நாலிதழ் ஆறில் அவிர்ந்தது தொண்ணூறு நாலித ழானவை நாற்பத்து நாலுள பாலித ழானஅப் பங்கய மூலமாய்த் தானித ழாகித் தரித்திருந் தாளே.
|
1
|
தரித்திருந் தாள்அவள் தன்னொளி நோக்கி விரித்திருந் தாள்அவள் வேதப் பொருளை குறித்திருந் தாள்அவள் கூறிய ஐந்தும் மறித்திருந் தாள்அவள் மாதுநல் லாளே.
|
2
|
மாதுநல் லாளும் மணாளன் இருந்திடப் பாதிநல் லாளும் பகவனும் ஆனது சோதிநல் லாளைத் துணைப்பெய்ய வல்லிரேல் வேதனை தீர்தரும் வெள்ளடை யாமே.
|
3
|
வெள்ளடை யான்இரு மாமிகு மாமலர்க் கள்ளடை ஆரக் கமழ்குழ லார்மனம் மள்ளடை யானும் வகைத்திற மாய்நின்ற பெண்ணொரு பாகன் பிறவிபெண் ணாமே.
|
4
|
பெண்ணொரு பெண்ணைப் புணர்ந்திடும் பேதைமை பெண்ணிடை ஆணும் பிறந்து கிடந்தது பெண்ணிடை ஆணின் பிறப்பறிந் தீர்க்கின்ற பெண்ணுடை ஆணிடைப் பேச்சற்ற வாறே.
|
5
|
Go to top |
பேச்சற்ற நற்பொருள் காணும் பெருந்தகை மாச்சற்ற சோதி மனோன்மனி மங்கையாம் காச்சற்ற சோதி கடவு ளுடன்புணர்ந் தாச்சற்றெ னுட்புகுந் தாலிக்குந் தானே.
|
6
|
ஆலிக்குங் கன்னி அரிவை மனோன்மனி பாலித் துலகில் பரந்துபெண் ணாகும் வேலைத் தலைவியை வேத முதல்வியை ஓலித் தொருவன் உகந்துநின் றானே.
|
7
|
உகந்துநின் றான்நம்பி ஒண்ணுதற் கண்ணோ டுகந்துநின் றான்நம் முழைபுக நோக்கி உகந்துநின் றான்இவ் வுலகங்க ளெல்லாம் உகந்துநின் றான்அவ டன்றோ டொகுத்தே.
|
8
|
குத்து முலைச்சி குழைந்த மருங்கினள் துத்தி விரிந்த சுணங்கினள் தூமொழி புத்தகச் சீறடிப் பாவை புணர்வினைத் தொத்த கருத்தது சொல்லகி லேனே.
|
9
|
சொல்லவொண் ணாத சுடர்ப்பொதி மண்டலம் செல்லவொண் ணாது திகைத்தங் கிருப்பர்கள் வெல்லவொண் ணாத வினைத்தனி நாயகி மல்லவொண் ணாத மனோன்மனி தானே.
|
10
|
Go to top |
தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும் தானே சுடும்அங்கி ஞாயிறுந் திங்களும் தானே மழைபொழி தையலுமாய் நிற்கும் தானே வடவரை தண்கடற் கண்ணே.
|
11
|
கண்ணுடை யாளைக் கலந்தங் கிருந்தவர் மண்ணுடை யாரை மனித்தரிற் கூட்டொணா பண்ணுடை யார்கள் பதைப்பற் றிருந்தவர் விண்ணுடை யார்களை மேலுறக் கண்டே.
|
12
|
கண்டெண் டிசையும் கலந்து வருங்கன்னி பண்டெண் டிசையும் பராசத்தி யாய்நிற்கும் விண்டெண் டிசையும் விரைமலர் கைக்கொண்டு தொண்டெண் டிசையும் தொழநின்ற கன்னியே.
|
13
|
கன்னி யொளியென நின்றஇச் சந்திரன் மன்னி யிருக்கின்ற மாளிகை செந்நிறம் சென்னி யிருப்பிடம் சேர்பதி னாறுடன் பன்னி யிருப்பப் பராசத்தி யாமே.
|
14
|
பராசத்தி என்றென்று பல்வகை யாலும் தராசத்தி யான தலைப்பிர மாணி இராசத்தி யாமள ஆகமத் தாள்ஆங் குராசத்தி கோலம் பலஉணர்ந் தேனே.
|
15
|
Go to top |
உணர்ந்துல கேழையும் யோகினி சத்தி உணர்ந்துயி ராய்நிற்கும் உன்அதன் ஈசன் புணர்ந்தொரு காலத்துப் போகம(து) ஆதி இணைந்து பரமென் றிசைந்திது தானே.
|
16
|
இதுவப் பெருந்தகை எம்பெரு மானுள் பொதுவக் கலவியுள் போகமு மாகி மதுவக் குழலி மனோன்மனி மங்கை அதுவக் கலவியுள் ஆயுழி யோகமே.
|
17
|
யோகநற் சத்தி ஒளிபீடந் தானாகும் யோகநற் சத்தி ஒளிமுகம் தெற்காகும் யோகநற் சத்தி உதரம் நடுவாகும் யோகநற் சத்திதாள் உத்தரம் தேரே.
|
18
|
தேர்ந்தெழு மேலாம் சிவனங்கி யோடுற ஆர்ந்தெழு மாயையும் அந்தம தாய்நிற்கும் ஓர்ந்தெழு விந்துவும் நாதமும் ஓங்கிடக் கூர்ந்தெழு கின்றனள் கோல்வளை தானே.
|
19
|
தானான வாறெட்ட தாம்பரைக் குள்மிசை தானான வாறும்ஈ ரேழும் சமகலை தானான விந்து சகமே பரமெனும் தானாம் பரவா தனையெனத் தக்கதே.
|
20
|
Go to top |
தக்க பராவித்தை தான்இரு பானேழில் தக்கெழும் ஓர்ருத்தி ரஞ்சொல்லச் சொல்லவே மிக்கிடும் எண்சத்தி வெண்ணிற முக்கண்ணி தொக்கதை யோடுதொன் முத்திரை யாளே.
|
21
|
முத்திரை மூன்றின் முடிந்தமெய்ஞ் ஞானத்தள் தத்துவ மாய்அல்ல வாய சகலத்தள் வைத்த பராபர னாய பராபரை சத்தியும் ஆனந்த சத்தியும் கொங்கே.
|
22
|
கொங்கீன்ற கொம்பிற் குரும்பை குலாங்கன்னி பொங்கிய குங்குமத் தோளி பொருந்தினள் அங்குச பாசம்எனும் அகி லம்களி தங்கும் அவள்மனை தானறி வாயே.
|
23
|
வாயும் மனமும் கடந்த மனோன்மனி பேயும் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத் தாயும் மகளும்நல் தாரமும் ஆமே.
|
24
|
தாரமும் ஆகுவள் தத்துவ மாய்நிற்பள் காரண காரிய மாகும் கலப்பினள் பூரண விந்து பொதிந்த புராதனி பாரள வாந்திசை பத்துடை யாளே.
|
25
|
Go to top |
பத்து முகமுடை யாள்நம் பராசக்தி வைத்தனள் ஆறங்கம் நாலுடன் தான்வேதம் ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே நித்தமாய் நின்றாள் எம் நேரிழை கூறே.
|
26
|
கூறிய கன்னி குலாய பருவத்தள் சீறிய ளாய்உல கேழுந் திகழ்ந்தவள் ஆறிய நங்கை அமுத பயோதரி பேறுயி ராளி பிறிவறுத் தாளே.
|
27
|
பிறிவின்றி நின்ற பெருந்தகைப் பெண்பிள்ளை குறியொன்றி நின்றிடும் கோமளக் கொம்பு பொறியொன்றி நின்று புணர்ச்சிசெய் தாங்கே அறிவொன்றி நின்றனள் ஆருயி ருள்ளே.
|
28
|
உள்ளத்தி னுள்ளே உடனிருந் தைவர்தம் கள்ளத்தை நீக்கிக் கலந்துட னேபுல்கிக் கொள்ளத் தவநெறி கூடிய இன்பத்து வள்ளற் றலைவி மருட்டிப் புரிந்ததே.
|
29
|
புரிந்தருள் செய்கின்ற போகமா சத்தி இருந்தருள் செய்கின்ற இன்பம் அறியார் பொருந்தி யிருந்த புதல்வி பூவண்ணத் திருந்த இலக்கில் இனிதிருந் தாளே.
|
30
|
Go to top |
இருந்தனள் ஏந்திழை என்னுளம் மேவி திருந்து புணர்ச்சியில் தேர்ந்துணர்ந் துன்னி நிரந்தர மாகிய நீர்திசை ஓடு பொருந்த விலக்கில் புணர்ச்சி அதுவே.
|
31
|
அதுஇது என்னும் அவாவினை நீக்கித் துதியது செய்து சுழியுற நோக்கில் விதியது தன்னையும் வென்றிட லாகும் மதிமல ராள்சொன்ன மண்டலம் மூன்றே.
|
32
|
மூன்றுள மண்டலம் மோகினி சேர்விடம் ஏன்றுள ஈரா றெழுகலை உச்சியில் தோன்றும் இலக்குற லாகுதல் மாமாயை ஏன்றனள் ஏழிரண் டிந்துவொ டீறே.
|
33
|
இந்துவி னின்றெழும் நாதம் இரவிபோல் வந்துபின் நாக்கின் மதித்தெழும் கண்டத்தின் உந்திய சோதி இதயத் தெழும் ஒலி இந்துவின் மேலுற்ற ஈறது தானே.
|
34
|
ஈறது தான்முதல் எண்ணிரண் டாயிரம் மாறுதல் இன்றி மனோவச மாஎழில் தூறது செய்யும் சுகந்தச் சுழியது பேறது செய்து பிறந்திருந் தாளே.
|
35
|
Go to top |
இருந்தனள் ஏந்திழை ஈ(று) அதில் ஆகத் திருந்திய ஆனந்தம் செந்நெறி நண்ணிப் பொருந்து புவனங்கள் போற்றிசெய் தேத்தி வருந்த இருந்தனள் மங்கைநல் லாளே.
|
36
|
மங்கையும் மாரனுந் தம்மொடு கூடிநின் றங்குலி கூட்டி அகம்புறம் பார்த்தனர் கொங்கைநல் லாருங் குமாரர்கள் ஐவரும் தங்களின் மேவிச் சடங்குசெய் தார்களே.
|
37
|
சடங்கது செய்து தவம்புரி வார்கள் கடந்தனி னுள்ளே கருதுவ ராயின் தொடர்ந்தெழு சோதி துணைவழி ஏறி அடங்கிடும் அன்பின தாயிழை பாலே.
|
38
|
பாலித் திருக்கும் பனிமலர் ஆறினும் ஆலித் திருக்கும் அவற்றின் அகம்படி சீலத்தை நீக்கத் திகழ்ந்தெழு மந்திரம் மூலத்தின் மேலது முத்தது வாமே.
|
39
|
முத்து வதனத்தி முகந்தொறும் முக்கண்ணி சத்தி சதுரி சகளி சடாதரி பத்துக் கரத்தி பராபரன் பைந்தொடி வித்தகி என்னுள்ளம் மேவிநின் றாளே.
|
40
|
Go to top |
மேவிய மண்டலம் மூன்றுடன் கீழ்எரி தாவிய நற்பதத் தண்மதி அங்கதிர் மூவருங் கூடி முதல்வியாய் முன்னிற்பர் ஓவினும் மேலிடும் உள்ளொளி ஆமே.
|
41
|
உள்ளொளி மூவிரண் டோங்கிய அங்கங்கள் வெள்ளொளி அங்கியின் மேவி அவரொடும் கள்ளவிழ் கோதைக் கலந்துட னேநிற்கும் கொள்ளவி சித்திக் கொடியமு தாமே.
|
42
|
கொடிய திரேகை குருவுள் ளிருப்பப் படிவது வாருணைப் பைங்கழல் ஈசன் வடிவது ஆனந்தம் வந்து முறையே இடுதல் ஆறங்கம் ஏந்திழை யாளே.
|
43
|
ஏந்திழை யாரும் இறைவர்கள் மூவரும் காந்தாரம் ஆறும் கலைமுதல் ஈரெட்டும் மாந்தர் உளத்தியும் மந்திரர் ஆயமும் சார்ந்தனர் ஏத்த இருந்தனள் சத்தியே.
|
44
|
சத்தி என்பாள்ஒரு சாதகப் பெண்பிள்ளை முத்திக்கு நாயகி என்ப தறிகிலர் பத்தியைப் பாழில் உகுத்தஅப் பாவிகள் கத்திய நாய்போல் கதறுகின் றாரே.
|
45
|
Go to top |
ஆரே திருவின் திருவடி காண்பர்கள்! நேரேநின் றோதி நினையவும் வல்லார்க்குக் காரேய் குழலி கமல மலரன்ன சீரேயுஞ் சேவடி சிந்தைவைத் தாளே.
|
46
|
சிந்தையில் வைத்துச் சிராதியி லேவைத்து முந்தையில் வைத்துத்தம் மூலத்தி லேவைத்து நிந்தையில் வையா நினைவதி லேவைத்துச் சந்தையில் வைத்துச் சமாதிசெய் வீரே.
|
47
|
சமாதிசெய் வார்கட்குத் தான்முத லாகிச் சிவாதியில் ஆகும் சிலைநுத லாளை நவாதியில் ஆக நயந்தது ஓதில் உவாதி அவளுக் குறைவில தாமே.
|
48
|
உறைபதி தோறும் உறைமுறை மேவி நறைகமழ் கோதையை நாள்தொறும் நண்ணி மறையுட னேநிற்கும் மற்றுள்ள நான்கும் இறைதிளைப் போதிடில் எய்திட லாமே.
|
49
|
எய்திட லாகும் இருவினை யின்பயன் கொய்தளிர் மேனிக் குமரி குலாம்கன்னி மைதவழ் கண்ணிநன் மாதுரி கையொடு கைதவம் இன்றிக் கருத்துறு மாறே.
|
50
|
Go to top |
கருத்துறுங் காலம் கருது மனமும் திருத்தி யிருந்தவை சேரும் நிலத்து ஒருத்தியை உன்னி உணர்ந்திடு மேன்மேல் இருத்திடும் எண்குணம் எய்தலும் ஆமே.
|
51
|
ஆமைஒன் றேறி அகம்படி யான்என ஓமஎன் றோதிஎம் உள்ளொளி யாய்நிற்கும் தாம நறுங்குழல் தையலைக் கண்டபின் சோம நறுமலர் சூடிநின் றாளே.
|
52
|
சூடிடும் அங்குச பாசத்துளை வழி கூடும் இருவளை கோலக்கைக் குண்டிகை நாடும் இருபதம் நன்னெடு ருத்திரம் ஆடிடம் சீர்புனை ஆடக மாமே.
|
53
|
ஆம்அயன் மால் அரன்ஈசன் சதாசிவன் தாம்அடி சூடிநின் றெய்தினர் தம்பதம் காமனும் சாமன் இரவி கனலுடன் சோமனும் வந்தடி சூடநின் றாளே.
|
54
|
சூடும் இளம்பிறை சூலி கபாலினி நீடும் இளங்கொடி நின்மலி நேரிழை நாடி நடுவிடை ஞாளம் உருவநின் றாடும் அதன்வழி அண்ட முதல்வியே.
|
55
|
Go to top |
அண்ட முதலா அவனி பரியந்தம் கண்டதொன் றில்லைக் கனங்குழை யல்லது கண்டனும் கண்டியு மாகிய காரணம் குண்டிகை கோளிகை கண்டத னாலே.
|
56
|
ஆலம்உண் டான்அமு தாங்கவர் தம்பதம் சாலவந் தெய்தும் தவத்தின்பந் தான்வரும் கோலிவந் தெய்தும் குவிந்த பதவையே டேலவந் தீண்டி யிருந்தனள் மேலே.
|
57
|
மேலாம் அருந்தவம் மேன்மேலும் வந்தெய்தக் காலால் வருந்திக் கழிவர் கணத்திடை நாலாம் நளினம்நின் றேற்றிநட் டுச்சிதன் மேலாம் எழுத்தினல் ஆமத்தி னாளே.
|
58
|
ஆமத் தினிதிருந் தன்ன மயத்தினள் ஓமத்தி லேயும் ஒருத்தி பொருந்தினள் நாமம் நமசிவ யவ்வென் றிருப்பார்க்கு நேமத் துணைவி நிலாவிநின் றாளே.
|
59
|
நிலாமய மாகிய நீள்படி கத்தி சிலாமய மாகுஞ் செழுந்தர ளத்தி சுலாமய மாகும் சுரிகுழற் கோதை கலாமய மாகக் கலந்துநின் றாளே.
|
60
|
Go to top |
கலந்துநின் றாள்கன்னி காதல னோடும் கலந்துநின் றாள்உயிர்க் கற்பனை யெல்லாம் கலந்துநின் றாள்கலை ஞானங்கள் எல்லாம் கலந்துநின் றாள்கன்னி காலமு மாயே.
|
61
|
காலவி எங்கும் கருத்தும் அருத்தியும் கூலவி ஒன்றாகும் கூடல் இழைத்தனள் மாலினி மாகுலி மந்திர சண்டிகை பாலினி பாலவன் பாகம தாகுமே.
|
62
|
பாகம் பராசத்தி பைம்பொற் சடைமுடி ஏக இருதயம் ஈரைந்து திண்புயம் மோக முகம்ஐந்து முக்கண் முகந்தொறும் நாகம் உரித்து நடம்செய்யும் நாதற்கே.
|
63
|
நாதனும் நாலொன்ப தின்மருங் கூடிநின் றோதிடும் கூடங்கள் ஓரைந் துளஅவை வேதனும் ஈரொன் பதின்மரும் மேவிநின் றாதியும் அந்தமும் ஆகிநின் றாளே.
|
64
|
ஆகின்ற நாள்களில் ஐம்பத் தொருவர்கள் ஆகிநின் றார்களில் ஆருயி ராம்அவள் ஆகிநின் றாள்உட னாகிய சக்கரத் தாகிநின் றான்அவன் ஆயிழை பாடே.
|
65
|
Go to top |
ஆயிழை யாளொடும் ஆதிப் பரனிடம் ஆயதொ ரண்டவை ஆறும் இரண்டுள ஆய மனந்தொ றாறுமுக மாமவற் றேய குழலி இனிதுநின் றாளே.
|
66
|
நின்றனள் நேரிழை யோடுடன் நேர்பட இன்றென் அகம்படி ஏழும் உயிர்ப்பெய்தும் துன்றிய ஓரொன் பதின்மரும் சூழலுள் ஒன்றுயர் வோதி உணர்ந்துநின் றாளே.
|
67
|
உணர்ந்தெழு மந்திரம் ஓம்எனும் உள்ளே மணந்தெழு மாகதி யாகிய தாகும் கொணர்ந்தெழு சூதனும் சூதியும் கூடிக் கணந்தெழும் காணும்அக் காமுகை யாமே.
|
68
|
ஆமது அங்கியும் ஆதியும் ஈசனும் மாமது மண்டலம் மாருத மாதியும் ஏமது சீவன் சிகைஅங் கிருண்டிடக் கோமலர்க் கோதையும் கோதண்ட மாகுமே.
|
69
|
ஆகிய கோதண்டத் தாகும் மனோன்மனி ஆகிய ஐம்ப துடனே அடங்கிடும் ஆகும் பராபரை யோடப் பரைஅவள் ஆகும் அவள்ஐங் கருமத்தள் தானே.
|
70
|
Go to top |
தானிகழ் மோகினி சார்வான யோகி போன மயமுடை யார்அடி போற்றுவர் ஆனவர் ஆவியின் ஆகிய அச்சிவந் தானாம் பரசிவம் மேலது தானே.
|
71
|
தானந்தம் மேலே தருஞ்சிகை தன்னுடன் ஆனந்த மோகினி யாம்பொற் றிருவோடு மோனையில் வைத்து மொழிதரு கூறது ஆனவை ஓம்எனும் அவ்வுயிர் மார்க்கமே.
|
72
|
மார்க்கங்கள் ஈன்ற மனோன்மனி மங்கலி யார்க்கும் அறிய அரியாள் அவளாகும் வாக்கும் மனமும் மருவஒன் றாவிட்டு நோக்கும் பெருமைக்கு நுண்ணறி வாமே.
|
73
|
நுண்ணறி வாகும் நுழைபுலம் மாந்தர்க்கு பின்னறி வாகும் பிரானறி(வு) அத்தடம் செந்நெறி யாகும் சிவகதி சேர்வார்க்குத் தன்னெறி யாமது சன்மார்க்க மாமே.
|
74
|
சன்மார்க்க மாகச் சமைதரு மார்க்கமும் துன்மார்க்க மானவை யெல்லாம் துரந்திடும் நன்மார்க்கத் தேவரும் நன்னெறி யாவதும் சன்மார்க்கத் தேவியும் சத்திஎன் பாளே.
|
75
|
Go to top |
சத்தியும் நானும் சயம்புவும் அல்லது முத்தியை யாரும் முதல்அறிவா ரில்லை அத்திமேல் வித்திடின் அத்தி பழுத்தக்கால் மத்தியில் ஏற வழியது வாமே.
|
76
|
அதுஇது என்றவ மேகழி யாதே மதுவிரி பூங்குழல் மங்கைநல் லாளைப் பதிமது மேவிப் பணியவல் லார்க்கு விதிவழி தன்னையும் வென்றிட லாமே.
|
77
|
வென்றிட லாகும் விதிவழி தன்னையும் வென்றிட லாகும் வினைப்பெரும் பாசத்தை வென்றிட லாகும் விழைபுலன் றன்னையும் வென்றிடு மங்கைதன் மெய்யுணர் வோர்க்கே.
|
78
|
ஓரைம்ப தின்மருள் ஒன்றியே நின்றது பாரம் பரியத்து வந்த பரமது தாரங் குழலாளும் அப்பதி தானும்முன் சாரும் பதம்இது சத்திய மாமே.
|
79
|
சத்தியி னோடு சயம்புவும் நேர்படில் வித்தது இன்றியே எல்லாம் விளைந்தன அத்தகை யாகிய ஐம்பத் தொருவரும் சித்தது மேவித் திருந்திடு வாரே.
|
80
|
Go to top |
திருந்து சிவனும் சிலைநுத லாளும் பொருந்திய வானவர் போற்றிசெய் தேத்த அருந்திட அவ்விடம் ஆரமு தாக இருந்தனர் தானம் இளம்பிறை யென்றே.
|
81
|
என்றும் எழுகின்ற ஏரினை எய்தினோர் தன்றது வாகுவர் தாழ்குழ லாளொடு மன்றரு கங்கை மதியொடு மாதவர் துன்றிய தாரகை சோதிநின் றாளே.
|
82
|
நின்றனள் நேரிழை யாளொடு நேர்பட ஒன்றிய துள்ளொளி யாலே உணர்ந்தது சென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டிய துன்றிடும் ஞானங்கள் தோன்றிடுந் தானே.
|
83
|
தோன்றிடும் வேண்டுரு வாகிய தூய்நெறி ஈன்றிடும் ஆங்கவள் எய்திய பல்கலை மான்றரு கண்ணியும் மாரனும் வந்தெதிர் சான்றது வாகுவர் தாம்அவ ளாயுமே.
|
84
|
ஆயும் அறிவுங் கடந்(து) அணு வோரணி மாயம தாகி மதோமகி ஆயிடுஞ் சேய அரிவை சிவானந்த சுந்தரி நேயம் தாம்நெறி யாகிநின் றாளே.
|
85
|
Go to top |
நெறியது வாய்நின்ற நேரிழை யாளைப் பிறிவது செய்யாது பிஞ்ஞக னோடும் குறியது கூடிக் குறிக் கொண்டு நோக்கும் அறிவொடும் ஆங்கே அடங்கிட லாமே.
|
86
|
ஆமயன் மால்அரன் ஈசன்மேல் ஆம்கதி ஓமய மாகிய ஒன்பதும் ஒன்றிடத் தேமயன் நாளும் தெனாதெனா என்றிடும் மாமய மானது வந்தெய்த லாமே.
|
87
|
வந்தடி போற்றுவர் வானவர் தானவர் இந்து முதலாக எண்டிசை யோர்களும் கொந்தணி யுங்குழ லாளொடு கோனையும் வந்தனை செய்யும் வழிநவில் வீரே.
|
88
|
நவிற்றுநன் மந்திரம் நன்மலர் தூபம் கவற்றிய கந்தம் கவர்ந்தெரி தீபம் பயிற்றும் உலகினில் பார்ப்பதி பூசை அவிக்கொண்ட சோதிக்கோர் அர்ச்சனை யாமே.
|
89
|
தாங்கி உலகில் தரித்த பராபரன் ஓங்கிய காலத் தொருவன் உலப்பிலி பூங்கிளி தாங்கும் புரிகுழலாள் அன்று பாங்குடன் ஏற்பப் பராசத்தி போற்றே.
|
90
|
Go to top |
பொற்கொடி மாதர் புனைகழல் ஏத்துவர் அங்கொடி மாதுமை ஆர்வத் தலைமகள் நற்கொடி மாதை நயனங்கள் மூன்றுடை விற்கொடி மாதை விரும்பி விளங்கே.
|
91
|
விளங்கொளி யாய விரிசுடர் மாலை துளங்கு பராசத்தி தூங்கிருள் நீங்கக் களங்கொள் மணியுடன் காம வினோதம் உளங்கொள் இலம்பியம் ஒன்று தொடரே.
|
92
|
தொடங்கி உலகினில் சோதி மணாளன் அடங்கி யிருப்பதென் அன்பின் பெருமை விடங்கொள் பெருஞ்சடை மேல்வரு கங்கை ஒடுங்க உமையொடும் ஓருரு வாமே.
|
93
|
உருவம் பலஉயி ராவல்ல நந்தி தெருவம் புகுந்தமை தேர்வுற நாடின் புரிவளைக் கைச்சினம் பொன்னணி மாதை மருவி இறைவன் மகிழ்வன மாயமே.
|
94
|
மாயம் புணர்க்கும் வளர்சடை யானடித் தாயம் புணர்க்கும் சலதி அமலனைக் காயம் புணர்க்கும் கலவியுள் மாசத்தி ஆயம் புணர்க்கும்அவ் வியோனியு மாமே.
|
95
|
Go to top |
உணர்ந்தொழிந் தேன்அவ னாம்எங்கள் ஈசனைப் புணர்ந்தொழிந் தேன்புவ னாபதி யானை அணைந் தொழிந் தேன்எங்கள் ஆதிதன் பாதம் பிணைந்தொழிந் தேன்தன் அருள்பெற்ற வாறே.
|
96
|
பெற்றாள் பெருமை பெரிய மனோன்மனி நற்றாள் இறைவனே நற்பய னேஎன்பர் கற்றான் அறியும் கருத்தறி வார்கட்குப் பொற்றாள் உலகம் புகல்தனி யாமே.
|
97
|
தனிநா யகன்றனோ டென்நெஞ்சம் நாடி இனியாள் இருப்பிடம் ஏழுல கென்பர் பனியான் மலர்ந்தபைம் போதுகை ஏந்திக் கனியா நினைவதென் காரண அம்மையே.
|
98
|
அம்மனை அம்மை அரிவை மனோன்மனி செம்மனை செய்து திருமக ளாய்நிற்கும் இம்மனை செய்த இருநில மங்கையும் அம்மனை யாகி அமர்ந்துநின் றாளே.
|
99
|
அம்மையும் அத்தனும் அன்புற்ற தல்லது அம்மையும் அத்தனும் ஆரறிவார் என்னை அம்மையொ டத்தனும் யானும் உடனிருந் தம்மையொ டத்தனை யான்புரிந் தேனே. 9,
|
100
|
Go to top |