பல்லடைந்த வெண்டலையிற் பலிகொள்வ தன்றியும்போய் வில்லடைந்த புருவநல்லாண் மேனியில் வைத்தலென்னே சொல்லடைந்த தொன்மறையோ டங்கங் கலைகளெல்லாஞ் செல்லடைந்த செல்வர்வாழுஞ் சிரபுர மேயவனே.
|
1
|
கொல்லைமுல்லை நகையினாளோர் கூறதுவன் றியும்போய் அல்லல்வாழ்க்கைப் பலிகொண்டுண்ணு மாதரவென் னைகொலாஞ் சொல்லநீண்ட பெருமையாளர் தொல்கலை கற்றுவல்லார் செல்லநீண்ட செல்வமல்கு சிரபுர மேயவனே.
|
2
|
நீரடைந்த சடையின்மேலோர் நிகழ்மதி யன்றியும்போய் ஊரடைந்த வேறதேறி யுண்பலி கொள்வதென்னே காரடைந்த சோலைசூழ்ந்து காமரம் வண்டிசைப்பச் சீரடைந்த செல்வமோங்கு சிரபுர மேயவனே.
|
3
|
கையடைந்த மானினோடு காரர வன்றியும்போய் மெய்யடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்தலென்னே கையடைந்த களைகளாகச் செங்கழு நீர்மலர்கள் செய்யடைந்த வயல்கள்சூழ்ந்த சிரபுர மேயவனே.
|
4
|
புரமெரித்த பெற்றியோடும் போர்மத யானைதன்னை கரமெடுத்துத் தோலுரித்த காரண மாவதென்னே மரமுரித்த தோலுடுத்த மாதவர் தேவரோடுஞ் சிரமெடுத்த கைகள் கூப்புஞ் சிரபுர மேயவனே.
|
5
|
| Go to top |
கண்ணுமூன்று முடையதன்றிக் கையினில் வெண்மழுவும் பண்ணுமூன்று வீணையோடு பாம்புடன் வைத்தலென்னே எண்ணுமூன்று கனலுமோம்பி யெழுமையும் விழுமியராய்த் திண்ணமூன்று வேள்வியாளர் சிரபுர மேயவனே.
|
6
|
குறைபடாத வேட்கையோடு கோல்வளை யாளொருபாற் பொறைபடாத வின்பமோடு புணர்தரு மெய்ம்மையென்னே இறைபடாத மென்முலையார் மாளிகை மேலிருந்து சிறைபடாத பாடலோங்கு சிரபுர மேயவனே.
|
7
|
மலையெடுத்த வாளரக்க னஞ்சவொ ருவிரலால் நிலையெடுத்த கொள்கையானே நின்மல னேநினைவார் துலையெடுத்த சொற்பயில்வார் மேதகு வீதிதோறுஞ் சிலையெடுத்த தோளினானே சிரபுர மேயவனே.
|
8
|
மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது சாலுமஞ்சப் பண்ணிநீண்ட தத்துவ மேயதென்னே நாலுவேத மோதலார்கள் நந்துணை யென்றிறைஞ்சச் சேலுமேயுங் கழனிசூழ்ந்த சிரபுர மேயவனே.
|
9
|
புத்தரோடு சமணர்சொற்கள் புறனுரை யென்றிருக்கும் பத்தர்வந்து பணியவைத்த பான்மைய தென்னைகொலாம் மத்தயானை யுரியும்போர்த்து மங்கையொடும்முடனே சித்தர்வந்து பணியுஞ்செல்வச் சிரபுர மேயவனே.
|
10
|
| Go to top |
தெங்குநீண்ட சோலைசூழ்ந்த சிரபுர மேயவனை அங்கநீண்ட மறைகள்வல்ல வணிகொள்சம் பந்தனுரை பங்கநீங்கப் பாடவல்ல பத்தர்கள் பாரிதன்மேற் சங்கமோடு நீடிவாழ்வர் தன்மையி னாலவரே.
|
11
|