| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
- Hide Meaning https://www.youtube.com/watch?v=In8Ve0q0FGA Add audio link
4.050
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருக்குறுக்கை வீரட்டம் - திருநேரிசை அருள்தரு ஞானாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு வீரட்டேசுவரர் திருவடிகள் போற்றி
நெடிய மால் பிரமனோடு நீர் எனும் பிலயம் கொள
அடியொடு முடியும் காணார்; அருச்சுனற்கு அம்பும் வில்லும்
துடி உடை வேடர் ஆகித் தூய மந்திரங்கள் சொல்லிக்
கொடி நெடுந் தேர் கொடுத்தார்-குறுக்கை வீரட்டனாரே.
1
உலகங்களை எல்லாம் ஊழி வெள்ளம் மூழ்க்கிய காலத்தில் , சிவபெருமான் தீப்பிழம்பாகத் தோன்ற , பிரமனும் , நெடியோனாகிய திருமாலும் முறையே அவருடைய முடிஅடிகளைக் காணா நிலையினராயினர் . அப்பெருமான் திருக்குறுக்கை வீரட்டத்து உறைபவராய்த் துடி என்னும் பறையை ஒலிக்கும் வேடர்வடிவினராய் அருச்சுனனுக்குத் தூயமந்திரங்களை உபதேசித்து அம்பும் வில்லும் கொடிகள் உயர்த்தப்படும் தேரும் வழங்கியுள்ளார் .
ஆத்தம் ஆம் அயனும், மாலும், அன்றி மற்று ஒழிந்த தேவர்
சோத்தம், எம்பெருமான்! என்று தொழுது தோத்திரங்கள் சொல்ல,
தீர்த்தம் ஆம் அட்டமீ முன் சீர் உடை ஏழு நாளும்
கூத்தராய் வீதி போந்தார்-குறுக்கை வீரட்டனாரே.
2
குருவிற்குத் தொண்டு செய்யும் பிரமனும் திருமாலும் ஏனைய தேவர்களும் ` எம்பெருமானே உனக்கு அஞ்சலி செய்கிறோம் ` என்று தொழுது தோத்திரங்களை மொழியக் குறுக்கை வீரட்டனார் பிரமோற்சவ வேள்வி நிகழும் அட்டமிக்கு முற்பட்ட ஏழு நாள்களும் கூத்தாடுபவராய்த் திருவீதி உலாவை நிகழ்த்தியவராவர் .
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருக்குறுக்கை வீரட்டம்
4.049
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஆதியில் பிரமனார் தாம் அர்ச்சித்தார்,
Tune - திருநேரிசை
(திருக்குறுக்கை வீரட்டம் வீரட்டேசுவரர் ஞானாம்பிகையம்மை)
4.050
திருநாவுக்கரசர்
தேவாரம்
நெடிய மால் பிரமனோடு நீர்
Tune - திருநேரிசை
(திருக்குறுக்கை வீரட்டம் வீரட்டேசுவரர் ஞானாம்பிகையம்மை)