் வந்தென்னை ஆண்ட மணிவிளக் கானவன் அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள் சிந்தையின் மேவித் தியக்கறுத் தானே.
|
7
|
பண்டெங்கள் ஈசன் நெடுமால் பிரமனைக் கண்டங் கிருக்கும் கருக்கும் கருத்தறி வார்இல்லை விண்டங்கே தோன்றி வெறுமன மாடியின் துண்டங் கிருந்ததோர் தூறது வாமே.
|
8
|
அன்னையும் அத்தனும் அன்புற்ற தல்லது அன்னையும் அத்தனும் ஆர்அறி வார்என்னை? அன்னையும்அத்தனும் யானும் உடன் இருந்(து) அன்னையும் அத்தனும் யான்புரந் தேனே.
|
9
|
கொண்ட சுழியும் குலவரை உச்சியும் அண்டரும் அண்டத் தலைவரும் ஆதியும் எண்டிசை யோரும்வந் தென்கைத் தலத்துளே உண்டனர் நான்இனஇ உய்ந்தொழிந் தேனே.
|
10
|
Go to top |
நமன்வருன் ஞானவாள் கொண்டே எறிவன் சிவன்வரின் நான்உடன் போவது திண்ணம் பவம்வரும் வல்வினை பண்டே அறுத்தேன் தவம்வரும் சிந்தைக்குத் தான்எதி ராமே.
|
11
|
சித்தம் சிவமாய் மலம்மூன்றும் செற்றவர் சுத்த சிவமாவர் தோயார் மலபந்தம் கத்தும் சிலுகும் கலகமும் கைகாணார் சத்தம் பரவிந்து தானாம்என் றெண்ணியே.
|
12
|
நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம் வினைப்பற் றறுக்கும் விமலன் இருக்கும் வினைப்பற் றறுக்கும் விமலனைத் தேடி நினைக்கப் பெறில்அவன் நீளியன் ஆமே.
|
13
|
சிவபெரு மானென்று நானழைத் தேத்தத் தவபெரு மானென்று தான்வந்து நின்றான் அவபெரு மான்` என்னை ஆளுடை நாதன் பவபெரு மானைப் பணிந்துநின் றேனே.
|
14
|
பணிந்துநின் றேன்பர மாதி பதியைத் துணிந்துநின் றேன்இனி மற்றொன்றும் வேண்டன் அணிந்துநின் றேன்உடல் ஆதிப் பிரானைத் தணிந்துநின் றேன்சிவன் தன்மைகண் டேனே.
|
15
|
Go to top |
என்நெஞ்சம் ஈசன் இணையடி தான்சேர்ந்து முன்னஞ்செய் தேத்த முழுதும் பிறப்பறும் தன்னெஞ்சம் இல்லாத் தலைவன் தலைவிதி பின்னஞ்செய்(து) என்னைபக் பிணக்கறுத் தானே.
|
16
|
பிணக்கறுத் தான்பிணி மூப்பறுத் தெண்ணும் கணக்கறுத் தாண்டனன் காண்நந்தி என்னைப் பிணக்கறுத் தென்னுடன் முன்வந்த துன்பம் வணக்கலுற் றேன்சிவம் வந்தது தானே.
|
17
|
சிவன்வந்து தேவர் குழாமுடன் கூடப் பவம்வந் திடநின்ற பாசம் அறுத்திட்(டு) அவன்எந்தை ஆண்டருள் ஆதிப் பெருமான் அவன்வந்தென் உள்ளே அகப்பட்ட வாறே.
|
18
|
கரும்பும்செந் தேனும் கலந்ததோர் காயத்தில் அரும்பும் அக் கந்தமும் ஆகிய ஆனந்தம் விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின் கரும்பும்முன் கைத்தது தேனும் புளித்ததே.
|
19
|
உள்ளம் சரியாதி ஒட்டியே மீட்டென்பால் வள்ளல் அருத்தியே வைத்த வளம்பாடிச் செய்வன எல்லாம் சிவமாகக் காண்டலால் கைவளமின்றிக் கருக்கடந் தேனே.
|
20
|
Go to top |
மீண்டார் கமலத்துள் அங்கி மிகச்சென்று தூண்டா விளக்கின் தகளிநெய் சோர்தலும் பூண்டாள் ஒருத்தி புவனசூ டாமணி மாண்டான் ஒருவன்கை வந்தது தானே.
|
21
|
அன்புள் ளுருகி அழுவன் அரற்றுவன் என்பும் உருக இராப்பகல் ஏத்துவன் என்பொன் மணியை இறைவனை ஈசனைத் தின்பன் கடிப்பன் திருத்துவன் நானே. 28,
|
22
|