ஆடம் பரங்கொண் டடிசிலுண் பான்பயன் வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள் ஆடியும் பாடி அழுதும் அரற்றியும் தேடியும் காணீர் சிவனவன் தாள்களே.
|
1
|
ஞானமில் லார்வேடம் பூண்டிந்த நாட்டிடை ஈனம தேசெய் திரந்துண் டிருப்பினும் ஆன நலங்கெடும் அப்புவி ஆதலால் ஈனவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே.
|
2
|
இன்பமும் துன்பமும் நாட்டா ரிடத்துள நன்செயல் புன்செய லால்அந்த நாட்டிற்காம் என்ப இறைநாடி நாடோறும் நாட்டினில் மன்பதை செப்பம் செயின்வையம் வாழுமே.
|
3
|
இழிகுலத் தார்வேடம் பூண்பர்மேல் எய்த அழிகுலத் தார்வேடம் பூண்பர்தே வாகப் பழிகுலத் தாகிய பாழ்சண்ட ரானார் கழிகுலத் தோர்கள் களையப்பட் டோரே.
|
4
|
பொய்த்தவம் செய்வார் புகுவர் நரகத்துப் பொய்த்தவம் செய்தவர் புண்ணிய ராகாரேல் பொய்த்தவம் மெய்த்தவம் போகஉண் போக்கியம் சத்திய ஞானத்தால் தங்கும் தவங்களே.
|
5
|
| Go to top |
பொய்வேடம் பூண்பர் பொசித்தல் பயனாக மெய்வேடம் பூண்போர் மிகுபிச்சை கைக்கொள்வர் பொய்வேடம் மெய்வேடம் போலவே பூணினும் உய்வேட மாகும் உணர்ந்தறிந் தார்க்கே. 9,
|
6
|