சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.075   திருநாவுக்கரசர்   தேவாரம்

பொது -தனித் திருநேரிசை - கொல்லி கனகாங்கி நவரோசு கனகாம்பரி ராகத்தில் திருமுறை அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=C8xKUbvG84M   Add audio link Add Audio

தொண்டனேன் பட்ட தென்னே தூயகா விரியி னன்னீர்
கொண்டிருக் கோதி யாட்டிக் குங்குமக் குழம்பு சாத்தி
இண்டைகொண் டேற நோக்கி யீசனை யெம்பி ரானைக்
கண்டனைக் கண்டி ராதே காலத்தைக் கழித்த வாறே.

1

பின்னிலேன் முன்னிலே னான் பிறப்பறுத் தருள்செய் வானே
என்னிலே னாயி னேனா னிளங்கதிர்ப் பயலைத் திங்கள்
சின்னிலா வெறிக்குஞ் சென்னிச் சிவபுரத் தமர ரேறே
நின்னலாற் களைக ணாரே நீறுசே ரகலத் தானே.

2

கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்துப் போக்கித்
தெள்ளியே னாகி நின்று தேடினே னாடிக் கண்டேன்
உள்குவா ருள்கிற் றெல்லா முடனிருந் தறிதி யென்று
வெள்கினேன் வெள்கி நானும் விலாவிறச் சிரித்திட் டேனே.

3

உடம்பெனு மனைய கத்து வுள்ளமே தகளி யாக
மடம்படு முணர்நெய் யட்டி யுயிரெனுந் திரிம யக்கி
இடம்படு ஞானத் தீயா லெரிகொள விருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை கழலடி காண லாமே.

4

வஞ்சப்பெண் ணரங்கு கோயில் வாளெயிற் றரவந் துஞ்சா
வஞ்சப்பெண் ணிருந்த சூழல் வான்றவிழ் மதியந் தோயும்
வஞ்சப்பெண் வாழ்க்கை யாளன் வாழ்வினை வாழ லுற்று
வஞ்சப்பெண் ணுறக்க மானேன் வஞ்சனே னென்செய் கேனே.

5
Go to top

உள்குவா ருள்ளத் தானை யுணர்வெனும் பெருமை யானை
உள்கினே னானுங் காண்பா னுருகினே னூறி யூறி
எள்கினே னெந்தை பெம்மா னிருதலை மின்னு கின்ற
கொள்ளிமே லெறும்பெ னுள்ள மெங்ஙனங் கூடு மாறே.

6

மோத்தையைக் கண்ட காக்கை போலவல் வினைகள் மொய்த்துன்
வார்த்தையைப் பேச வொட்டா மயக்கநான் மயங்கு கின்றேன்
சீத்தையைச் சிதம்பு தன்னைச் செடிகொணோய் வடிவொன் றில்லா
ஊத்தையைக் கழிக்கும் வண்ண முணர்வுதா வுலக மூர்த்தீ.

7

அங்கத்தை மண்ணுக் காக்கி யார்வத்தை யுனக்கே தந்து
பங்கத்தைப் போக மாற்றிப் பாவித்தேன் பரமா நின்னைச்
சங்கொத்த மேனிச் செல்வா சாதனா ணாயே னுன்னை
எங்குற்றா யென்ற போதா விங்குற்றே னென்கண் டாயே.

8

வெள்ளநீர்ச் சடைய னார்தாம் வினவுவார் போல வந்தென்
னுள்ளமே புகுந்து நின்றார்க் குறங்குநான் புடைகள் போந்து
கள்ளரோ புகுந்தீ ரென்னக் கலந்துதான் நோக்கிநக்கு
வெள்ளரோ மென்று நின்றார் விளங்கிளம் பிறைய னாரே.

9

பெருவிர லிறைதா னூன்றப் பிறையெயி றிலங்க வங்காந்
தருவரை யனைய தோளா னரக்கனன் றலறி வீழ்ந்தான்
இருவரு மொருவ னாய வுருவமங் குடைய வள்ளல்
திருவடி சுமந்து கொண்டு காண்கநான் றிரியு மாறே.

10
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: பொது -தனித் திருநேரிசை
4.075   திருநாவுக்கரசர்   தேவாரம்   தொண்டனேன் பட்டது என்னே! தூய
Tune - கொல்லி   (பொது -தனித் திருநேரிசை )
4.076   திருநாவுக்கரசர்   தேவாரம்   மருள் அவா மனத்தன் ஆகி
Tune - திருநேரிசை   (பொது -தனித் திருநேரிசை )
4.077   திருநாவுக்கரசர்   தேவாரம்   கடும்பகல் நட்டம் ஆடி, கையில்
Tune - திருநேரிசை   (பொது -தனித் திருநேரிசை )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sun, 01 Mar 2026 07:27:15 +0000