| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
- Hide Meaning https://www.youtube.com/watch?v=h9ILwNZkrCo Add audio link
3.111
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருவீழிமிழலை - பழம்பஞ்சுரம் யாகப்பிரியா சங்கராபரணம் கலஹம்சா ராகத்தில் திருமுறை அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி
வேலின் நேர்தரு கண்ணினாள் உமை பங்கன்-அங்கணன்,
மிழலை மா நகர்
ஆல நீழலில் மேவினான்-அடிக்கு அன்பர் துன்பு இலரே.
1
வேல் போன்று கூர்மையும் , ஒளியுமுடைய கண்களை உடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவர் அழகிய கண்களையுடைய சிவபெருமான் . அவர் திருவீழிமிழலை என்னும் மாநகரில் வீற்றிருந்தருளுகின்றார் . ஆலமரநிழல் கீழிருந்து அறம்உரைத்தவர் . அப்பெருமானின் திருவடிகளை அன்புடன் வணங்குபவர்கட்குத் துன்பம் இல்லை .
விளங்கும் நால்மறை வல்ல வேதியர் மல்கு சீர் வளர்
மிழலையான் அடி
உளம் கொள்வார் தமை உளம்கொள் வார் வினை ஒல்லை
ஆசு அறுமே.
2
நான்கு வேதங்களையும் நன்கு கற்றுவல்ல அந்தணர்கள் வசிக்கின்ற , புகழ்மிக்க திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளை உள்ளத்தால் தியானிப்பவர்கள் சிவனடியார்கள் , அவ்வடியார்களை வழிபடும் அன்பர்களின் வினையான குற்றம் விரைவில் நீங்கும் .
விசையினோடு எழு பசையும் நஞ்சினை அசைவு செய்தவன், மிழலை மா நகர்
இசையும் ஈசனை நசையின் மேவினால், மிசை செயா,
வினையே.
3
வேகமாகப் பரவும் கொல்லும் தன்மையுடைய விடத்தை உண்டு சிவபெருமான் திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் . நஞ்சுண்டும் சாவாது புகழுடன் விளங்கும் அப்பெருமானை நாடி வணங்கினால் வினையானது துன்பம் செய்யாது .
வென்றி சேர் கொடி மூடு மா மதில் மிழலை மா நகர் மேவி நாள்தொறும்,
நின்ற ஆதிதன் அடி நினைப்பவர் துன்பம் ஒன்று இலரே.
4
சிவபெருமானின் வெற்றிக்கொடிகள் வானத்தை மூடும்படி விளங்கும் , உயர்ந்த மதில்களையுடையது திருவீழி மிழலை என்னும் மாநகர் . அப்பெருமாநகரினைவிரும்பி ஆங்கு வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளை நாள் தோறும் நினைத்து வழிபடுபவர்கட்குத் துன்பம் சிறிதும் இல்லை .
போதகம் தனை உரி செய்தோன், புயல் நேர் வரும் பொழில் மிழலை மா நகர்
ஆதரம் செய்த அடிகள், பாதம் அலால் ஒர் பற்று இலமே.
5
செருக்குடன் முனிவர்களால் கொடுவேள்வி யினின்றும் அனுப்பப்பட்ட மதங்கொண்ட யானையின் தோலை உரித்த சிவபெருமான் , மேகம்படியும் சோலைகளையுடைய திருவீழி மிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றார் . அப்பெருமானின் திருவடிகளைத்தவிர வேறு பற்று எதுவும் எமக்கு இல்லை .
Go to top
தக்கன் வேள்வியைச் சாடினார், மணி தொக்க மாளிகை மிழலை மேவிய
நக்கனார், அடி தொழுவர் மேல் வினை நாள்தொறும்
கெடுமே.
6
சிவபெருமான் , தக்கன் வேள்வியைத் தகர்த்தவர் . இரத்தினங்கள் பதிக்கப்பெற்ற மாளிகைகளையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் திகம்பரரான சிவபெருமானின் திருவடிகளை நாள்தோறும் தொழுபவர்கட்கு மேல்வினை உண்டாகாது .
போர் அணாவு முப்புரம் எரித்தவன், பொழில்கள் சூழ்தரு
மிழலை மா நகர்ச்
சேரும் ஈசனைச் சிந்தை செய்பவர் தீவினை கெடுமே.
7
போர்க்குணத்தை விரும்பி அதனை மேற்கொண்ட அசுரர்களின் முப்புரங்களை எரித்த சிவபெருமான் , சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் . அப்பெருமானைச் சிந்தித்து வழிபடும் அடியவர்களின் தீவினை அழிந்துவிடும் .
இரக்கம் இல்-தொழில் அரக்கனார் உடல் நெருக்கினான்,
மிகு மிழலையான், அடி
சிரக் கொள் பூ என ஒருக்கினார் புகழ் பரக்கும், நீள்
புவியே.
8
இரக்கம் அற்ற தொழில்புரியும் அரக்கனான இராவணனின் உடல் நெரியும்படி கயிலைமலையின் கீழ் அடர்த்த சிவபெருமான் திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந் தருளுகின்றார் . அப்பெருமானின் திருவடிக் கமலங்களை சிரசின்மேல் வைத்த மலர்போலக் கொண்டு , சிந்தையை ஒருமுகப்படுத்தி வழி படுபவர்கள் , உலகில் புகழுடன் விளங்குவர் .
துன்று பூமகன், பன்றி ஆனவன், ஒன்றும் ஓர்கிலா மிழலையான் அடி
சென்று பூம்புனல் நின்று தூவினார் நன்று சேர்பவரே.
9
இதழ் நெருங்கிய தாமரைப் பூவில் வீற்றிருக்கும் பிரமனும் , பன்றி உருவெடுத்த திருமாலும் உணர்தற்கரியவனான சிவபெருமான் , திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந் தருளுகின்றான் . அப்பெருமானின் திருவடிகளை , பூவும் , நீரும் கொண்டு பூசிப்பவர்கள் , முத்தி பெறுவர் .
புத்தர், கைச் சமண்பித்தர், பொய்க் குவை வைத்த வித்தகன் மிழலை மா நகர்
சித்தம் வைத்தவர் இத் தலத்தினுள் மெய்த் தவத்தவரே.
10
புத்தர்களும் , சமணர்களும் கூறும் பொய்க் குவியல்களாகிய உபதேசங்களைத் தோற்க வைத்த ஞானசொரூபரான சிவபெருமான் , திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந் தருளுகின்றார் . அப்பெருமான் மீது சித்தம் வைத்து வழிபடுபவர்கள் இப்பூவுலகில் மெய்யான தவத்தைப் புரிந்தவராவர் .
Go to top
சந்தம் ஆர் பொழில் மிழலை ஈசனைச் சண்பை
ஞானசம்பந்தன் வாய் நவில்
பந்தம் ஆர் தமிழ்பத்தும் வல்லவர் பத்தர் ஆகுவரே.
11
சந்தன மணம் கமழும் சோலைகளையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவ பெருமானைப் போற்றி , சண்பையில் அவதரித்த ஞானசம்பந்தர் அருளிய திருவருளால் பிணிக்கப்படும் இத்தமிழ்ப்பதிகத்தை ஓத வல்லவர்கள் பத்தர்கள் ஆவர் .
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருவீழிமிழலை
1.004
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மைம் மரு பூங்குழல் கற்றை
Tune - நட்டபாடை
(திருவீழிமிழலை பிரமபுரீசர் வீழியழகர் திருநிலைநாயகி, சுந்தரகுசாம்பிகை)
1.011
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சடை ஆர் புனல் உடையான்,
Tune - நட்டபாடை
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.020
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தட நிலவிய மலை நிறுவி,
Tune - நட்டபாடை
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.035
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அரை ஆர் விரி கோவண
Tune - தக்கராகம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.082
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இரும் பொன்மலை வில்லா, எரி
Tune - குறிஞ்சி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.092
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வாசி தீரவே, காசு நல்குவீர்! மாசு
Tune - குறிஞ்சி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.124
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர் மலர்
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.132
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து,
Tune - மேகராகக்குறிஞ்சி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.009
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கேள்வியர், நாள்தொறும் ஓது நல்வேதத்தர்
Tune - காந்தாரபஞ்சமம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.080
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சீர் மருவு தேசினொடு தேசம்
Tune - சாதாரி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.085
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மட்டு ஒளி விரிதரு மலர்
Tune - சாதாரி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.098
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வெண்மதி தவழ் மதில் மிழலை
Tune - சாதாரி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.111
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வேலின் நேர்தரு கண்ணினாள் உமை
Tune - பழம்பஞ்சுரம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.116
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திரு இயமகம் பதிகம், துன்று கொன்றை நம் சடையதே;
Tune - பழம்பஞ்சுரம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.119
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புள்ளித்தோல் ஆடை; பூண்பது நாகம்;
Tune - புறநீர்மை
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
4.064
திருநாவுக்கரசர்
தேவாரம்
பூதத்தின் படையர்; பாம்பின் பூணினர்;
Tune - திருநேரிசை
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
4.095
திருநாவுக்கரசர்
தேவாரம்
வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும்
Tune - திருவிருத்தம்
(திருவீழிமிழலை தோன்றாத்துணையீசுவரர் தோகையம்பிகையம்மை)
5.012
திருநாவுக்கரசர்
தேவாரம்
கரைந்து கை தொழுவாரையும் காதலன்;
Tune - திருக்குறுந்தொகை
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
5.013
திருநாவுக்கரசர்
தேவாரம்
என் பொனே! இமையோர் தொழு
Tune - திருக்குறுந்தொகை
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.050
திருநாவுக்கரசர்
தேவாரம்
போர் ஆனை ஈர் உரிவைப்
Tune - திருத்தாண்டகம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.051
திருநாவுக்கரசர்
தேவாரம்
கயிலாய மலை உள்ளார்; காரோணத்தார்;
Tune - திருத்தாண்டகம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.052
திருநாவுக்கரசர்
தேவாரம்
கண் அவன் காண்; கண்
Tune - திருத்தாண்டகம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.053
திருநாவுக்கரசர்
தேவாரம்
மான் ஏறு கரம் உடைய
Tune - திருத்தாண்டகம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
7.088
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
நம்பினார்க்கு அருள் செய்யும் அந்தணர்
Tune - சீகாமரம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகையம்மை)
9.005
சேந்தனார்
திருவிசைப்பா
சேந்தனார் - திருவீழிமிழலை
Tune -
(திருவீழிமிழலை )